Showing posts with label richard bach. Show all posts
Showing posts with label richard bach. Show all posts

Wednesday, October 8, 2008

அவனோடே ராவுகள்... 4

முந்தைய பதிவுகள் ...1 ...2 ...3



ONE
Author : Richard Bach


"இன்றைக்கு நிகழக்கூடிய ஒரு ஒரு சிறிய மாற்றம், முற்றிலும் மாறுபட்ட நாளையை நமக்கு அளிக்கக்கூடும். கடினமான பாதையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஆச்சரியகரமான பரிசுகள் காத்திருக்கும். ஆனால் அவை காலத்தினுள் மறைந்திருக்கும். நாம எடுக்கற கவனமற்ற, குருட்டுத்தனமான ஒவ்வொரு முடிவுக்கும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தில் ஒரு உத்தரவாதமும் கிடையாது"

புரியற மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கா? அப்பிடி இருந்தா அது ரிசர்ட் பாக்-க்கோட தப்பு இல்ல. மொழி பெயர்த்த என்னொட தப்பா இருக்கும்.

இப்ப ஒரு சின்ன கற்பனை. கடந்த காலத்துல இருந்த 'நாமும்' நிகழ் கால 'நாமும்' சந்திச்சா எப்பிடி இருக்கும்? இணயா இருக்கற இரு வேறு உலகங்கள்ல இருக்கற 'நாம' நேருக்கு நேர் பாத்துக்கிட்டா எப்பிடி இருக்கும்? காலத்துக்கு பின்னால நமக்காக என்ன காத்துக்கிட்டிருக்குன்னு 'இப்ப' தெரிஞ்சா, அத நாம எப்பிடி மாத்தவோ, ஏத்துக்கவோ நம்மளை தயார் பண்ணிப்போம்? (ஏண்டா இப்பிடி போட்டு கொழப்பற? இப்ப, அப்பறம்னு.... சரி... சரி... எவ்வளவு நாளைக்குத்தான் கொலை, கொள்ளை, சொத்து தகராறுன்னே படிச்சுக்கிட்டிருக்கறது?) ரிசர்ட் பாக்கும், மனைவி லெஸ்லியும் ஒரு வித்தியாசமான பயணத்துல அவுங்க போகாத பாதையில என்ன கத்துக்கறாங்க, அதுல நம்ம எல்லாருக்கும் பொதுவானதா என்ன இருக்குங்கறதுதான் இந்த புத்தகம். அவங்க போற அந்த பயணத்துல கற்பனையும், பயமுந்தான் உலகத்தை மீட்கவோ (அல்லது அழிக்கவோ) தேவையான கருவிகள். (என்ன... பாய பிறாண்ட ஆரம்பிச்சாச்சா?)

12B படம் பாத்துருப்பீங்களே.... கிட்டத்தட்ட அதுமாதிரியான 'கதை'தான் இதுவும். வாழ்க்கைல நாம எடுக்கற ஒவ்வொரு முடிவும் நம்மையும், நம்ம சுத்தி இருக்கற உலகத்தையும் எப்பிடி மாத்தி அமைக்குதுங்கறதை அலசற மாதிரியான புத்தகம். இன்னிக்கு காலைல பஸ்ல பக்கத்து உக்காந்தவங்களைப் பாத்து சிரிச்சது, பஸ் ஸ்டாண்டுல பப்ளிக் டாய்லட்டுக்குள்ள போறதா வேண்டாமான்னு 5 நிமிஷம் யோசிச்சுட்டு தாங்க முடியாம போகலாம்னு முடிவு பண்ணது, லிஃப்ட் கேட்டது ஒரு காலேஜ் பொண்ணுங்கிற ஒரே காரணத்துக்காக வண்டிய நிறுத்தினதுன்னு நம்மளோட ஒவ்வொரு முடிவும் நம்மோட அடுத்த சில விநாடிகளையோ அல்லது மீதி வாழ்க்கையையுமோ பல விதங்கள்ல பாதிக்கலாம். ரொம்பவே ஆச்சரியகரமான அல்லது எதிரிக்குங்கூட வரக்கூடாத விளைவுகளை ஏற்படுத்தலாம். அது மாதிரி சமயங்கள்ல வேற மாதிரி முடிவு எடுத்திருந்தா என்ன ஆகியிருக்கும்? ரிவர்ஸ் கியர் போட்டு அந்த விநாடிக்குப் போயிட்டு, அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தா.... போற வழில அங்க ஒரு முடிவு எடுக்கறோம்.... அது வேற மாதிரி இருந்தா.... இப்பிடி கற்பனை பண்ணிக்கிட்டே போனா? எப்பிடி சுத்தினாலும் மறுபடி எங்க வருவோம் தெரியுமா? என்ன ஒண்ணு தெளிவாத் தெரியும்? இவரோட மொதல் புத்தகம் "ஜொனாதன் லிவிங்ஸ்டன் - ஸீ கல்" ல சொன்ன அதே செய்திதான். அன்பு, மன்னிப்பு, அமைதி. இதுதான் எல்லாத்துக்கும் மருந்து.

