Thursday, April 11, 2013

விண்ணின் கொடை

காரிருள் சூழக் கார்மேகம் கண்டதும்
பேருவகை கொண்டதொரு காலம் - ஏருழவன்
கண்ணீர் உகுத்தும் கல்மனங் கொண்டே
விண்நீர் பொழியாக் கொண்மூ.


நல்லார் ஒருவர்க்கு ப் பெய்மழை ஆங்கே
அல்லார் அவர்க்கும் உண்டாம் - எல்லாரின்
எண்ணத்தில் மேன்மை இரு ப் பின் கிட்டுமே
மண்ணுக்கு விண்ணின் கொடை.


மரங்களை வெட்டியே வயிற்றை வளர்க்கும்
கரங்களை வெட்டிட வேண்டாமா? - மறக்காமல்
க ப் பந்தான் கேட்குமே தட் பமது குறைந்து
வெ ப் பந்தான் உயரும் உலகு.
 

0 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..: