சாகர் : சாகர் கினாரே... ரஃபி ஹம் கிஸி ஸே கம் நஹி : க்யா ஹுஆ மேரா வாதா... ரஃபி & ஆஷா யாதோங் கி பாராத் : ச்சுரா லியா ஹை தும் மேரே தில் கோ...
Monday, November 2, 2009
ரஃபியும் கிஷோரும்....
சாகர் : சாகர் கினாரே... ரஃபி ஹம் கிஸி ஸே கம் நஹி : க்யா ஹுஆ மேரா வாதா... ரஃபி & ஆஷா யாதோங் கி பாராத் : ச்சுரா லியா ஹை தும் மேரே தில் கோ...
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 10:00 AM 12 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா.. Links to this post
நெனப்புகள் : ஆஷா, கிஷோர், ரஃபி, ஹிந்தி பாடல்கள்
Friday, October 23, 2009
80:20
அதாவது, நமக்கு பெரும்பாலும் மகிழ்ச்சியையும் நிறைவையும் குடுக்கறது நம்ம வாழ்க்கைல நடக்கற சின்னச் சின்ன நிகழ்வுகள் அல்லது நாம செய்யற சின்னச் சின்ன செயல்கள்தான்னு சொல்றாங்க. உதாரணத்துக்கு நாம 12 மணி நேரம் வேலை செய்யறதுல கிடைக்கிற மகிழ்ச்சியை விட 1 அல்லது 2 மணி நேரம் ப்ளாக் படிக்கறதுல கிடைக்கிற மகிழ்ச்சி அதிகமா இருக்கலாம். குழந்தைக கூட விளையாடற 15 நிமிஷமோ, நண்பர்கள் கூட அரட்டை அடிக்கிற அரைமணி நேரமோ கூடுதல் மகிழ்ச்சி தரலாம். சுய முன்னேறத்துக்காக எடுக்கிற முயற்சிகள், நம்மளோட குறுகிய/நீண்ட கால லட்சியங்களை நோக்கி எடுக்கற சின்னச் சின்ன நடவடிக்கைகள் இதெல்லாம் கூட நமக்கு ஒரு நிறைவைத் தருது. அந்த மாதிரி நிறைவைத் தர நிகழ்வுகளை அடையாளம் கண்டு அதுல நோக்கத்தை செலுத்தி முன்னேற்றம், மகிழ்ச்சி, நிறைவு பெறலாம்ங்கறாங்க.
ஆனா சாதாரணமா இந்த விதி கொஞ்சம் எதிர்மறையாவே கையாளப்படுதோன்னு தோணுது. மேல சொன்ன உதாரணத்துல 80 பேர் உழைச்சா 20 பேர் ஓபியடிக்கற மாதிரி நினைக்கத் தோணும். ஆனா நிஜத்துல 20 பேர் "முடிவுகள் எடுக்கற" (decision making) இடத்துலயும், மீதி 80 பேர் அந்த முடிவுகளை செயல்படுத்தறதுலயும் ஈடுபட வேண்டியிருக்கு. அரசாங்க இயந்திரத்தை எடுத்துக்கிட்டா, திட்டம் போட்டு அதை அறிவிக்கறது மிகச்சில பேர்னாலும், அதை அமல் படுத்தி கடைக்கோடி வரைக்கும் கொண்டு சேர்க்க உழைக்கறவங்க ஏராளம் பேர். ஊர் கூடி தேர் இழுக்கற கதைதான். தேர் இழுக்கணும்னு முடிவு பண்றது 10 பேர் கொண்ட விழாக் கமிட்டி. ஆனா இழுக்கறது?

மேல உள்ள படத்துல பாத்தா 20% வினைதான் 80% பயனுக்கு காரணமா இருக்குன்னு சொல்லுது. மறுபடியும் அந்த அரசாங்க திட்டம் உதாரணத்தையே எடுத்துப்போம். 20 பேர் சேந்து உருவாக்கற திட்டத்தோட முக்கியப் பயன் (கவனிக்க... "திட்ட"த்தோட பயன்..) பலரைப் போய் அடையுது. அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தற 80 பேரோட உழைப்புனால அந்த திட்டப் பயன் கிடைச்சாலும், கூடவே உப பயன்களா ஒரு திட்டம், அதை செயல்படுத்தற வழிகள்னு சில கட்டமைப்புகளும் (infrastructure), வழிமுறைகளும் (processes) கிடைக்குது. இதை Organisational Assetsனு சொல்லலாம்.
