Wednesday, January 16, 2013

அவர்கள் காத்திருக்கிறார்கள்....

அவர்கள் காத்திருக்கிறார்கள்....
ஆள் பவர்களின் செவிகளும்
இதயங்களும் திறக்குமா என்று.
ஈரமுள்ள நெஞ்சம் கொண்ட அரசியலாரும்
உலகத்தில் உள்ளனரா என்று.
ஊனமில்லாத கொள்கைகள் இருக்காதா என்று.
எண்ணிய படியெல்லாம் இயங்கி, மக்களை
ஏமாளிகளாக்கும் காலம் கலையாதா என்று.
ஐநூறு நாட்கள்.....
ஒன்று பட்டு நின்று ஒற்றுமையோடு
ஓங்கிக் குரலெழு ப் பி, குறை தீர ஓர்
ஔடதம் கிடைக்காதா என்று.
எஃகு போன்றதோர் தலைவன் பின்னால்....
.......
.......
இடிந்தகரையில்
நம் பிக்கை இடியாமல்
அவர்கள் காத்திருக்கிறார்கள்.

0 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..: