Monday, June 15, 2009

மனத்திரை

பாரிஸ். மே 29, 2009:

"கவலை வேண்டாம் திரு. பாட்ரிக். இது ஒரு சிறிய பிரச்னைதான்.... சில வாரங்களில சரியாகி விடும். உங்கள் ஒத்துழைப்பு மட்டும் மிக முக்கியம். முடிந்தால் ஒரிரு மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு ஓய்வெடுக்கலாமே. யோசித்துப் பாருங்கள்... மற்றபடி பயப்படும்படியாக ஏதுமில்லை... மகிழ்ச்சியாக இருங்கள்...."

"நன்றி டாக்டர் கொன்சலெஸ். நீங்கள் இவ்வளவு சொன்னபிறகு எனக்கு இறுக்கம் கொஞ்சம் குறைந்த மாதிரி இருக்கிறது. விடுப்பு எடுப்பது பற்றி யோசிக்கிறேன். நன்றி.... "

"சரி.... இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் வாருங்கள். அதற்குள் நானும் டாக்டர்.லினர்ட் அப்பாயிண்ட்மென்ட் ஏற்பாடு செய்கிறேன்."

"நன்றி டாக்டர்... வருகிறேன்"

இரண்டு வாரங்களாகவே எனக்கு இந்த வினோதமான பிரச்னை. கனவுகள். இரவில் தூங்கும்போதுதான் என்றில்லை. எந்த நேரத்திலும்... எந்த இடத்திலும்... என்ன செய்து கொண்டிருக்கும்போதும்..... மூளைக்குள் கனவு போல காட்சிகள் ஓடுகின்றன. திடீர் திடீரென்று வந்து... தொந்திரவு அதிகம். பல சமயங்களில் ஓரிரு வினாடிகள் என் சுயகட்டுப்பாட்டை இழந்து மூளைக்குள் நிகழும் காட்சிகளில் நானும் ஒரு பாத்திரமாகி ஏதேதோ விநோதங்கள் நிகழ்ந்து சிலசமயம் பிறர் சிரிக்கும்படியாகவோ முகஞ்சுளிக்கும்படியாகவோ அல்லது அதிர்ச்சியடையும்படியாகவோ ஆகிவிடுகிறது.

அப்படித்தான்... போன மாதம் ஒரு நாள்... பாஸ்தா சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வேலைக்குக் கிளம்புவது போல காட்சிகள் வந்து பாஸ்தாவை இடுப்பில் பெல்ட் போல அணிய முயற்சித்து மனைவியும் மகனும் புரையேறும் அளவுக்கு சிரித்தார்கள். முதலில் ஏதோ விளையாட்டாகத் தோன்றினாலும் அடிக்கடி நிகழவே கொஞ்சம் கலக்கமானேன். வேலைக்கு இடையேயும் வர ஆரம்பிக்கவே பயந்துதான் போனேன். பிறகு என் மனைவி தன் நண்பர்களிடம் விசாரித்து.... இதோ இப்போது பாரிஸின் தலைசிறந்த "சைக்கொ அனலிஸ்ட்"டான டாக்டர் வின்சென்ட் கொன்சலெஸ்ஸை சந்தித்து விட்டு வருகிறேன்.

என் பிரச்னையை முழுவதும் கேட்டபின்னர், "சைக்கோ அனாலிசிஸ்" என்று சில "இங்க் ஸ்ப்லாஷ்" படங்களைக் காண்பித்து, அவற்றைப் பார்த்தது மனதிம் முதலில் எழும் நினைப்பை அப்படியே சொல்லச் சொன்னார். நானும் வண்ணத்துப்பூச்சி, கழுகு, மீன் பிடிக்கும் கிழவன்... என்று மனதில் தோன்றியவைகளைச் சொன்னேன். இன்னும் ஏதேதோ கேள்விகள் கேட்ட பிறகு இது ஒரு வகையான "பார்டிஸிபேடிவ் ஹலூசினேஷன்" என்றும் இன்னுமொரு டாக்டரிடமும் ஆலோசனை கேட்டுக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். பார்ப்போம்....

* * *

மனைவி காரை செலுத்திக் கொண்டிருந்தாள். "எனக்கு மட்டும் ஏன்?" என்ற வழக்கமான கேள்வியை மனதுக்குள்ளேயே உருட்டி புரட்டிக்கொண்டிருந்தேன். என் மனைவி "ஃப்ரெண்ட்ஸ்" தொடரின் சில நகைச்சுவைக் காட்சிகளை விவரித்து என்னை சிரிக்க வைக்க முயற்சித்து தோல்வியடைந்து மௌனமானாள்.

கார் ட்ரைவ்-இன் மெக்டொனல்டில் நிற்க நான் இரண்டு பர்கர்கள் ஆர்டர் செய்தேன். ஜன்னலுக்கு வெளியே இரண்டு கைகளையும் நீட்டி பர்கரை வாங்கினேன். ஏனோ அவன் பர்கரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான். நான் இன்னும் கெட்டியாகப் பிடித்து வாங்க முயற்சி செய்தேன்.

"ஏசுவே.... பார்கோமீட்டரை ஏன் பிடித்து இந்த இழு இழுக்கிறாய்? என்ன ஆச்சு உனக்கு?" மனைவி கத்த.... நான் சட்டென்று விழித்தேன். கைகளை உள்ளே இழுத்துக் கொண்டேன். பாழாய்ப்போன கனவு.....

"என்ன... மறுபடியும் கனவா? சரி. டாக்டர்தான் சரியாகி விடும் என்று சொல்லி விட்டாரே? அதையே நினைத்து கவலைப்படாதே......"

காரை விட்டு இறங்கி அசட்டுச் சிரிப்புடன் அவளுடன் கடைக்குள் நுழைந்தேன்.

* * *

மே 30, 2009.

மேலதிகாரியிடம் எவ்வளவோ மன்றாடியும் ஒரு பயனும் இல்லை. ஏற்கெனவே ஆட்கள் குறைவு என்பதாலும், அதுவும் இந்த இரண்டு வாரங்களுக்கான திட்டத்தை மாற்றவே முடியாது என்பதாலும் அதற்குப் பிறகு என் விருப்பம் போல விடுப்பு அளிப்பதாகச் சொல்லி விட்டார். சில மாதங்களுக்கு முன்பு, ஒரு முக்கிய பயிற்சிக்காக என்னைத் தேர்வு செய்து "துலூஸ்"க்கு 2 வாரங்கள் அனுப்பியதை வேறு நினைவு கூர்ந்து கொஞ்சம் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கினார். வேறு வழியில்லாமல் நாளைக் காலை வருவதாக ஒப்புக் கொண்டு விட்டேன். மனைவியின் தோழியின் ஆலோசனைப் படி அரை மணி நேரம் தியானத்தில் அமர்ந்ததில் மனது கொஞ்சம் லேசானது போல் தோன்றியது. எந்த கனவுத் தொந்திரவுகளும் இல்லாமல் நிம்மதியாக உறங்கினேன். மறு நாள் காலை சீருடைகளை அணிந்து கொண்டு வேலைக்குக் கிளம்பி விட்டேன்.

* * *

மே 31, 2009. இரவு 8 மணி.

போன் மணி அடித்தது.

"ஹலோ.... வியோலா பாட்ரிக் பேசுகிறேன்..."

"ஹலோ... திருமதி பாட்ரிக். நான் டாக்டர் வின்சென்ட். திரு. பாட்ரிக் இருக்கிறாரா? நாளை மாலை 5:30க்கு டாக்டர்.லினர்ட்டை சந்திக்க வேண்டும். உங்கள் கணவரிடம் சொல்லி விடுங்கள். நீங்களும் அவசியம் வர வேண்டும். "

"அவர் இப்போது பாரிஸில் இல்லை. நேற்று காலையில் வேலைக்குப் போனார். அவருக்கு இந்த வாரம் ரியோ-டி-ஜனெரோ வழித்தடம் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று இரவுதான் அவர் அங்கிருந்து கிளம்புகிறார். நாளைக் காலை வீட்டிற்கு வந்து விடுவார்."

"ஓ..."

"2 மாதங்களுக்கு முன்னால் துலூஸில் மேல்நிலை விமானப் பயிற்சிகள் முடித்த பின்னர் அவருக்கு இந்த நீண்ட தூர வழித்தடங்கள் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்..."

"நல்லது... நாளை மாலை 5:30க்கு சந்திப்போம்...."

* * *

பாரிஸ். ஜூன் 1, 2009. காலை 7:30.