மேல சொன்ன உதாரணம் ஒரு Ideal world நிகழ்வு மாதிரி தோணலாம். ஏன்னா இந்த மாதிரி அடிப்படை விஷயங்களைக் கூட நம்ம "மாண்புமிகு"க்களெல்லாம் கெடுத்து குட்டிச்சுவர் பண்ணி, 80% திட்ட ஒதுக்கீடு 20 பேர் பாக்கெட்ல ஒதுங்கிடுது. மீதி 20% அந்த பயன் உண்மையா யாருக்கெல்லாம் போய் சேரணுமோ, அவங்களுக்கு, இப்பிடி ஒரு திட்டம் இருக்குன்னு அறிவிச்சு விளம்பரம் பண்றதுலயே செலவாயிடுது. அப்பறம் திட்டமாவது பயனாவது? பாருங்க... இவுங்களைப் பத்தி பேச ஆரம்பிச்சாலே மறுபடி நெகடிவ் ரூட்ல போகுது.... :(
பாவம் பரேட்டோ.... இப்பிடி ஆகும்னு நினைச்சுப் பார்த்திருக்க மாட்டார். எதுவா இருந்தாலும் 80:20யை நாம கொஞ்சம் பாசிட்டிவ்வாவே பார்ப்போம்.
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 10:00 AM 14 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா.. Links to this post
Wednesday, October 21, 2009
Taking of Pelham 123 (2009) - சினிமா விமர்சனம்

Taking of Pelham 123 (2009)
John Travolta, Denzel Washington
முதல் பெட்டியை மட்டும் வெச்சுட்டு மத்ததையெல்லாம் கழட்டி விட்டுட்டு, இருக்கறவங்க பயணக் கைதிகள். 10 மில்லியன் டாலர் கேட்டு மிரட்டரான். அதுவும் 1 மணி நேரத்துக்குள்ள. மீட்பு நடவடிக்கைகளை செய்துக்கிட்டே பணத்துக்கும் ஏற்பாடு செய்யறாங்க. ரயிலுக்குள்ள இருக்கற ஒரு பையனோட லேப்டாப் ஆன்லயே இருக்கு. அதுல வீடியோ ச்சாட் வழியா உள்ள நடக்கறதெல்லாம் தெரிஞ்சாலும் ஒண்ணும் பிரயோசனம் இல்லை.

அந்த காலை கார்பர் அட்டெண்ட் பண்ண வேண்டி வந்ததால, கார்பர் கூடதான் பேசுவேன்னு ரைடர் அடம். அதுக்காக ரயில் ட்ரைவர் பலி. 'என்னடா நடக்குது இங்க?"ன்னு கேட்ட போலீஸ், "மொதல்ல என்னிய சுடு பாக்கலாம்"ன முன்னாள் மிலிட்டரி... எல்லாத்தையும் பொசுக் பொசுக்குன்னு சுடறாங்க. கார்பர் எதோ லஞ்சக் கேஸ்ல மாட்டியிருக்கான்னு தெரிஞ்சு அதைப் பத்தின உண்மைகளையும் கேக்கறான் ரைடர். இடைல ந்யூயார்க் மேயரையும் இழுத்து, அவரோட சில லீலைகளையும் சந்தி சிரிக்க வெச்சு, தான் யாரோ ஒரு மாடல் அழகி கூட ரிசார்டுக்கு போனதைப் பத்தி சொல்லி... என்னடா... சம்பந்தமில்லாம கண்டதையெல்லாம் நோண்டறானேன்னு யோசிச்சா.... பின்னால லிங்க் எல்லாம் புரியுது.

கடத்தலோட நோக்கம் அந்த 10மில்லியன் டாலர் கிடையாது. இந்த நாடகத்தை வெச்சு ஒரு பீதியைக் கிளப்பி ஸ்டாக் மர்கெட்டை சரிய வெச்சு, தங்கம் / கம்மாடிட்டி மார்கெட்டை ஏத்தி... அவன் போர்ட்ஃபோலியோ பல மடங்கு எங்கியோ போறதுக்கான திட்டம். எப்பிடியோ பணத்தையும் கொண்டு சேத்துடறாங்க. கடைசில என்னதான் ஆச்சு? க்ளைமேக்ஸ் கொஞ்சம் சுமார்தான்... என்னை பொறுத்தவரை. இருந்தாலும் படம் நல்லா விறுவிறுப்பா போறதால "ரைட்டு... "ன்னு விட்டுடலாம்.