இவரோட எல்லாப் புத்தகங்கள்லயும் (இன்னொரு புத்தகம் Illusions [காட்சிப் பிழைகள்]) 'பறத்தல்'ங்கறது ஒரு முக்கியமான அம்சமா இருக்கு. யோசிச்சுப் பாத்தா, ஒரு வித்தியாசமன கோணத்துல உலகத்தையும், நம்ம சுத்தி நடக்கறதையும், நம்மளை நாமே பாக்கறதுக்கும் பறக்கறதுங்கற உத்திய இவர் கையாளுகிறாருன்னு நெனைக்கத் தோணுது. இந்தப் புத்தகத்தை பொறுத்த வரைக்கும், பல ஐடியாக்களை அங்கங்க விதைச்சிருந்தாலும் சிலதுகள விவரமா தொடர்ந்து விளக்கல. அது ஒரு குறை மாதிரி தெரிஞ்சாலும், படிக்கறவருக்கு ஒரு சுதந்திரத்தைக் கொடுத்துட்டார்னு வெச்சுக்கலாம். படிக்க ரொம்ப சுவாரசியமா இருந்தாலும், அங்கங்க போர் அடிக்கற மாதிரியும் தோணுச்சு. சில பக்கங்களை அப்பிடியே வேகமா புரட்டிட்டு போயிட்டேன். ஆனா சில பத்திகள மூணு நாலு தடவ படிச்சாத்தான் புரியற மாதிரி இருந்தது. அது கூட என்னுடைய புரிதல்ல இருந்த குறைபாடா இருக்கலாம். அல்லது நெஜமாவே அது அவருக்கே குழப்பமில்லாம எழுத முடியாம இருக்கலாம். ஏன்னா, வேற ஒரு புத்தகத்துல அவரே சொல்லியிருக்காரு "என்னோட எண்ண ஓட்டங்களுடைய வேகத்துக்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை"ன்னு. அது ஒரு பக்கம் இருந்தாலும், இது மாதிரியான வித்தியாசமான, சிக்கலான கற்பனைகளை எழுத்தில் கொண்டு வரதுல சவால்கள் நிறையவே இருக்கு.

நேரம் கிடைக்கும்போது படிச்சுப் பாருங்க. முடிஞ்சா உங்க கருத்தை இந்த பதிவுல பின்னூட்டமாவோ அல்லது ஒரு தனி பதிவாகவோ போடுங்க. ஒவ்வொருத்தரோட வாசிப்பனுபவமும் ஒவ்வொரு மாதிரி. என்ன சொல்றீங்க?

