tag:blogger.com,1999:blog-91042812900058412572024-02-19T16:26:46.537+08:00துக்ளக்எழுத நெனக்கறது...நெனச்சத எழுதறது...Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comBlogger144125tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-66128754790511290962013-04-11T13:02:00.002+08:002013-04-11T13:02:32.393+08:00விண்ணின் கொடை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="userContent">காரிருள் சூழக் கார்மேகம் கண்டதும்<br /> பேருவகை கொண்டதொரு காலம் - ஏருழவன்<br /> கண்ணீர் உகுத்தும் கல்மனங் கொண்டே<br /> விண்நீர் பொழியாக் கொண்மூ.</span><br />
<br />
<span class="userContent"><span class="userContent">நல்லார் ஒருவர்க்கு ப் பெய்மழை ஆங்கே<br /> அல்லார் அவர்க்கும் உண்டாம் - எல்லாரின் <br /> எண்ணத்தில் மேன்மை இரு ப் பின் கிட்டுமே <br /> மண்ணுக்கு விண்ணின் கொடை.</span></span><br />
<br />
<span class="userContent"><span class="userContent"><span class="userContent">மரங்களை வெட்டியே வயிற்றை வளர்க்கும் <br /> கரங்களை வெட்டிட வேண்டாமா? - மறக்காமல் <br /> க ப் பந்தான் கேட்குமே தட் பமது குறைந்து <br /> வெ ப் பந்தான் உயரும் உலகு.</span> </span> </span></div>
Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-77853999107515965012013-04-11T13:01:00.001+08:002013-04-11T13:01:04.410+08:00அவன்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
<span class="userContent">அது ஒரு அடர்ந்த காடு.
அந்தி சாயும் நேரம். பறவைகள் கூடு திரும்பிக் கொண்டிருந்தன. பல வகையான
பறவைகளின் கீச்சொலிகள் ஒரு இலக்கணத்திற்கு உட்படாத ரம்மியமான இசை விருந்து.
வீழ்ந்து கொண்டிருந்த கதிரவனின் கடைசிக் கணங்களின் கிரணங்கள்
மரக்கிளைகளினூடே இலைகளினூடே காற்றின் அசைவிற்கு ஏற்ப கண்ணாமூச்சி
விளையாட்டு. பாதையில் தனியாகச் செல்பவனுக்கு மயக்கத்தையும் பயத்தையும்
கலவையாக அனுபவிக்க நேரிடும். ஒளித் <span class="text_exposed_show">தேவன் இருள் தேவனிடம் உலகைக் காக்கும் பணியை ஒப்படைத்து கைகுலுக்கி விடைபெற்றுக் கொண்டிருந்தான்.<br /> <br />
அதோ.... அங்கே... யாரந்தத் துறவி? பார்க்க வெகு இளமையான தோற்றம். கண்களில்
அதீத அமைதி. சிறு புன்னகைக் கீற்று. இந்த இளம் வயதிலேயே துறவு மேற்கொள்ள
வேண்டிய அவசியம் என்னவோ? பெற்றோரா மனையாளா மக்களா.... அல்லது
பொருளாதாரமா.... துறவறத்துக்கு இவற்றில் ஏதோ ஒன்றுதானே காரணம்...
காலங்காலமாக.... இருக்கட்டும்.... இவனுக்காவது மன நிம்மதி
சித்திக்கட்டும்... அப்படி ஒன்று உண்மையிலேயே இவ்வுலகில் இருக்குமானால். <br /> <br /> நீண்ட பயணமாக இருந்திருக்க வேண்டும். களைப்புடன் அவன் அந்த பரந்த மரத்தினடியில் அமர்ந்தான்.<br /> <br /> ****************<br /> சில வருடங்களுக்கு முன்பு....<br /> <br /> "உண்மையாகவா சொல்கிறீர்கள்? அல்லது என்னுடன் விளையாடுகிறீர்களா?"<br /> <br />
"உன்னுடன் என்ன விளையாட்டு எனக்கு? இது பலப்பல நாட்களுக்கு முன்பு
பூவாய்ப் பூத்தபோதே உள்ளமர்ந்த வண்டு.... இப்போது பழமான பின்னரும் உள்ளே
குடைந்து கொண்டிருக்கிறது... வெளியேறும் தருணம் வந்து விட்டதாகவே
உணருகிறேன்..."<br /> <br /> "இல்லை.... இது நடவாத காரியம்.... என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. மாட்டேன். உங்கள் பெற்றோர் என்னைத்தானே குறை கூறுவர்?"<br /> <br />
"நீ அவர்களைப் புரிந்தது அவ்வளவுதானா? அவர்களுக்கு என் மீது வருத்தம்
இருக்கலாமே தவிர, உன்னிடம் குறை காணுவதற்கு எள்ளளவும் நியாயம் இல்லை....
கவலையே வேண்டாம்..."<br /> <br /> "என்னை சமாதானப்படுத்த வேண்டாம்....இதோ...
இந்தப் பிஞ்சின் முகத்தைப் பாருங்கள்.... இவனை விட்டுப் போக எப்படி உங்கள்
மனம் இடம் கொடுக்கிறது? அவ்வளவு கல் நெஞ்சமா?"<br /> <br /> "நெஞ்சம் கல் அல்ல
பேதையே.... கனிந்து வருகிறது... அந்தப் பேருவகையைச் சொல்ல வார்த்தை
இல்லை.... உன்னை விடவும் மேலாக அவன் என்னைப் புரிந்து கொள்வான்...."<br /> <br />
"இறுதியாகச் சொல்கிறேன்... நான் இதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன்....
இது பற்றி மேலே விவாதங்களோ விளக்கங்களோ கேட்க நான் தயாரில்லை..."<br /> <br /> "ஹஹஹ.... இது இறை ஆணை.... "<br /> <br /> "என் காதுகள் கேட்கும் சக்தியை இழந்து விட்டன.... உள்ளே போவோம் வாருங்கள்.... சயன நேரம்...."<br /> <br /> அன்று இரவு.... அவன்.... <br /> உறக்கம் துறந்து,<br /> உடையவளைத் துறந்து,<br /> உற்றாரையும் பெற்றோரையும் துறந்து,<br /> உலகைக் காண விழைந்து,<br /> உண்மையைக் காண விழைந்து,<br /> உள்ளத்தை விசாலமாகத் திறந்து வெளியேறினான்.<br /> கதவோடு சேர்த்து கனவுகளையும் மூடினான்.<br /> உண்மையை அறியும் வேட்கை உந்தித் தள்ள ஒரு புதிய பயணம் தொடங்கியது.<br /> <br /> *********************<br /> <br /> கிளையில் துளிர்த்திருந்த அந்த இலை மரத்திடம் கேட்டது.<br /> <br /> "அம்மா.... என்னை உதிர்த்து விடேன்..."<br /> <br /> "அதற்கு இன்னமும் காலமிருக்கிறது குழந்தாய்.... என்னோடு இரு... நீ இன்னமும் காண வேண்டியவை பல....."<br /> <br /> மௌனம் சூழ்ந்தது.<br /> <br /> கிளையில் அமர்ந்த பறவையிடம் அந்த இலை இறைஞ்சியது.<br /> <br /> "பறவையே.... ஒரு சிறு உதவி வேண்டும். என்னைக் கொத்தி உதிர்த்து விடுவாயா?"<br /> <br /> "அதற்கு இன்னமும் காலமிருக்கிறது குழந்தாய்.... உன் தாயுடனேயே இரு... நீ இன்னமும் காண வேண்டியவை பல....."<br /> <br /> மறுபடியும் மௌனம் சூழ்ந்தது.<br /> <br /> கிளையின் மீது ஊர்ந்து வந்த சிலந்தியிடம் இலை கெஞ்சியது. <br /> <br /> "சிலந்தியே.... தயவு கூர்ந்து என்னை இந்தக் கிளையிலிருந்து விடுவிப்பாயா?"<br /> <br /> "ஏன்? காரணம்?"<br /> <br />
"அதோ.... கீழே அமர்ந்திருக்கும் அந்த இளம் துறவியைப் பார்த்தாயா? அவர்
மடியில் சென்று சேர வேண்டும்.... நீயாவது என்னைப் புரிந்து கொள்.... உதவி
செய்...."<br /> <br /> புதிய நண்பன் உதவி செய்தான்.<br /> <br /> **************<br /> <br />
அந்த அபலைப் பெண் பலரிடம் விசாரித்து, தன் மகனுடன் அந்தக் காட்டில்
அலைந்து திரிந்து இறுதியில் அந்த மரத்தடியில் அவனைப் பார்த்து விட்டாள்.
கண்டு கொண்ட மகிழ்ச்சியில் கண்ணீர் பெருக ஓடி வந்து துறவியின் காலடியில்
விழுந்தாள்.<br /> <br /> கண் விழித்த துறவி காலடியில் கிடப்பது யாரென்று
அறிந்து கொண்டான். அமைதியான புன்னகையுடன், கருணை பொங்கும் கண்களுடன் கையில்
ஒரு இலையுடன் எழுந்து நின்றான்.<br /> <br /> "யசோதரா.... எழுந்திரு...."<br /> <br />
அவள் எழுந்து அவன் கண்களைப் பார்த்தாள். நீண்ட மௌனம். ஒரு வார்த்தை கூட
பேசப்படவில்லை. சில ஆண்டுகளின் பிரிவு கண நேரத்தில் நீர்த்துப் போனது.
மௌனமெனும் உன்னத மொழி புலன்களுக்கு உட்படாத பேருண்மையை போதித்துக்
கொண்டிருந்தது. பேசப்படாத வார்த்தைகளின் பொருள் இன்னும் சிறிது நேரத்தில்
சூழப் போகும் இருளை விடவும் அடர்த்தியாக இருந்தது.<br /> <br /> குழந்தை ராகுலன் அந்த இலையைத் தன் தலையில் அணிந்து கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான்.<br /> <br /> புத்தம் சரணம் கச்சாமி.</span></span></div>
</div>
Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-40726681878806655462013-03-13T22:13:00.000+08:002013-04-11T13:05:24.159+08:00சேமித்த கணங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பரந்து கிடக்கும் <br /> பாலைவானத்தைப் போன்றது <br />உன் மௌனம் <br /><br />விடாது ஆர்ப்பரிக்கும் <br />அலைகளைப் போன்றது <br />என் மௌனம் <br /><br />மழைத் துளிக்குள் தெறிக்கும்<br />வானவில்லைப் போன்றது<br />உன் சிரிப்பு<br /><br /> குளத்து நீரில் பிரதி பலிக்கும்<br />நிலவின் களங்கம் போன்றது<br />என் சிரிப்பு<br /><br />எனினும்<br />என்னிடம் என்ன இருக்கிறதென்று<br />என்னை வந்தடைந்தாய்?<br /><br />என்னை 'அப்பா'வென அழைத்த<br />அந்த நொடியை<br />என் காலக் குடுவையில்<br />உறைய வைத்திருப்பதை<br />அறிவாயா?</div>
Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-67229282174496990222013-03-13T22:10:00.001+08:002013-04-11T13:06:43.577+08:00நடிப்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
வீட்டினில் பழக ஆரம் பித்து <br /> பள்ளியில் பாங்காய் வளர்த்து <br />கல்லூரியில் கையாண்டு பார்த்து <br />காதலியிடமும் கோடி காட்டி <br />நேர்முகத் தேர்வில் முயன்று பார்த்து <br />அலுவலகத்திலும் செறிவு சேர்த்து....<br /> பின்னர் தேடியலைந்து, <br />ஒரு வாய் ப் புக் கிடைத்த போது<br />நன்றாக வெளிக்காட்டிய பின்<br />கிடைத்த முதல் விமரிசனம்:<br />"நடி ப் பு இவன் ரத்தத்துலயே இருக்குய்யா!!"<br /><br />
ம்ம்ம்ம்....<br />நாம பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்....<br />நடிக்கறதுக்கும்,<br />இந்த கவிதையை விதைக்கறதுக்கும்....</div>
Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-29231314428453009022013-02-19T14:20:00.001+08:002013-02-19T14:20:09.029+08:00அன்பு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="userContent">அன் பெனும் பெருநிலத்தில் <br /> விளையும் பயிரனைத்தும் <br /> அண்டத்தின் பசி தீர்க்கும். <br /> <br /> அன் பெனும் பெருமழையின் <br /> ஒவ்வொரு துளியிலும் <br /> உயிர்த்தெழுதல் நிகழும். <br /> <br /> அன் பெனும் பெருநெரு ப் பில் <br /> வேறு பாடுகளின் வேர்கள் <br /><span class="text_exposed_show"> திண்ணமாய் அழியும். <br /> <br /> அன் பெனும் பெருவளி<br /> செல்லும் வழியெங்கும் <br /> நேசத்தின் வாசம் வீசும். <br /> <br /> அன் பெனும் பெருவெளியில்<br /> அகிலமே சுயமிழக்க <br /> அகண்ட பெருஞ்சோதியாய்.....<br /> அன் பே சிவம் !! </span></span></div>
Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-22422468034236917232013-02-14T17:30:00.000+08:002013-04-11T13:14:22.895+08:00நினை ப் பதெல்லாம்............ <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div style="text-align: justify;">
"டேய் எங்க இருக்க இ ப் ப நீ?" <br /> "கோகுல்ஸ் ... ஜஸ்ட் இப்பதான்.... சுபீர் கூட ...."<br /> "மறுபடி ஆரம்பிச்சுட்டியா அவன் கூட .... டேய்... உன் தொப்பையைப் பாரு.... பெல்ட் கண்ணுக்குத் தெரியுதா?" <br /> "இல்லடா... நான் ஜஸ்ட் கோக்...."<br /> "படவா.... பிச்சுப் புடுவேன் பிச்சு.... இன்னும் 20 நிமிஷத்துல சர்னி ரோட் கோவில் வாசல்ல இருக்க... கெளம்புடா.... "<br /> "இப்பதாம்மா வந்தோம்...ஒரு சின்ன டிஸ்கஷன்... முடிச்சுட்டு வரேனே..." <br /> "மவனே செத்தடா நீ இன்னிக்கு.... இப்ப மணி ஆறரை ... ஆறு அம்பதுக்கு வர.... "<br /> "ஏய்ய்ய்ய்.... பத்து.... அடச் சே !! கட் பண்ணிட்டாளா மகராசி..." <br /> "கோன்? ராஷ்மி? தம்கி தேதி க்யா?" <br /> "நீட் டு லீவ் மேன்.... ஸீ யு லேடர்...."<br /> "அபே கதே.... பாக் ஜா கமீனே..."<br /><br /> அனூப் தலையை ஆட்டிக் கொண்டே பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம் பினான். <br /> ............................<br /> வொர்லி சிக்னல். மைக்கல் ஜேக்ஸன் நானூற்று முப்பத்தாறாவது முறையாக சந்திர நடை நடந்து பாடிக் கொண்டிருக்க, உதட்டில் சிகரெட்டுடன் ("க்விட்டிங் நெக்ஸ்ட் மன்த் டியர்") ஏசி குளிரில் ஸ்டியரிங்கில் தாளம் போட்ட படி மோசஸ். மோசஸ் பெரெரா. லேசான அலட்சியமும், தொழில் கர்வமும் இயல் பாகவே எப்போதும் கண்களில் ஒட்டிக்கொண்டிருக்கும். அனிதாவால் ("ஹனீடா...") கவரப்பட்டு, பெற்றொரிடமிருந்து அவளைக் கவர்ந்து வந்த பின் அந்த மந்தகாசமும் சேர்ந்து கொண்டதில் கொஞ்சம் பளபளப் பு கூடவே. <br /><br /> பச்சை விழுந்த பின்னரும் வாகன ஓட்டிகளின் பொறுமையின்மையால் தள்ளு முள்ளு. "திஸ் சிடி இஸ் ராட்டிங்.... இடியட்ஸ்....". ஸ்டியரிங்கை ஓங்கிக் குத்தியதில் கை வலித்தது. நான்கெழுத்து வார்த்தையை நாற் பது முறை சொன்னான். இன்னும் சாந்தாக்ரூஸ் போக குறைந்தது 20 நிமிடங்கள் பிடிக்கும். ப்ரீஃபிங் முடிந்து தயாராவதற்குள் மிக்லானியிடம் பேசி விட திட்டமிட்டது தப்பி விடுமோ என்ற பதட்டம் முகத்தில் லேசாக படர ஆரம் பித்தது. <br /><br /> ஒருவழியாக வந்து சேர்ந்து கே ப்டன்னுடனான டிஸ்கஷன் முடிந்ததும் கா ஃ பியுடன் ஒரு சிகரெட் புகைத்த பின்னரே கொஞ்சம் நிம்மதி. மிக்லானியை அழைக்க வேண்டும். <br /><br /> "எஸ்.... மிஸ்டர் பெரெரா.... ஹவ் இஸ் த டே?"<br /> "வெரி வார்ம். ஓகே. நான் சொன்னது என்னாச்சு?"<br /> "அன்னிக்கே சொன்னேன். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.... இது டம் ப் பண்ற நேரமில்ல.... பாத்திருப்பீங்களே இந்த வாரம்.... 31 பாயிண்ட்ஸ் சார்.... இன்னும் 2 மாசத்துக்கு ரைடிங் நார்த்...."<br /> "மிக்லானி.... எனக்கு பாடம் எடுக்க வேண்டாம்.... வி ஆர் ஜஸ்ட் கெட்டிங் அவுட்... காட் இட்?"<br /> "மிஸ்டர் பெரெரா.... நீங்க இவ்வளவு அலட்சியமாக இருக்கறது ஆச்சரியமா இருக்கு... என்ன ப்ளான் சார்?"<br /> "3 மணிக்கு டாக்கெட் எம்ப்டியா இருக்கணும்.... நோ மோர் டிலேஸ்.."<br /> "சார்.... இது ஒரு தப்பான... "<br /> " பை..." <br /><br /> ஒரு பைலட் எப்படி இவ்வளவு துல்லியமாக மார்கெட்டை படிக்கிறான் என்று மிக்லானி பல முறை வியந்திருந்தாலும் இது கொஞ்சம் ஏமாற்றமாகவும் ஆயாசமாகவும் இருந்தது. இருக்காதா பின்னே? வாங்கிய கமிஷனில் சூரத்தில் துணிக்கடையை ஆரம்பித்தாகி விட்டது. அடுத்தடுத்து மேலே போக வேண்டாமா? ம்ம்ம்ம்ம்..... <br /> ..........................<br /> சர்னி ரோட் பெருமாள் தரிசனம் முடிந்து வெளியே வந்து கோல்கப்பா சாப்பிடும் போது கேட்டாள். <br /> "டேய்.... வீட்டுல சொல்லிட்ட இல்ல?"<br /> "வ்வ்வ்...வீட்டுலயா? எங்க வீட்லயா?" <br /> "இல்ல.... இதோ இந்த டிக்கிவாலா வீட்ல. காது மட்டும் கொஞ்சம் நீளமா இருந்தா நீ கழுதைதாண்டா..." <br /> "நீ மட்டும் என்னவாம்? சரி.... வேண்டாம் விடு..." <br /> "அந்த பயம் இருக்கட்டும்.... நீ ஏண்டா வீட்ல சொல்லல? என்ன ப் பாரு.... எவ்வளவு தைரியமா.... சொல்லாமயே <br /> இருக்கேன்" <br /> "வெரி ஃ பன்னி.... என்ன விளையாடறியா? இப்ப போய் வீட்ல சொல்லி நான் குட்டையக் கொழப்ப மாட்டேம்பா... 14ந் தேதி வேலண்டைன்ஸ் டே அன்னிக்கு பெங்களூர்ல ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கறோம்.... அல்சூர் ரெஜிஸ்டர் ஆ பிஸ்ல.... ப்ரவீன் எல்லா எற்பாடும் பண்ணி வெச்சாச்சு...."<br /> "சரி.... ப்ளான் என்ன?"<br /> "எப்பவும் போல கார்த்தால 9 மணிக்கு கிளம் பறோம். நேரா ஏர் போர்ட். 11 மணிக்கு ஃ ப்ளைட். ஒண்ணரைக்கு பெங்களுர். 3மணிக்கு மாங்கல்யம் தந்துனானேனா. சாப்டுட்டு 6 மணி ஃப்ளைட்ல ரிடர்ன். 9 மணிக்கு அவங்க அவங்க வீடு. 20ம் தேதி உன் அக்கா கல்யாணம் முடிஞ்சதும் நம்ம கதை.... சரியா?" <br /> "ஒரே த்ரில்லிங்கா இருக்கு"<br /> "இருக்கும்..... எங்க அப்பா ஆடப் போற ருத்ர தாண்டவத்துக்கு இப்பவே என் காதுல பிஜிஎம் கேக்குது...."<br /> "அய்யய்யோ.... சொல்லாத.... இன்னிக்கு தேதி 10. இன்னும் நாலே நாள்தான்...."<br /> ........................<br /> "மிஸ்டர் பெரெரா.... ஆல் டன். மொத்தம் 167.36 லட்சம். என்னதான் உத்தேசம்? இப்பவாவது சொல்லுங்க"<br /> "அவ்வளவுதானா? 168.21 இருக்கணுமே..." <br /> "கமிஷன்..." <br /> "ஊரான் காசுலயே தொப்பை... ம்ம்ம்....... ஓகே... ஆர்டர் எடுத்துக்கோ... 25க்கு ரோல்ஸ் ராய்ஸ்.... 50 போயிங்... மீதி ஏர் பஸ் இன்டஸ்ட்ரீ..... சிம்பிள்... காட் இட்?"<br /> "வ்வாட்? இது என்ன ஸ்ட்ராடஜி? ரெண்டும்.... போன ஆகஸ்ட்ல ஆரம்பிச்ச ப்ளீடிங்.... இன்னும் நிக்கல..." <br /> "சொன்னத செய்...."<br /> "சார்.... இது ஒரு தப்பான..."<br /> " பை..." <br /><br /> 14ந் தேதி நான் பண்ணப் போறது ஆயிரமாவது லேண்டிங்.... வித் A320. இந்த மார்க் மட்டும் முடிச்சுட்டா.... அடுத்த வாரமே இண்டியன் ஏர்லைன்ஸ் நெக்ஸ்ட் லாட் 14க்கு ஆர்டர் சைன் ஆகும். பைப்ல இருக்கற 61ம் சைன் ஆயிடும். பி அன் ட பிள்யு, ஏர் பஸ் ரெண்டு பேரோட ஆர்டர் புக்கும் நிரம்பும். போயிங் பொசிஷனை அப்பிடியே மெயின்டைன் பண்ணலாம்.... ஒரே வாரம். என் போர்ட்ஃபோலியோ அ ப்பிடியே டபில். மினிமம் 75% கேரண்டி. என்னோட 3C டார்கெட்டுக்கு மேலயே.... கடுதாசியைக் குடுத்துட்டு அடுத்த மாசமே கனடா. ஊலல்ல்லா......<br /> ...............................<br /> 14 காலை. <br /> "டேய்... எல்லாம் சரியா நடக்குமில்ல?" <br /> "இருபத்தி ஓராவது தடவையாக் கேக்கற..... டென்ஷன் பண்ணாத..." <br /> "அப்ப.... உனக்கும் பயமா இருக்கா?" <br /> "அ.... அப்பிடியெல்லாம் இல்ல.... கொஞ்சம் நெர்வஸா ஃபீல் பண்றேன்" <br /> "முப்பது நிமிஷத்துல மூணு காபி குடிக்கும் போதே நினைச்சேன்..."<br /> "சரி வா.... போர்டிங் கால்....."<br /> " பிள்ளயாரப்பா....."<br /> " பிரம்மச்சாரியக் கூப்படறியே.... அர்ஜுனனைக் கூப்பிடு. அவனுக்குதான் ஆயிரம் பொண்டாட்டி...." <br /> " பிச்சுப்புடுவேன் பிச்சு.... ராஸ்கல்...." <br /> .....................<br /> "வெல்கம் அ போர்ட்.... ஐம் கே ப்டன் பெரெரா.... அலாங் வித் சிதார்த்..............."<br /> "டேய் அனூப்... டேக் ஆஃப் ஆயிட்டா நிம்மதியா இருக்கும்...." <br /> "சும்மா புலம்பாத.... வி ஆர் சேஃ ப்...." <br /> "மறக்க முடியாத நாள்.... வேலண்டைன்ஸ் டே அன்னிக்கே நம்ம கல்யாணம்.... எல்லாம் நல்ல படியா முடிஞ்சா உனக்கு திருப்பதில மொட்டை..." <br /> "என்னக் கேக்காமயேவா..... ஓகே... ஓகே.... ராஷ்மி.... இப்ப ரொம்ப ரஷ் பண்ணாத..." <br /> ................<br /> "டைம் என்ன?" <br /> "12:45"<br /> "லேடீஸ் அன் ஜென்டில்மென்.... கேப்டன் பெரெரா அகைன் ஃப்ரம் ஐஏ 605.... அப்ரோச்சிங் பேங்கலோர்... ஸ்டார்டிங் த டிஸன்ட்... வாம் வெதர்.... வி ஷல் டச் டௌன் பை தர்டீன் ஓ டூ.... இன் த பே பை தர்டீன் டென். தேங்க் யூ ஆல் ஃபர் சூஸிங் இண்டியன் ஏர்லைன்ஸ்... அவர் A320 ரெடி ஃபர் தவுசண்த் லேண்டிங்...."<br /> .................<br /> ...................<br /> .................<br /> பெங்களூர் விமான நிலையத்திற்கு பின்னால்..... கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்த கனவான்கள் அந்த விமான அவ்வளவு தாழ்வாகப் பறப்பானேன் என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் போதே....... அதன் பின் சக்கரங்கள் காம்பௌண்ட் சுவற்றில் இடித்து உடைத்தபடியே தரையில் இறங்கி ஓடுதளத்தை விட்டு விலகி, சக்கரங்கள் புல்வெளியில் புதைந்து....... <br /><br /> டவரிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நிலைமையை உணர்வதற்குள்.... பெரும் தீ மூண்டது. <br /> ........................</div>
<div style="text-align: justify;">
<br /> இது நடந்தது பிப்ரவரி 14, 1990. 62 பிரயாணிகள் உயிரிழந்தனர். அனூப், ராஷ்மி உள்பட. அவர்கள் திருமணம் சொர்க்கத்திலேயே நடந்திருக்கக் கூடும். முதல் முறையாக கேப்டன் பெரெராவின் கணக்கு தவறியது. விபத்துக்கான காரணம் பைலட்டின் கவனக் குறைவு என்று தீர்மானிக்கப்பட்டது. பெரெரா இப்போது கோவாவில் கலங்குட் பகுதியில் ஒரு உல்லாச விடுதியில் மேனேஜராகவும், ஹனீடா அவள் பெற்றோருடன் இருப்பதாகக் கேள்வி. <br /><br /> பி.கு: <br /> 1. உண்மை சம் பவத்தை ஒட்டிய ஒரு புனைவு. <br /> 2. இன்று விமான நிலையத்தில் காத்திருக்கும் போது எழுதியது.</div>
</div>
Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-1659263322158201862013-01-16T13:39:00.005+08:002013-01-16T13:39:52.378+08:00அவர்கள் காத்திருக்கிறார்கள்....<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="userContent">அவர்கள் காத்திருக்கிறார்கள்....<br /> ஆள் பவர்களின் செவிகளும் <br /> இதயங்களும் திறக்குமா என்று.<br /> ஈரமுள்ள நெஞ்சம் கொண்ட அரசியலாரும் <br /> உலகத்தில் உள்ளனரா என்று. <br /> ஊனமில்லாத கொள்கைகள் இருக்காதா என்று. <br /> எண்ணிய படியெல்லாம் இயங்கி, மக்களை <br /> ஏமாளிகளாக்கும் காலம் கலையாதா என்று. <br /> ஐநூறு நாட்கள்.....<br /> ஒன்று பட்டு நின்று ஒற்றுமையோடு <br /><span class="text_exposed_show"> ஓங்கிக் குரலெழு ப் பி, குறை தீர ஓர் <br /> ஔடதம் கிடைக்காதா என்று.<br /> எஃகு போன்றதோர் தலைவன் பின்னால்.... <br /> .......<br /> .......<br /> இடிந்தகரையில் <br /> நம் பிக்கை இடியாமல் <br /> அவர்கள் காத்திருக்கிறார்கள்.</span></span></div>
Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-2982874428588815692013-01-16T13:39:00.002+08:002013-01-16T13:39:22.718+08:00அதே உலகம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="userContent">"அ ப் பா.... நான் வரைஞ்சிருக்கறதை ப் பாரேன்..."<br /> "அட.... நல்லா இருக்கே... இது என்ன பாம் பா?"<br /> "ஐயோ.... விரலை நீட்டாத.... கொத்திடும்..." <br /> "இது.... தாமரை ப் பூதானே?"<br /> "தள்ளி நில்லு ப் பா.... குளத்துக்குள்ள விழுந்திடுவ..." <br /> ....<br /> ....<br /> குழந்தைகளின் உலகில் அனைத்தும் உயிர் ப் புடன். <br /> <br /> "சரி. வேற வெளயாட்டு வெளயாடலாம்....<br /><span class="text_exposed_show"> நீதான் தென்ன மரம்... நான் மேல ஏற ப் போறேன்."<br /> ...<br /> ...<br /> அதே உலகம். அ ப் பன் மரம்.</span></span></div>
Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-82298388916195737042013-01-16T13:38:00.006+08:002013-01-16T13:38:41.837+08:00நம் பிக்கை நன்னாள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span class="userContent"><u><b><span style="color: red;">நம் பிக்கை நன்னாள்</span></b></u><br /> <br /> ஆசைதான்..... <br /> தமிழர் அனைவருக்கும் உளங்கனிந்த <br /> பொங்கல் வாழ்த்துகள் சொல்ல ஆசைதான்.... <br /> ....<br /> ....<br /> விவசாய நிலங்கள் வீட்டு மனைகள் ஆனதும், <br /> விவசாயம் ஒரு வாழ்வாதாரம் என்ற நிலை அருகி ப் போனதும், <br /> விளைக்க விரும் பு பவனுக்கு மின்சாரம் இல்லாமற் போனதும், <br /><span class="text_exposed_show"> கழனி நீர் கானல் நீர் ஆனதும், <br /> விளைந்த பயிருக்கு விலையில்லாமல் போனதும், <br /> தொடரும் சுய உயிர் மாய் ப் புகளும்,<br /> ஆள்வோரின் அலட்சியங்களும், <br /> போராடிக் களைத்த சீவன்களும், <br /> வறண்ட நதிகளும், <br /> மழை தவறிய பருவங்களும், <br /> பருவந் தவறிய மழைகளும்,<br /> சாவியாய் ப் போன விளைச்சலும், <br /> மூழ்கி மடிந்த பயிர்களும்<br /> நினைவிலிருந்து அகல மறுத்தாலும்<br /> ...<br /> ....<br /> தை மலர்ந்தால் பாதை மலரும் ; பார்வை தெளியும்<br /> என்ற நம் பிக்கை ஊறிய தமிழரின் உணர்வுக்கு மரியாதையாய்.....<br /> ....<br /> ....<br /> <b><span style="color: #274e13;">"உலகத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்"</span></b></span></span></div>
Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-24102392035128098812012-11-30T23:26:00.002+08:002012-11-30T23:26:41.794+08:00A page torn from an old diary<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: rgba(255, 255, 255, 0);"><br />I Woke up with a sudden jerk<br />Thoughts squander berserk<br />Clearly heard that tearing scream<br />Damn ! Again, the same dream<br />I play that game of paint balls<br />Ignoring alll those pleading calls<br />I shoot around with a big laugh<br />Laugh heartily, till I cough</span><br />
<div class="text_exposed_show" style="display: inline;">
Red red red... red everywhere<br />
Cries cries..... cries that scare<br />
Am I enjoying this? I puzzle<br />
Looking inside, I see no tussle<br />
Convinced, a big smile in my face<br />
That simply none could erase<br />
I vacate the bed and get ready<br />
In the uniform I feel more steady<br />
Just then the phone rings.....<br />
'Sir.....'<br />
'On your course.... with the force...'<br />
I headed to the rose garden.<br />
<br />
- General Reginald E.H.Dyer.<br />
<br />
PS: saw a promo for a paintball gaming club this morning...... With red pain splashing allowed. Thought of writing this.....</div>
</div>
Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-28691205557757854702012-11-20T22:10:00.000+08:002012-11-20T22:10:38.873+08:00Confessions of an ideologist<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div dir="ltr" style="-webkit-composition-fill-color: rgba(175, 192, 227, 0.230469); -webkit-composition-frame-color: rgba(77, 128, 180, 0.230469); -webkit-tap-highlight-color: rgba(26, 26, 26, 0.296875); -webkit-text-size-adjust: auto; font-family: Helvetica; text-align: -webkit-auto;">
I had some ideologies <br />
Many said they were extreme.<br />
May be..... but I never cared<br />
For anyone or anything.<br />
</div>
<div dir="ltr" style="-webkit-composition-fill-color: rgba(175, 192, 227, 0.230469); -webkit-composition-frame-color: rgba(77, 128, 180, 0.230469); -webkit-tap-highlight-color: rgba(26, 26, 26, 0.296875); -webkit-text-size-adjust: auto; font-family: Helvetica; text-align: -webkit-auto;">
I believed in them strongly. <br />
I had some like minded friends<br />
Who also believed in them<br />
Much like me, I believe. <br />
For ages, many people felt <br />
We were a pain. <br />
When I looked at my yard<br />
I saw more bricks than bouquets.<br />
May be..... but I never cared<br />
For anyone or anything.<br />
<br /></div>
<div dir="ltr" style="-webkit-composition-fill-color: rgba(175, 192, 227, 0.230469); -webkit-composition-frame-color: rgba(77, 128, 180, 0.230469); -webkit-tap-highlight-color: rgba(26, 26, 26, 0.296875); -webkit-text-size-adjust: auto; font-family: Helvetica; text-align: -webkit-auto;">
Many said I influenced powers<br />
And people dreaded me.<br />
I was inevitable by then.<br />
Even now I think I am.....<br />
And my ideologies.<br />
I have given much to my society<br />
But many think I took away much.<br />
May be..... but I never carved<br />
For anyone or anything.<br />
<br /></div>
<div dir="ltr" style="-webkit-composition-fill-color: rgba(175, 192, 227, 0.230469); -webkit-composition-frame-color: rgba(77, 128, 180, 0.230469); -webkit-tap-highlight-color: rgba(26, 26, 26, 0.296875); -webkit-text-size-adjust: auto; font-family: Helvetica; text-align: -webkit-auto;">
I lived thus a complex life.<br />
Until I saw the last sunrise<br />
And nature took over me.<br />
I Cleared my yard <br />
Carrying them all with me. <br />
People heaved a sigh.<br />
Afloat, I look down<br />
I see my son and his cousin.<br />
I heaved a sigh.</div>
</div>
Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-48109386186172247892012-10-28T14:09:00.002+08:002013-01-16T13:42:50.143+08:00ச்ச்ச்ச்ச்சும்ம்ம்மா ஒரு கதை..... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<h5 class="uiStreamMessage userContentWrapper" data-ft="{"type":1,"tn":"K"}" style="text-align: justify;">
<span style="font-weight: normal;"><span class="messageBody" data-ft="{"type":3}"><span class="userContent">வேலை
என்று எதுவுமே இல்லாமல் வெறுமனே உத்திரத்தைப் பார்த்தபடி படுத்தபடியே ஒரு
நாளின் பெரும்பகுதியை நீங்கள் கழித்ததுண்டா? கோ பம் என்ற வார்த்தையை
படித்ததும் கேட்டதும் மட்டுமேயன்றி அதை நீங்கள் வெளிக்காட்ட முற்பட்டு அது
விரக்தியில் முடிந்ததுண்டா? டீக்கடைகளின் அருகில் எவனேனும் ஒரு நண் பனாவது
கண்ணில் படமாட்டானா என்று அலைபாய்ந்ததுண்டா? இல்லையா? இவற்றை புளி போட்டு
விளக்க என்னை விட சரியான ஆள் வேறு யார்? வாருங்கள் என்னோடு என் அறைக்கு.
என் அறைக்கு என்றால்.... இங்கே திருவல்லிக்கேணியின் மேன்ஷன்களில் உள்ள
சோப்பு டப்பாவை விட சற்றுப் பெரிதான பல நூறு அறைகளில் நண்பன் பாலகுரு
இருக்கும் அறை. பகல் நேரங்களில் அவன் வேலைக்குப் போன பிறகு நான்
இருக்குமிடம். </span></span><br /><span class="messageBody" data-ft="{"type":3}"><span class="userContent"> <br /> கூட ப் படித்தவன், அதிலும் நன்றாக ப் படித்தவன்,
என்கிற ஒரே காரணத்திற்காகவே என்னை சகித்துக்கொண்டிரு ப் பவன்.
அதை ப் பற்றி எனக்குக் கவலை இல்லை. எனக்கு தலைக்கு மேலே ஒரு கூரை. அது
எங்கு கிடைத்தாலும் சரி. சா ப் பாடு என்ற பெயரில் ஏதாவது (நான்
வெஜிடேரியனாக்கும்) தொண்டைக்குக் கீழே இறங்கினால் போதும். அட....
அ ப் படி நீங்கள் மூக்கை மூடிக்கொண்டே இருந்தால் ப்ராணவாயு கிடைக்காமல்
உங்கள் ப்ராணன் போய்விடும். மேன்ஷன் என்றால் அ ப் படித்தான்.... ஒன்றும்
ஆகாது.... பழகி விடும்.... <br /> <br /> உள்ளே வாருங்கள். அந்தக்
கட்டிலில் உட்காரலாம். ம்ம்ம்... வேட்டியை அ ப் படி தூக்கி ப்
போடாதீர்கள்... உடைந்து விடும். புருவத்தை உயர்த்தாதீர்கள். அழுக்கு ஏறி
களிம் பாக ப் பற்றிக்கொண்டால் அது உடையாதா? என்னுடைய இரண்டு துணிகளில்
அதுதான் புதியது. அட... நன்றாக சாய்ந்து உட்காருங்கள். டீ
சா ப் பிட்ட படியே பேசுவோமா?<br /> <br /> "டேய் ட ப் பாஸு, ரெண்டு டீ....
