Wednesday, March 13, 2013

சேமித்த கணங்கள்

பரந்து கிடக்கும்
பாலைவானத்தைப் போன்றது
உன் மௌனம்

விடாது ஆர்ப்பரிக்கும்
அலைகளைப் போன்றது
என் மௌனம்

மழைத் துளிக்குள் தெறிக்கும்
வானவில்லைப் போன்றது
உன் சிரிப்பு

குளத்து நீரில் பிரதி பலிக்கும்
நிலவின் களங்கம் போன்றது
என் சிரிப்பு

எனினும்
என்னிடம் என்ன இருக்கிறதென்று
என்னை வந்தடைந்தாய்?

என்னை 'அப்பா'வென அழைத்த
அந்த நொடியை
என் காலக் குடுவையில்
உறைய வைத்திருப்பதை
அறிவாயா?

நடிப்பு

வீட்டினில் பழக ஆரம் பித்து
பள்ளியில் பாங்காய் வளர்த்து
கல்லூரியில் கையாண்டு பார்த்து
காதலியிடமும் கோடி காட்டி
நேர்முகத் தேர்வில் முயன்று பார்த்து
அலுவலகத்திலும் செறிவு சேர்த்து....
பின்னர் தேடியலைந்து,
ஒரு வாய் ப் புக் கிடைத்த போது
நன்றாக வெளிக்காட்டிய பின்
கிடைத்த முதல் விமரிசனம்:
"நடி ப் பு இவன் ரத்தத்துலயே இருக்குய்யா!!"

ம்ம்ம்ம்....
நாம பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்....
நடிக்கறதுக்கும்,
இந்த கவிதையை விதைக்கறதுக்கும்....