சிறு விளக்கம்: நண்பர் பழமைபேசியோட பின்னூட்டத்த படிக்கும்போதும், நண்பர்கள் அப்துல்லா, விஜய் ஆனந்த் - இவங்களோட ச்சாட் பண்ணினபோதும், நான் (அல்லது இந்தப் புத்தகம்) சொல்ல வந்ததை வேற மாதிரியா புரிஞ்சுக்கிட்ட மாதிரி தோணுச்சு. அதுதான் இந்த விளக்கம்.

அதாவது, இதுல 'சம கால' நிகழ்வுகள் எதுவும் இல்ல. வாழ்க்கைல ஒரு கட்டத்துல ஒரு முடிவு எடுத்து முன்னால போறோம். அப்பிடி முன்னால போன பிறகு, அந்த குறிப்பிட்ட கட்டத்துல வேற மாதிரி முடிவு பண்ணியிருந்தா என்ன ஆகியிருக்கும், அதோட தாக்கம் தொடர்ந்து எப்பிடி இருந்திருக்கும்னு கற்பனை பண்றதுதான் ஐடியா. நடந்தத மாத்த முடியாது. ஆனா மாத்தினா எப்பிடி இருக்கும்னு யோசிச்சுப் பாக்கறது. அந்த படிப்பினைய எதிர்காலத்துல சில முடிவுகள் எடுக்கும்போது உபயோகப்படுத்திக்கறது. இதுதான் ஐடியா.

இப்ப, மேல சொன்ன உதாரணத்துல, பஸ்ல பக்கத்துல உக்காந்திருக்கறவரப் பாத்து சிரிக்கலாம், பேசலாம்னு முடிவு பண்றோம். ஒண்ணு, அவரும் ஒரு சக பதிவரா இருக்கலாம், நல்ல பெரிய பதவில (அப்துல்லா அண்ணன் மாதிரி), மோகனப்ரியா மாதிரி இன்னொரு ஹரிப்ரியாவுக்கு கேரம் விளையாட்டுல முன்னேற உதவி செய்யலாம். அது ஒரு உலகம். அல்லது அந்தாளு ஒரு தப்பிச்சு ஓடி வந்த கைதியா இருந்தா, பின்னால ஒடி வந்து புடிச்ச போலீசு (சும்மா ஒரு கற்பனைதான் ஹி..ஹி) நமக்கும் சேத்து லாடம் கட்டலாம். வாழ்க்கையே மாறிப்போகும். இது வேறு உலகம். ஆனா அந்த குறிப்பிட்ட கட்டத்துல இருந்து காலக்கணக்குப்படி பாத்தா ரெண்டும் "இணையா" இருக்கற உலகங்கள். இந்த "கால இணை"யத்தான் வேற வேற உலகங்களா கற்பனை பண்ணிக்கிறது. ஒண்ணு நாம ஒரிஜினலா முடிவெடுத்த நிஜ உலகம். இன்னொன்று வேற முடிவு எடுத்திருந்தான்னு யோசிச்சு பாக்கற "இணை"யான கற்பனை உலகம். (என்னது...பாய சுத்தமா பிறாண்டி சேமியா உப்புமான்னு நெனச்சு சாப்ட்டு முடிச்சாச்சா??)


இது ஒரு அடிப்படையான, சுலபமான உதாரணம். அப்பறம் உங்க கற்பனை.

Friday, September 5, 2008

அவனோடெ ராவுகள்...2

முந்தய பதிவு ...1

இப்பொ இங்க அறிமுகப்படுத்தப் போற புத்தகம் ரொம்பவே பிரபலமான புத்தகம். உங்கள்ல நிறய பேரு படிச்சுருப்பீங்கன்னு நெனக்கறேன். பெஸ்ட் செல்லர்ஸ் பட்டியல்ல மொதப் பத்துக்குள்ள எடம் புடிச்ச புத்தகம்.

Jonathan Livingston Seagull
Author : Richard Bach






ஜொனாதன் லிவிங்ஸ்டன் ஒரு கடல் நாரை. ஸீ கல் -க்கு தமிழ் இதுதான்னு நினைக்கறேன். தன் கூட்டத்துல இருக்கற மத்த பறவைகள விட ரொம்ப வித்தியாசமானது. மத்ததுகள்லாம் மீன்பிடி படகுக கரைக்கு வந்தொடனே பறந்தடிச்சுக்கிட்டுப் போய் சிந்துனது செதறுனதெல்லம் திங்கணும், வயித்த ரொப்பணும்னு இருக்கறப்போ, ஜொனாதன் மட்டும் வேற மாதிரி யோசிக்கும். இதுதான் வாழ்க்கையா? இதுக்காகத்தான் நாம பொறந்துருக்கமா? அப்பிடி இருக்கவே முடியாது... நமக்கு பறக்கற சக்தி இருக்கு... அதை நல்லா கத்துக்கணும்... உலகத்துலயே மிகச் சிறந்த, மிக வேகமா, மிகுந்த ஆளுமையோட பறக்க கூடிய கடல் நாரையாகணும்னு தீராத ஆசை. அதுக்காக ஒரு நாளைக்கு பல மணி நேரம் தன்னந் தனியா உயரப் போய் பறந்து பழகும். யோசிச்சு யோசிச்சு பறந்து பறந்து பழகி பழகி 215 கி.மீ. வேகத்துல பறக்கக் கத்துக்குது. ரெக்கய எப்பிடி மடக்கி வெச்சுக்கணும், எப்பொ விரிக்கணும், எவ்வளவு விரிக்கணும்கிறதெல்லாம் நிறய தடவ விழுந்து, அடிபட்டு, உயிரே போற மாதிரியான வலிகள உணர்ந்து, தன்னுடைய எல்லைகள தெரிஞ்சு கொஞ்சம் கொஞ்சமா விடா முயற்சியோட பழகி ஓரளவுக்கு தன்னுடைய கனவ நனவாக்குது. ஜொனாதன் இந்த மாதிரி இருக்கறது அதனுடைய அம்மா அப்பவுக்குக் கூட சம்மதமில்ல. அந்த்க் கூட்டத்தோட தல ஜொனாதன பஞ்சாயத்துல நிக்க வெச்சு 'விசாரணை' பண்ணி கூட்டத்தை விட்டு ஒதுக்கி வெச்சுடுது.

ஆனா ஜொனாதன் அதப் பத்தி கவலப்படாம தன்னுடைய பயிற்சிய வேற எடத்துக்குப் போய் தொடருது. ஒரு நாள் அங்க வேற சில கடல் நாரைகள ஜொனாதன விடவும் வேகமா அழகா பறந்துக்கிட்டுருக்கறத பாக்குது. அங்க சல்லிவன்கிற நாரைய சந்திக்குது. அப்பறம்தான் தெரியுது அங்க இருக்கற நாரைகளெல்லாம் ஜொனாதன மாதிரியே பறக்க ஆசைப்பட்டு கூட்டத்துல இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதுகன்னு. அங்க ஜொனாதன் ரொம்ப சீக்கிரமாவே இன்னும் நெறய கத்துக்குது.
ஒரு நாள் இப்பிடி பறந்துக்கிட்டிருக்கும்போது இன்னொரு மூத்த நாரை 'சியாங்'க சந்திக்குது. சியாங் மணிக்கு 300 கி.மீ வேகத்துல ரொம்ப சுலபமா பறக்கறதயும், கண நேரத்துல பல மைல்கள் தாண்டி போய் வரதயும் பாத்து ஆச்சரியப்பட்டுப் போய் அதுகிட்ட கத்துக்க ஆரம்பிக்குது. இது எப்பிடி சாத்தியம்னு ஜொனாதன் கேக்கறதுக்கு சியாங் சொல்லுது "நினைவோட வேகத்துல எந்த இடத்துக்கு வேணாலும் பறக்கறதுக்கு, மொதல்ல அந்த இடத்துக்கு நாம வந்து சேந்தாச்சுன்னு நம்பணும்". இது புரிய கொஞ்சம் கஷ்டமா இருக்கலாம். ஆனா நம்பிக்கை ஒரு முக்கியமான சக்தின்னு உணர வெக்குது.