ரெண்டு கீர வட.... சட்டினி கூடக் கேட்டு வாங்கிட்டு வா... சார் அவன் கைல
ஒரு 10 ருவா குடுங்க சார்"<br /> <br /> ஆங்... அந்த ப் புத்தகங்கள்தான் என்
உலகம்.... ஒரு எழுத்தாளரின் பெயரைச் சொல்லுங்கள்....அவருடைய ஒரு
புத்தகமாவது என்னிடம் இல்லையென்றால் ஒரு விரலை வெட்டிக் கொள்கிறேன்.
எனக்கு என்னதான் வேலை என்கிறீர்களா? அட.... என் திறமைக்கும்,
தமிழார்வத்துக்கும், கனவுகளுக்கும், அ பிலாஷைகளுக்கும்.... ஒரு இடத்திலும்
வேலை இல்லையே... என்னை மதி ப் பார் யாரும் இல்லையே.... நண் பன்
பாலகுருவுக்கும் கூட இ ப் போதெல்லாம் என்மேல் மிகவும் கோ பம் வருகிறது.
அதையெல்லாம் பார்த்தால் பிறகு எனக்குக் கூரை? நான் எழுதும் கதை,
கவிதைகளை எந்த ப் பத்திரிக்கையும் ஏற் பதில்லை. பாரதிக்கு ப் பிறகு
நான்தான் என் பதை இந்த உலகம் எ ப் போது புரிந்துகொள்ள ப் போகிறதோ?
ஏன்?இ ப் போது நீங்கள் இ ப் படி சிரிக்கும் படியாக நான் என்ன
சொல்லிவிட்டேன்? <br /> <br /> பாருங்கள்.... என் கவிதைகளை.... படியுங்கள்...
உணருங்கள்.... நான் தொடாத விஷயம் இல்லை.... என்னுடன் உட்கார்ந்து எனக்கு
சரியாக விவாதம் செய்ய எவரும் இல்லை. என்னை ப் பார்த்தாலே ஓடி
ஒளிகிறார்கள். பாலகுரு கூட என்கவிதைகளையோ கட்டுரைகளையோ மதி ப் பதில்லை.
போகட்டும். அன்று கூட அ ப் படித்தான் ஆனது. அந்த பதி ப் பாளனை...
அவனுக்கு என்ன மரியாதை.... அவன் என் கவிதைத் தாளில் வடையை நசுக்கி
எண்ணையை..... ச்சே... ஓங்கி ஒரே அறை..... ம்ம்ம்... அரசாங்க விருந்தினனாக
ஒரு வாரம் இருந்துவிட்டு நேற்றுதான் வந்தேன். <br /> <br /> பாலகுருவும்
என்னை இந்த வாரத்துடன் வேறு இடம் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டான்.
நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? உங்களுடன் நான் தங்கிக் கொள்ள முடியுமா?
பய ப் படாதீர்கள். என்றேனும் ஒரு நாள் இந்த உலகம் என்னைக் கொண்டாடத்தான்
போகிறது. ஒவ்வொரு பைசாவையும் ஒவ்வொருவருக்கும் தீர்க்கத்தான்
போகிறேன். எதற்கெடுத்தாலும் ஏன் சிரிக்கிறீர்கள்?<br /> <br /> இதோ பாலகுருவே வந்து விட்டான்.... பிறகு பேசுவோம்.<br /> <br /> "யாருங்க நீங்க? என் ரூம்ல என்ன பண்றீங்க? எதுக்கு சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க?"<br /> <br /> "........."<br /> <br />
"என்னது.... என் நண் பனா? அய்யா..... அவன் போய் ரயில்ல தலயக் குடுத்து
மாசம் ஒண்ணாச்சு.... பொழுது போய் பொழுது வந்தா போலீஸ்..... ச்சே....
இனிமே சாவியை ஜன்னல்ல வெக்காம கையோட கொண்டு போயிடணும்...." <br /> <br /> ".........."</span></span></span></h5>
</div>
Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-9242176283700666242011-05-18T22:55:00.019+08:002011-07-14T23:13:25.774+08:00யூ டூ யூரோ?<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2saVSj6gnY-X7AkjUJbBKxaPOJMVpVb1bONpf0GaXLVlKEbxE_3IWGFgXzC4EqXMtakHwvor5XPmT5_38_yppoLUze8sKkRdaRQDUIhXRKskd3z1s-0ZULAbLRfdKE0wObEpQkNuolOrM/s1600/euro+crisis.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 234px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2saVSj6gnY-X7AkjUJbBKxaPOJMVpVb1bONpf0GaXLVlKEbxE_3IWGFgXzC4EqXMtakHwvor5XPmT5_38_yppoLUze8sKkRdaRQDUIhXRKskd3z1s-0ZULAbLRfdKE0wObEpQkNuolOrM/s400/euro+crisis.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5629225247202913634" border="0" /></a><br /><div style="text-align: justify;">போர்ச்சுகல். உலக வரைபடத்தை உருவாக்குவதற்கு மிகவும் உதவிய நாடு. கிட்டத்தட்ட 6 நூற்றாண்டுகள் உலகின் பல்வேறு பகுதிகளை ஆண்ட நாடு. கடைசியாக (90களின் பிற்பகுதியில்) இடத்தைக் காலி செய்தது மக்காவ் (சைனா) என்று நினைக்கிறேன். "ஐரோப்பிய பொருளாதார யூனியன்" (European Economic Zone) என்று பேச ஆரம்பித்த காலத்திலிருந்து யூனியனில் இருந்து வரும் நாடு. பொருளாதாரத்தில், வாழ்க்கைத்தரத்தில் முன்னேறிய, மனித வளம் மிக்க, அமைதியான நாடு.<br /><br />ஆனால் இதெல்லாம் இன்று "பொய்யாய்... பழங்கதையாய்..." போய், கிரீஸ், அயர்லாந்துக்கு அடுத்ததாக பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் வீழ்ந்து தவிக்கிறது. வீழ்ச்சி என்றால் சாதாரண வீழ்ச்சி இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் போல 225% கடன். தற்போதைய நிலையை சமாளிக்க ஏறத்தாழ 80 பில்லியன் யூரோ தேவைப்படலாம். சென்ற மாதத்தில்உலக வங்கியும், யூனியனும் கடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளன. போர்ச்சுகலும் தன் பங்குக்கு செலவினங்களை அடியோடு குறைத்தாக வேண்டும். ஒரு யூரோவிற்கு நூறு காசுகள் என்று ஒவ்வொரு யூரோவின் மதிப்பையும் உணர வேண்டும்.