வியோலா தான் வேலைக்குக் கிளம்புவதற்கு முன் ஓட்மீல் சாப்பிட்டுக் கொண்டே தொலைக்காட்சியில் செய்திகளைப் பார்த்துக் கொண்டு இருந்தாள். திரையில் "சற்று முன் வந்த செய்தி" என்று ஒளிர்ந்தது. கவனித்தாள். "நேற்று இரவு ரியோ டி ஜெனெரோவில் இருந்து பாரிஸுக்குக் கிளம்பிய ஏர் ஃப்ரான்ஸ் விமானம் இடையில் கட்டுப்பாட்டு மையங்களுடனான தன் தொடர்பை திடீரென இழந்தது. பிரேசில் மற்றும் ஃப்ரான்ஸ் விமானப்டை விமானங்கள் தொலைந்து போன விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்"


"ஏசுவே..... என் பாட்ரிக்......"

* * *


அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு... பிரேசில் நேரம் அதிகாலை 2:15 ....

நான் நீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். கொஞ்ச நேரம் முன்பு நான் குதிரைச் சவாரி செய்து கொண்டிருக்கும்போது எதிரே கருப்பு பூதம் போல திடீரென்று ஏதோ தோன்ற, குதிரையை நிறுத்தும் நோக்கில் நான் வலக்கையில் பிடித்திருந்த லகானை சடாரென்று பின்னால் இழுத்தது லேசாக நினைவிருக்கிறது.

ஆ..... நான் செலுத்திக் கொண்டிருந்த விமானம் என்ன ஆயிற்று? ஐயோ... 216 பயணிகள்.... என் நண்பர்கள் 12 பேர்.... என்ன ஆனார்கள்?? ஏசுவே...........

ஏர் ஃப்ரான்ஸ் பைலட் பாட்ரிக் கார்னியே அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கி.....


* * *

இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.



Wednesday, June 10, 2009

கிச்சடி 13.06.2009

போன வாரம் ஒரு சொந்த வேலையா அடியேன் சென்னை விஜயம். வந்த அன்னிக்கே நண்பர் ஆதிக்கு போன் பண்ணி அட்டெண்டன்ஸ் போட்டுட்டேன். ஆச்சச்சச்சச்சரியமா சாயுங்காலம் அவரே வீட்டுக்கு வரேன்னு சொன்னார். ஆஹா... இதை விட என்ன வேணும்? தலைவர் வந்தார். வீட்டுக்குள்ள 10 நிமிஷமும் பார்க்கிங்ல 1 மணி நேரமும் பேசினோம். அவரோட ரசனைகள், எண்ண ஓட்டங்கள்... எல்லாமே ஒருவித ஆச்சரியமா இருந்தது. எல்லாத்துக்கும் மேல அவரிடம் ரொம்ப பிடிச்சது நெகடிவ் விமர்சனங்களை எந்த விதமான வெறுப்பும் இல்லாம சொல்றது. Being critical without prejudice is an art....யாரோ சொன்னது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சிடிக்குள்ள ஒரு வேலையா சுத்திக்கிட்டுருந்தபோது அண்ணன் அப்துல்லாவையும் சந்திச்சு ஒரு சலாம் போட்டுட்டு வந்தேன். கவுண்டமணி மாதிரி "நாங்கள்லாம் பிசி.... பிசி மீன்ஸ் பிசி...."ன்னெல்லாம் அலப்பறை பண்ணாம வழக்கம் போல கலகலப்பான சந்திப்பு. கொஞ்சமே கொஞ்ச நேரம்னாலும் நிறைவா இருந்தது. அதுலயும் அவர் "ஆதி உங்க வீட்டுக்கே வந்தாரா? நீங்க பெரிய ஆளுதான்..."னு சொன்னபோது ஆதியை நெனைச்சு பெருமையா இருந்தது. If I only had a little humility, I'd be perfect - டெட் டர்னர் சொன்னது எவ்வளவு உண்மை !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பொருளாதாரம் சறுக்குதா சுருங்குதான்னு அனலிஸ்டுக மண்டையை ஒடச்சுக்கிட்டுருக்காங்க. ஆனா ஜவுளிக்கடைலயும், நகைக்கடைலயும் மக்கள் அலைமோதறதைப் பாத்தா தலை சுத்துது. ரியல் எஸ்டேட்காரங்க "எங்க போயிடுவீங்க? எங்க கிட்டத்தானே வந்தாகணும்..."ன்னு பல்லைக் குத்திக்கிட்டு சாவகாசமா உக்காந்திருக்காங்க. ஸ்பென்சர்லயும், சென்னை சென்டர்லயும் பார்க்கிங் கிடைக்க 1 மணி நேரம் ஆகுது. சத்யம், ஐ-நாக்ஸ் வீக் எண்ட்லயெல்லாம் ஹவுஸ் ஃபுல்லாம். பிஸ்ஸா டெலிவரி சுறுசுறுப்பா நடந்துக்கிட்டுதான் இருக்கு. மொபைல் நெட் ஒர்க் ட்ராஃபிக் அதிகமாயிருக்காம். புதுசா இன்னும் சில மொபைல் ஆபரேட்டர்க வேற.