இப்பிடி சியாங் கிட்ட நெறய கத்துக்கும்போது சியாங் சொல்ற மாதிரி அன்புதான் எல்லத்தையும் விட பெரியது, நெறய கத்துக்க கத்துக்க, மனமுதிர்ச்சி கிடச்சு, எல்லாத்தயும் விட அன்பு மேலோங்கி நிக்கும்னு புரிஞ்சுக்குது. ஒரு நாள் தன்னோட கூட்டத்துக்கு திரும்பி போய் தன்னுடைய அனுபவத்தையெல்லம் பகிர்ந்துக்கணும், மத்த நாரைகளுக்கும் இப்பிடி உயர வேகமா பறக்கறதையும், அன்போட வலிமையையும் புரிய வெக்கணும்னு தோணுது, சியாங்க் கிட்டயும், சல்லிவன் கிட்டயும் சொல்லீட்டு திரும்புது. ஆனா மத்த நாரைக ஜொனாதன கூட்டத்துல சேத்திக்காம மறுபடி வெரட்டி விட்டுடுதுக. ஆனாலும் ஜொனாதன் கவலப் படாம பறக்கறதுல ஆர்வமிருக்கற ஒரு சில நாரைகள கூட்டிக்கிட்டு போய் தான் கத்துக்கிட்டத எல்லாம் பொறுமயா சொல்லிக் குடுக்குது. வெறுமனே சாப்பிட்டு உயிர் வாழரத விட ஒரு ரெக்கயோட இந்த முனயிலிருந்து மறு ரெக்கயோட அந்த முன வரைக்கும் வெறும் உடம்பு இல்ல, எண்ணங்கள். ஒரு நாரைக்கு இருக்கிற அளவில்லாத சுதந்திரம் பறக்கறது. அத முழுமையா அதனுடைய எல்லை வரைக்கும் கத்துகணும். முடிவுல நம்முடைய திறமைகள் அளவற்றதுன்னு தெரிஞ்சு அதுல ஒரு புரிதல் வரும்போது அளவில்லாத அன்பும் மன்னிக்கிற தன்மையும், இயற்கையோட இணையில்லாத சக்திக்கு முன்னாடி நாம ஒண்ணுமேயில்லங்கற விழிப்புணர்வும் வரும்கிறது ஜொனாதனோட செய்தி. ஜொனாதன் அடுத்த பயணத்த தொடங்குது.

இதுல ஜொனாதன்கிறது வேற யாரும் இல்ல. நாமதான். நம்முடைய திறமையோட எல்லைகள் நமக்குத் தெரியுமா? யோசிச்சுப் பாருங்க. நம்ம வாழ்க்கைல வரப்போற சல்லிவன் யாரு? சியாங் யாரு? நாம அவங்கள சந்திச்சுட்டோமா இல்ல இனிமேத்தானா? கத்துக்க நாம தயாரா? மத்தவங்களுக்கு கத்துக் குடுக்கவும் தயாரா? நாம போக வேண்டிய எடத்துக்கு போய் சேந்தாச்சுன்னு நம்மால தீர்மானமா நெனைக்க முடியுமா? எவ்வளவு கேள்விக.

இந்த புத்தகம் வெறும் 20 பக்கந்தான். மிஞ்சிப் போனா 1 மணி நேரத்துல படிச்சு முடிச்சுரலாம். ஆனா சொல்லியிருக்கற செய்தி.......? அத புரிஞ்சுக்க ஒரு சென்மம் போதாது.

புத்தகத்தோட வரி வடிவத்த மட்டும் படிக்க இங்க க்ளிக் பண்ணுங்க. படிச்சுட்டு முடிஞ்சா இதுல ஒரு பின்னூட்டம் போடுங்க.