டென்ஸல், ஜான்.... ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டி போட்டுக்கிட்டு நடிப்பு. அதுலயும் அந்த லஞ்சம் வாங்கறதை ஒத்துக்கற இடத்துல டென்ஸல்... க்ளாஸ். நெகோஷியெட்டரா வர அந்த அதிகாரியும் அருமை. மேயரை நம்ம ஊர் "மழைக்கு பள்ளிக்கூடத்துல ஒதுங்கின" எம்.எல்.ஏ மாதிரி அறிமுகம் பண்ணினாலும் ஆளு ஷார்ப். இந்த கடத்தல் விளையாட்டு எதுக்காகன்னு டக்குனு புரிஞ்சுகிடறாரு. படத்துல டயலாக்தான் கொஞ்சம் ஓவர்.... அந்த நாலெழுத்து வார்த்தை படற பாடு இருக்கே.... ஒவ்வொரு வாக்கியத்துலயும் ஜஸ்ட் 3 தடவைதான் வருது. மத்தபடி ஓகே. :)
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 10:00 AM 6 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா.. Links to this post
நெனப்புகள் : Taking of Pelham 123, சினிமா, விமர்சனம்
Monday, October 19, 2009
கிச்சடி 19.10.2009
நண்பர்கள் கிட்ட இதைப் பத்தி சூடான விவாதம் நடக்கும்போது ஒருத்தர் சொன்னார் "அது ஒரு கமிட்டி. சில நியதிகள் வெச்சுருக்காங்க. அதுல ஒபாமா பொருந்தி வரார்னு அவங்க நினைக்கிறாங்க. குடுக்கறாங்க.... எப்பிடி குடுக்கப் போச்சு? ஏன்... எதுக்கு... இதெல்லாம் விவாதிக்க முடியாது"ன்னு சொன்னார். இருக்கலாம். ஆனா "நோபல்" பரிசு என்ன "அண்ணா" விருதா? அதுக்குன்னு ஒரு மரியாதை இல்லையா? இது வரைக்கும் அதை வாங்கினவங்களையும், அவங்களோட சாதனைகளையும் வெச்சுத்தானே அந்த விருதுக்கான தகுதியை நம்மளை மாதிரி சாதாரணமானவங்க ஒப்பீடு செய்ய முடியும்? கோஃபி அன்னான், ஆங் சென் சூ கி மாதிரி தலைவர்களும் ஒபாமாவும் ஒண்ணா? ஒத்துக்க முடியல. இந்த மாதிரி பரிசு குடுத்துட்டா அதுக்கேத்த மாதிரி நடந்துடுவார்னு சில வாதங்கள் இருக்கு. அப்பிடிப் பாத்தா பேசாம "ஒசாமா"வுக்கு குடுத்துருக்கலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் : இவருக்கும் நோபல் பரிசு. ஆனா விஷயம் விருதைப் பத்தி இல்லை. அதுக்கப்பறம் அவர் குடுத்த பேட்டி பத்தி. "யார் யாரோ குப்பன் சுப்பன்லாம் எனக்கும் மெயில் அனுப்பறான். எரிச்சலா வருது"ன்னு சொல்லியிருக்கார். அய்யா, நீங்க ஒரு பெரிய விஞ்ஞானி. உங்களுக்கு இது போல விஷயமெல்லாம் தொந்தரவா இருக்கலாம். தகவல் தொடர்பு சல்லிசா இருக்கற இந்த நவீன உலகத்துல, இந்த மெயில் தொந்தரவுகளை தவிர்க்க எவ்வளவோ சுலபமான வழிகள் இருக்கு. அதுகளை பயன்படுத்தறதை விட்டுட்டு இந்த மாதிரி நிதானமில்லாம பேட்டி குடுக்கறது உங்களை மாதிரி பெரியவங்களுக்கு அழகா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரொமான் பொலான்ஸ்கி : சில விஷயங்கள் புரியவே மாட்டேங்குது. 1978ல இருந்து இந்த ஆள் மேல பாலியல் குற்றச்சாட்டுக்காக ஒரு சர்வதேச அரெஸ்ட் வாரெண்ட் இருக்கு. ஆனா பிடிக்க முடியலையாம். 3 வாரம் முந்தி ஸ்விஸ்ல ஸுரிக் ஃபிலிம் ஃபெஸ்டிவல்ல தலைவருக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கும் விழாவுக்கு வரும்போது கைது பண்ணிட்டாங்களாம். போன 30 வருஷமா ஃப்ரான்சுக்கும் போலந்துக்கும் போய் வந்துகிட்டு இருக்காரு. ஸ்விஸ்ல "ஸ்டாட்"ல 20 வருஷமா இவருக்கு ஒரு சொகுசு பங்களா இருக்காம். இத்தனை வருஷமா ஸ்விஸ் "ஷெங்கன்" அமைப்புல சேராம தனியா இருந்தபோது கூட இவரைப் பிடிக்க முடியலை. இப்ப தீடீர்னு முழிச்சுக்கிட்டு பிடிச்சுட்டாங்களாம். கேக்கறவன் கேனப்பயன்னா எருமை கூட ஏரொப்பிளேன் ஓட்டும்னு கிராமத்துல சொல்லுவாங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ஒரு விளம்பரம் : சைடு பார்ல நானும் ஒரு வேண்டுகோள் வெச்சு 3 மாசமாச்சு. ஒரு மெயில் கூட வரலை. விடறதாயில்லை. ரீடர்ல படிக்கறவங்களையும் அட்டாக் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். தேவையிருந்தா சொல்லுங்கப்பா.
"நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். மைசூரில் உள்ள என் வீடு தற்போது வாடகைக்கு விட உத்தேசம். உங்களுக்கோ அல்லது உங்கள் நண்பர்கள் / உறவினர்களுக்கு மைசூரில் வாடகைக்கு வீடு தேவையெனில் மேலதிக விவரங்களுக்கு என்னை மின்னஞ்சலிலோ (rmaheshk@gmail.com) தொலைபேசியிலோ (+65 81275347) தொடர்பு கொள்ளவும். நன்றி."
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 10:00 AM 25 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா.. Links to this post
Tuesday, September 22, 2009
தமிழ் சினிமாவில் மதவாதம், சாதீயம் !!
ராமராஜன் : அவர் படங்கள்ல பெரும்பாலும் ஆரஞ்சுக் கலர் சட்டை போட்டிருப்பார். சரி... கூட்டத்துல தொலைஞ்சுடாம இருக்கத்தான் போலன்னு அப்ப தோணுச்சு. இப்பத்தான் புரியுது அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு அப்பவே கன்னாபின்னான்னு ஆதரவு குடுத்துருக்காருன்னு. என்னா வில்லத்தனம்?
கவுண்டமணி : முறைமாமன் படத்துல பச்சை சட்டை போட்டு பாகிஸ்தானுக்கு விலை போயிட்டாரு. அய்யய்யோ... நம்ம இண்டெலிஜன்ஸ் பீரோ என்னதான் பண்ணிக்கிட்டுருந்தாங்க?
மாளவிகா : "கருப்புத்தான் எனக்குப் புடிச்ச கலரு..." வெறும் பாட்டு இல்லய்யா.... பெரியாரோட கொள்கைகளை பரப்பி பார்ப்பன எதிர்ப்பை தூண்டியிருக்காங்க. இது கூட புரியாம நீங்க எல்லாம் 'பே...'ன்னு படம் பாத்துருக்கீங்க. உங்களையெல்லாம்.....
சத்தியராஜ் : 'தங்கம்' படத்துல விவேகானந்தர் மாதிரி கெட்டப்புல வந்தாரு. ஆஹா.. கமலுக்கப்பறம் இவனுக்குத்தாண்டா எந்த வேஷமும் கச்சிதமா பொருந்துதுன்னு சிலாகிச்சீங்க.... போங்கய்யா.... உண்மைல அது இந்துத்வாவுக்கு சப்போர்ட்டு. இது கூட புரியலைன்னா நீங்க எல்லாம் என்னதான் படம் பாத்து பாழாப் போனீங்களோ?
ரஜினிகாந்த் : எல்லாப் படத்துலயும் கழுத்துல ருத்திராட்சத்தோட வந்து 'ஆண்டவன்... ஆண்டவன்..."னு சொன்னதெல்லாம் என்னங்கறீங்க? அப்பட்டமான இந்துத்வா. பாஷா படத்துல கூட ஒரு முஸ்லீம் பேரை வெச்சிக்கிட்டு மும்பை தாதாவா இருப்பாரு. தமிழ்நாட்டுக்கு வந்ததும் 'மாணிக்கம்'னு இந்து பேர் வெச்சு நல்லவனாயிடுவாரு. நோட் பண்ணீங்களா? இன்னொரு வாட்டி டிவிடியோ, .... தொ(ல்)லைக்காட்சில 1000வது முறையாவோ பாருங்க. அப்பவாவது புரியுதான்னு பாக்கலாம்.