எங்க ஏரியால இருக்கற ஒரு சிறுவர் இல்லத்துக்குப் போனபோது கேட்ட செய்தி: அந்த இல்லத்துக்கு ஐ.டி.ல வேலை செய்யற பலர் - குறிப்பா பேச்சிலர்ஸ் - கிட்ட இருந்து வர நன்கொடைகள் அறவே நின்னு போச்சாம். போன பத்திக்கும் இந்த செய்திக்கும் தொடர்பு இருக்கா? When you need to trim the corners, try not to choose left or right. Choose the wrong one.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை இன்டெர்நேஷனல் டெர்மினல். ராத்திரி 10 மணிக்கும் 2 மணிக்கும் நடுவுல கிட்டத்தட்ட ஒரு டஜன் டிபார்ச்சர்ஸ் ஏழெட்டு அரைவல்ஸ். பயணிகள் கூட்டம் அலை மோதுது. ரெண்டே ரெண்டு எக்ஸ்-ரே மெஷின்கதான். செக்-இன் க்யூ க்ளியர் ஆக 3 மணி நேரம் ஆகுது. "ஏர்போர்ட் மேனேஜர்" கிட்ட போய் புகார் பண்ணலாம்னு போனா அவர் மேஜை மேல காலைப் போட்டுக்கிட்டு கண்ணை மூடிக்கிட்டு இருக்காரு (யோசிக்கிறாராம் !!). இன்னும் ஏழெட்டு பேர் அரட்டை அடிச்சுக்கிட்டு இருக்காங்க. "போங்க சார்.... இவ்வளவு பேர் நிக்கிறாங்க இல்ல... எல்லாம் க்ளியர் ஆகும் போங்க.... ராத்திரி நேரம் ஸ்டாஃப் கம்மி. நீங்கதான் சீக்கிரம் வரணும்..."

இமிக்ரேஷன்ல க்யூ. செக்யூரிடி செக் க்யூ பயமுறுத்துது. லவுஞ் அக்சஸ் இருக்கறவங்க கூட நேரமாயிடும்னு பயந்து போகாததால லவுஞ்செல்லாம் ஈயாடுது. "டிபார்ச்சர் அனௌன்ஸ் பண்ணிட்டாங்க.... என்னை முன்னாடி அனுப்புங்க"ன்னு அவனவன் கதறரான். "அட... போய் க்யூல நில்லுங்க... போர்டிங் பாஸ் வாங்கிட்டீங்க இல்ல... உங்களை விட்டுட்டு போயிட மாட்டாங்க...." எல்லா ஃப்ளைட்டும் குறைஞ்சது 1/2 மணி நேரமாவது டிலே. ப்ளானிங்குக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது போல. Failing to plan is planning to fail.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2 பவர் 5


பெரும்பாலோருக்கு சலிப்பை ஏற்"படுத்தியுள்ள" இந்த சங்கிலித் தொடர் இடுகைக்கு அழைத்த ஆதிமூலகிருஷ்ணன் மற்றும் குசும்பனுக்கு ந(ர நர நர)ன்றி !!!


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

இந்தப் பேரு வந்ததில்லீங்க.... பெத்தவங்க வெச்சது :) ரொம்பப் பிடிக்கும் !!

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

மகள் பிறந்தபோது... ஆனந்தம் மிகுந்து அழுகைல முடிஞ்சுது !!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

இருங்க... அதைத்தான் ரொம்ப நேரமா முயற்சி பண்ணிட்டே இருக்கேன்... என்ன எழுதினேன்னே தெரியல... யாராவது மருந்துக்கடைக்காரங்க கிட்ட காமிச்சு தெரிஞ்சுக்கிட்டு வந்து சொல்றேன்...

4).பிடித்த மதிய உணவு என்ன?

மதியத்துக்கு உணவு கிடைச்சாலே போதும். பிடிச்சது பிடிக்காததெல்லாம் நீங்களாவது கேக்கறீங்களே.... அவ்வ்வ்வ்வ்வ்....

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நண்பர்களோடதானே.... கண்டிப்பா !!

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

உடுமலைக்கு பக்கத்துல இருக்கற திருமூர்த்தி அருவி கிட்ட கேட்டுப் பாருங்க... அதுவே "போதும்டா... போய்த் தொலைங்கடா..."ன்னு சொல்ற வரைக்கும் குளியலோ குளியல்தான்.


7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள் !!

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

டாய்... யாரைப் பாத்து என்ன கேள்வி? எட்றா வண்டியை...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?

கிட்ட வாங்க சொல்றேன்.... . . . . . . . . . அதான் !! யார் கிட்டயும் சொல்லிடாதீங்க. சரியா?

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

இதை எழுதக் கூப்ட்ட ஆதியும் குசும்பனும். இது ஒரு போர் தொடர்னு தெரிஞ்சும் கோத்து விட்டதுக்கு முதுகுல நாலு போட வேணாம்? :))))))))))))

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

எனக்கு கலர் ப்ளைன்ட்னஸ் !! இஃகி !! இஃகி !!

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

வீட்டுல "பாட்டு" கேக்கறதெல்லாம் சபைல வெச்சு சொல்லச் சொல்றீங்களே... நியாயமா?

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்குஆசை?

ரெஃபர் கொஸ்டீன் நம்பர் 11.

14.பிடித்த மணம்?

நண்பர்களின் திருமணம். நல்லா மூக்கு பிடிக்க மூணு வேளை சாப்பாடு கிடைச்சா விடுவமா?

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
அழைச்சதுக்கு அப்பறம் அவங்களுக்கு என்னைப் பிடிக்காம போயிட்டா என்ன செய்யறதுன்னு யோசனையா இருக்கு :(

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

அது ஒரு பெரிய குசும்புலம்பலுங்க !!

17. பிடித்த விளையாட்டு?

பல்லாங்குழி, பிள்ளையார் பந்து.

18.கண்ணாடி அணிபவரா?

மூக்குக் கண்ணாடின்னா - ஆமாம். முகம் பாக்கற கண்ணாடின்னா - இல்லை.

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?

"எலிப்பத்தாயம்" பாத்துருக்கீங்களா? அது மாதிரி படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

நண்பர் வீட்டுல நேத்து பாத்த (அவரோட மனைவி வரைஞ்ச) மயில் படம்.

21.பிடித்த பருவ காலம் எது?

அந்த மாதிரி புத்தகமெல்லாம் படிச்சதில்லீங்க. என்ன கண்றாவி கேள்வி இது?
சே !!

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

இது கேள்வி. LKG படிக்கற மகளோட ABCD புத்தகம்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ப்ளூ ஸ்க்ரினை எப்படி மாத்தறது? புரியலயே...

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

நாம விடற குறட்டை ; மத்தவங்க விடற குறட்டை.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

அடச்சே... இதுக்குதான் கிளம்பும்போது மீட்டர் ஸ்கேல் எடுத்துக்கிட்டு வரணும்கறது. இப்ப பாருங்க அவஸ்தைய....

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

இன்னும் அது வேறயா?

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நானெல்லாம் எப்பிடி பதிவு எழுத வந்தேன்?? எப்பிடி கவிதையெல்லாம் எழுதறேன்? அதுவும் ஆதிமூலகிருஷ்ணனே ஃபோன் போட்டு கூப்ட்டு பாராட்ற அளவுக்கு !!

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

இப்ப இந்த பதிவை எழுதிக்கிட்டுருக்கறது யாருங்கறீங்க? (அட... இப்ப வெளிய வந்து படிச்சுக்கிட்டுருக்கு பாருங்க !!)

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஆபீஸ் !!

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

எப்பிடி இருக்கக் கூடாதோ அப்பிடி இல்லாம இருக்கணும்னு ஆசை.

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?

நம்ம கற்பனைக்கு எல்லாம் ஒரு எல்லை உண்டுங்க.

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வாழ்வு- இந்த பதிவு மாதிரி மொக்கையா இல்லாம ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜாலியா இருக்கணும் !!


டிஸ்கி : 2, 6, 7, 30, 32 க்கு மட்டும் எப்பிடியோ மொக்கையா பதில் வந்துடுச்சு. மத்த பதிலெல்லாம் நிஜம்மா சீரியஸ் !!

Monday, June 8, 2009

கி.பி.2209ல் ஒரு நாள்...


கினோவா கிரகம். கிட்டத்தட்ட பூமியைப் போன்ற வளிமண்டலத்துடன் கூடிய ஆனால் ஈர்ப்பு சக்தி குறைவான கிரகம். கண்டுபிடிக்கப்பட்டு மனிதன் குடியேறி 20 பூமி ஆண்டுகள் ஆகியிருக்கும். அங்கங்கு சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் பெரிய பெரிய "ஆபோ" வகை பறக்கும் தட்டுகள். அவற்றில் ஒரு பறக்கும் தட்டில் அமைந்த "கினோவா செப்டகன்" என்ற ப்ளானடரி செக்யூரிடி சென்டரில் மிதந்தபடி வேலை செய்யும் டாப் க்ளாஸ் விஞ்ஞானிகள்.

மேலே இருந்த பெரிய திரையில் மூலையில் சில எண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. திரையின் நடுவில் இரண்டு புள்ளிகள் ஒன்றை ஒன்று நோக்கி மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. எல்லார் முகங்களிலும் பெரும் பதட்டம். பக்கத்து (ஒரு மில்லியன் ஒளி ஆண்டுகள் தூரம்தான்) கிரகமான "ஹூரா"விலிருந்து சில தீவிரவாதிகள் லேசர் போன்ற கதிர்வீச்சுகள் மூலம் செலுத்திய 'ரே பாம்' வருவதை அறிந்து அதை எதிர் கொள்ள 'கௌண்டர் ரே பாம்' செலுத்திவிட்டு பதட்டத்துடன் திரையை கவனித்துக் கொண்டிருந்தனர். ரே பாம் தாக்குதலை சமாளிக்க வேண்டிய அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும், அதை முறியடிக்கும் முயற்சி இதுவே முதல் முறை.

பல விஞ்ஞானிகள் பரபரப்பாக தங்களது டேப்லட்டுகளிலிருந்து சில கட்டளைகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். பூமி கிரகத்திற்கான அதிகார பூர்வ நிருபரான மேக்ஸ் செய்திகளை சேகரித்து அனுப்புவதற்கான ஏற்பாடுகளில் இருந்தான்.

திரையில் புள்ளிகள் இரண்டும் நெருங்கிக் கொண்டிருந்தன. சூழ்நிலையின் இறுக்கம் ஒவ்வொருவர் முகத்திலும் அப்பட்டமாக பிரதிபலித்தது. புள்ளிகள் இன்னும்... இன்னும்... இன்னும்... நெருங்ங்ங்ங்கி...... ஒரு பெரிய வெளிச்சம் உண்டாகி பின் இரண்டு புள்ளிகளும் மறைந்து போயின.

"ஹூரே....ஹூரே.... வீ டிட் இட் ! வீ ஆர் சேவ்ட் !! ரிமார்க்கபில் !! "

மிதந்தபடியே ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். மேக்ஸ் செய்தியை பூமிக்கு அனுப்பி விட்டு திரும்பினான். அலுவலகத்தின் மறு மூலையில் இந்த அமளியிலிருந்தெல்லாம் விலகி இரண்டு விஞ்ஞானிகள் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல கண்ணை மூடி மிதவைப் படுக்கையில் படுத்திருந்தனர். அருகே கினோவாவில் மிக மிக அரிதாகக் காணக் கிடைக்கும் கார்பைடு பென்சிலும், பாலிமர் தாள்களும். மேக்ஸ் அவர்கள் அருகே வந்தான்.

"இவ்வளவு பரபரப்பா இருக்கு... என்னவோ பயங்கர யோசனைல இருக்கீங்க ரெண்டு பேரும்? என்ன விஷயம்?"

நிமிர்ந்து பார்த்தனர் இருவரும். நெடு நேரம் யோசித்துக் கொண்டிருந்த களைப்பு இருவர் முகத்திலும்.

"ஒண்ணுமில்லைப்பா.... பூமி கிரகத்துல "ஆனந்த விகடன்" பத்திரிகைக்கு "கி.பி. 2409ல் ஒரு நாள்..."னு சயன்ஸ் ஃபிக்சன் கதை ஒண்ணு கேட்டிருக்காங்க. அதான் யோசிச்சிட்டுருக்கோம்" என்றனர் ப்ரொஃபசர் N.R.Sam என்ற "நர்சிம்"மும் டாக்டர் V.N.Poh என்ற "வெண்பூ"வும்.


நர்சிம் / வெண்பூ : கோச்சுக்கலைதானே? இஃகி ! இஃகி !!