கமலஹாசன் : அய்யய்யோ... பேர்லயே எவ்வளவு சிக்கல் பாருங்க? "கமல்ஹாசன்"னு சமஸ்கிருதப் பேரா இல்ல 'கமால் ஹசன்'ன்னு முஸ்லீம் பேரான்னு குழப்பறாரே.... பேர்லயே இவ்வளவு பேஜார்னா... படமெல்லாம்.... நினக்கவே குலை நடுங்குது... இப்பிடி ஒரு மதவாதியா?
இதெல்லாம் போக விக்ரம், ஆர்யா, ஷாம், நயன், அஸின்.... இவுங்களுக்கெல்லாம் அவங்க உண்மையான பேரைச் சொல்ல விடாம இந்து பேரா வெச்சு நம்மளையெல்லாம் முட்டாளா ஆக்கியிருக்காங்க.
அட... இதுதான் இப்பிடின்னா... பழைய படங்கள்ல வில்லனோட அல்லக்கைக பேரெல்லாம் பீட்டர், ஜான், ஸ்டெல்லா... .ஏங்க கிறிஸ்டியன் பேரா வெச்சாங்க? எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா? இப்பதான் சொல்லிட்டனே... இனிமேவாவது யோசிங்க.
அய்யய்யோ... தமிழ் படங்கள்ல எல்லாரும் எல்லாக் காலத்துலயும் மதவாதத்தையும் சாதீயத்தையும் சப்போர்ட் பண்ணி இருக்காங்களே... பதிவர்களாகிய நாம போட்டு கிழி கிழின்னு கிழிக்க வேண்டாம்? இன்னும் எவ்வளவோ சொல்லாங்க... அதுக்குள்ள நான் மறுபடியும் உறைஞ்................
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 10:46 PM 39 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா.. Links to this post
நெனப்புகள் : உன்னைப் போல் ஒருவன், சினிமா, மதவாதம்
Tuesday, September 15, 2009
முத்தமிழ் - எந்தத் திக்கில்?
உடுமலை அரசினர் மேல் நிலைப்பள்ளியில படிக்கும்போது, தி.சு.செந்தில் ஆறுமுகம்னு ஒரு ஆசிரியர் இருந்தாரு. இவர் திரு. சுந்தர ஓதுவா மூர்த்தி சுவாமிகளோட மகன். வருஷத்துக்கு ஒருமுறை இலக்கிய மன்றம் சார்புல "முத்தமிழ் விழா"ன்னு 9 நாளைக்கு நடத்துவாரு. இயல், இசை, நாடகம் ஒண்ணொண்ணுக்கும் 3 நாள். கூடவே வாரியார் சுவாமிகள், புலவர் கீரன், திருக்குறளார் முனுசாமி இவுங்களோட சொற்பொழிவுகளும் தினமும் இருக்கும். முனுசாமி அய்யாவோட சொல்லாடலை விட அவருடைய குரல் வளமும், ஏற்ற இறக்கங்களோட பேசுறதும் கேக்க ரொம்ப சுகமா இருக்கும். வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுன்னா மொதல் பத்து வரிசை சின்னப் பசங்களுக்குதான். கதை சொல்லிக்கிட்டே வரும்போது திடீர்னு எதாவது கேள்வி கேட்டு டக்குனு பதில் சொல்ற பையனுக்கோ பொண்ணுக்கோ கந்தரனுபூதி, கந்தரலங்காரம்னு ஒரு சின்ன புத்தகத்தை பரிசாக் குடுப்பாரு. ரொம்ப சுலபமான கேள்விகள்தான். சின்னப் பசங்க கிட்ட ஒரு ஈடுபாடு உண்டாக்கணும்கற நோக்கத்துல 3 மணி நேர சொற்பொழிவுக்குள்ள ஒரு 40 பரிசுகளாவது பட்டுவாடா ஆயிரும். நடு நடுவுல துணுக்குகள் சொல்றதும், அதுக்கு அவுரே குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கரதும் தனி அழகு. அவரோட "கைத்தல நிறைகனி....." உலகப் புகழ். தமிழ் மிமிக்ரி கலைஞர்கள் எல்லாம் முதல்ல கத்துகிற குரல் இவரோடதாத்தான் இருக்கும்.
அப்பறம் புலவர் கீரன். தன்னுடைய ஊனத்தைக் கூட பொருட்படுத்தாம 3 மணி நேரம் உக்காந்த இடத்துல கணீர்னு "உலகம் யாவையும்..." சொல்லி ராமாயணமோ, வில்லிபாரதமோ சொன்னார்னா, அந்தந்த பாத்திரங்களே நம்ம முன்னாடி நின்னு பேசர மாதிரி இருக்கும். திரும்ப திரும்ப படித்த, கேட்ட கதைகளை ஒவ்வொரு முறையும் வித்தியாசமான செய்திகளோடயும், சிந்தனைகளோடயும் கேக்கறவங்களை கட்டிப் போடற மாதிரி சொல்றது புலவர் கீரனுக்கு இணை அவர்தான். நடுவுல சொல்ற கிச்சு கிச்சு மூட்டற குட்டிக் கதைகளும் சுவாரசியமா இருக்கும்.

எல்லாத்துக்கும் மகுடம் வெச்சது மாதிரி இருப்பது R.S.மனோகரின் நாடகங்கள். எங்க பள்ளிக்குள்ள இருக்கற கலா மண்டபத்திலும், GVG கலையரங்கத்திலும் மனோகர் நாடகங்களை பார்ப்பதே ஒரு சுகானுபவம். "இலங்கேஸ்வரன்" நாடகத்தை முதல் முதல்ல "ட்ராமாஸ்கோப்" முறையில கலா மண்டபம் மாதிரியான சுமாரான இடத்துலயே அதை அட்டகாசமா நடத்தி, வழக்கத்துக்கு மாறா பள்ளியிலயே தொடர்ந்து 10 நாள் நடத்தி அசத்தியவர் அவர்.
இப்ப இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, 90களுக்குப் பிறகு இந்த மாதிரி நிகழ்ச்சிகள் ரொம்பவே குறைஞ்சுக்கிட்டே வந்து, இப்பல்லாம் நடக்கறதே இல்லன்னு கேள்விப்பட்டபோது ரொம்ப சங்கடமா இருந்தது. அதவிட சங்கடம் இதெல்லாம் நேரத்தை வீணாக்கற விஷயம்ங்கற மாதிரி பேசினது.
செந்தில் ஆறுமுகம் மாதிரியான ஆசிரியர்களும் இப்ப இல்ல. இதையெல்லாம் ரசிக்கறதுக்கு மக்களும் இல்ல. இப்ப மக்கள் பாத்து ரசிக்கற ஒரே மேடை 21 இன்ச் டி.வி பொட்டிதான். காலைல எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்கப் போகற வரைக்கும் மெகாத்தொடர்கள்ங்கற பேர்ல மக்களை மக்கிப் போக வெக்கற அரைவேக்காடு நிகழ்ச்சிகள்தான். எங்க பகல்ல பாக்காம விட்டுப் போச்சுன்ன என்ன பண்றதுன்னு ராத்திரி ஒரு ரௌண்ட் மொதல்லேருந்து திரும்பப் போட்டு வேற படுத்தறாங்க. இதயெல்லாம் பாக்க சகிக்காதுன்னுதான் மேல சொன்னவங்கள்லாம் மேலயே போய் சேந்துட்டாங்க. அங்க இருக்கறவங்க பாக்கியசாலிக.
மங்காத தமிழ்னு எட்டுத் திக்கும் கொட்டச் சொன்னான் ஒரு போக்கத்த கவி. நாம எந்தத் திக்குக்கும் போல. நம்ம வீட்டு சாக்கடையிலயே கொட்டீட்டு, பீட்சா தருவிச்சு சாப்டுட்டு, மினரல் வாட்டர் குடிச்சுட்டு குப்பறப் படுத்து குறட்டை விட்டாச்சு. அட போங்கப்பா.....
நேத்து உடுமலைல இருக்கற நண்பரோட பேசிக்கிடிருக்கும்போது இந்தப் பேச்சு மறுபடி வந்தது. ஞாபகங்கள் தீ மூட்டி மறுபடி ஞாபகங்கள் நீர் ஊத்தறதுக்குள்ள ஒரு மீள் பதிவு....
நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 11:47 PM 19 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா.. Links to this post
Sunday, September 6, 2009
Inglourious Basterds (2009) - சினிமா விமர்சனம்

நெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 11:39 PM 12 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா.. Links to this post
நெனப்புகள் : Inglourious Basterds, சினிமா, விமர்சனம்