<br /><br />ஆனால், இப்படியே எவ்வளவு காலத்திற்கு ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின் பொருளாதார பிரச்னைகளை சமாளிக்க முடியும்? சென்ற வருடம் கிரீஸ் வீழ்ச்சியின்போதே இந்தக் கேள்வி எழுந்தது. (இது பற்றிய <a href="http://thuklak.blogspot.com/2010/05/blog-post.html">முந்தைய இடுகை</a>) இந்த வீழ்ச்சிகளின் காரணம் "யூரோ"தானா? கிடையவே கிடையாது.... இருக்கலாம்.... வேறென்ன... என்று பல சித்தாந்தங்கள் கிளம்பின. ஆனால் பொதுவான பொருளாதார விதிகள், நாணய மதிப்பு மற்றும் நாணயமாற்று முறைகள், முதலீடுகள் என்றெல்லாம் பார்க்கும்போது, ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு போட்டித்தன்மை என்பது மிக முக்கியமான ஒன்று. மனிதவளம், உள்நாட்டு உற்பத்தி இவற்றுடன் கூட சர்வதேச சந்தை பொருளாதாரத்தில் நாணயமாற்று இன்றியமையாத ஒன்று.<br /><br />சீனாவின் நாணயமாற்று கொள்கையில் குற்றம் கண்டுபிடித்தவர்கள் பலர். ஆனால் இன்று குறைந்த முதலீடு ; கூடுதல் உற்பத்தி ; மிகக்குறைந்த விலை ; மிகப்பெரிய சந்தை என்று வேறு எந்த நாட்டைச் சொல்ல முடியும்? அமெரிக்க கருவூல செயலர்கள் சீனாவுக்கு நேரில் சென்று நாணயமாற்று விகிதங்களை சிறிதளவாவது தளர்த்தக் கோருமளவுக்கு போட்டித்தன்மையை தக்க வைத்துக்கொண்டுள்ளது. அதே சமயம் நாணயச் சந்தையில் நேரடியாகத் தலையிட்டு 'யுவான்' மதிப்பை ஏற்றத் தாழ்வுகளில் இருந்து பாதுகாக்க, நாணயச்சந்தைக்கென ஒரு தனி பண முறையைக் கொண்டு வந்து அதிலும் தன் போட்டித்தன்மையை வளர்க்கிறது.<br /><br />ஒருங்கிணந்த ஐரோப்பிய பொருளாதாரம் என்ற கனவை நனவாக்கி சாதனை படைத்தாலும், கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் இப்போது வலுப்பெற ஆரம்பித்திருக்கிறது. சீனாவைப் போல வேறு ஒரு மாற்று நாணய முறை வரும் சாத்தியக் கூறுகளும் உள்ளன. ஒரு நேர்மையான, பாரபட்சமில்லாத பொருளாதார அழுத்த சோதனைகள் (economic stress tests) மூலம் யூனியனுக்குள் இருக்கும் நாடுகளை வகைப்படுத்தி ஒரு 'மென் யூரோ' (soft euro) அறிமுகப்படுத்தப்படலாம். நாடுகள் இந்த மாற்று நாணயத்தை கையாண்டு தங்கள் போட்டித்தன்மையைத் தக்கவைத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கிறது. காத்திருந்து பார்க்க வேண்டும்.<br /><br />இப்போது போர்ச்சுகலுக்குப் பிறகு அடுத்த நெருக்கடி இத்தாலியில். அதன் அளவு 1 டிரில்லியன் யூரோ அளவுக்கு இருக்கலாம் என்ற அனுமானங்கள் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. எத்தனை காலம் ஜெர்மனி இந்த சரிவுகளை தாங்க முன்வரும் என்பது கேள்விக்குறி. வரி செலுத்தும் சாமானியன் அரசாங்கத்தை எதிர்க் கேள்வி கேட்கும் காலம் தொலைவில் இல்லை.<br /><br />இரண்டு உலகப் போர்களின் தொடக்கமும் ஜெர்மனி. இன்று உலக பொருளாதார சரிவை தாங்குவதிலும் பெரும்பங்கு வகிப்பது ஜெர்மனி.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7NteA8pQSnJ7gz0I07Z4P8_EsZU0iixgKYkkWuYChXzsrQaZityyyjPCuZv_YG2mVFfSvojiT38OAzMyMMHT7GuEqf-dXx-sHkZM4nDh7KRbekHBsnZct8DHdVBTE6_HnBDOOEf8rEbcM/s1600/euro+crisis2.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 398px; height: 273px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh7NteA8pQSnJ7gz0I07Z4P8_EsZU0iixgKYkkWuYChXzsrQaZityyyjPCuZv_YG2mVFfSvojiT38OAzMyMMHT7GuEqf-dXx-sHkZM4nDh7KRbekHBsnZct8DHdVBTE6_HnBDOOEf8rEbcM/s400/euro+crisis2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5629226077060745938" border="0" /></a><br /></div>Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-66160927619972369462011-04-30T22:09:00.045+08:002011-05-01T00:16:29.821+08:00உறங்குவது போலும்........<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikkcbMpkriwengsaXZT5vWtn6F7oj_ec3UIUuV1062k6qks0_GkYRs5oDP-cZnOu8NJ4FpPmU2lrVKOOna5RzQkBxWS6tdpoOAZK9QC8zU4CESx7Q8Ukn_d50C2GqKhPLoXfKfXp7r-AtI/s1600/Sleep.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikkcbMpkriwengsaXZT5vWtn6F7oj_ec3UIUuV1062k6qks0_GkYRs5oDP-cZnOu8NJ4FpPmU2lrVKOOna5RzQkBxWS6tdpoOAZK9QC8zU4CESx7Q8Ukn_d50C2GqKhPLoXfKfXp7r-AtI/s400/Sleep.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5601408325189191714" border="0" /></a><br /><div style="text-align: justify;">நண்பருடன் ஒரு சிறிய விவாதம். தூக்கத்தில் நாம் மிகுந்த நேரத்தை விரயம் செய்கிறோம் (non-productive) என்றார். அதுவும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 2 மணி நேரத்துக்கு மேல் தூங்குவது அவசியமற்றது ; ஒரு நாளைக்கு 16 மணி நேரம் என்று வாரத்துக்கு 6 நாட்கள் (96 மணி நேரம்) வேலை செய்ய அனுமதிக்கும்படி பணியாளர் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என்றார். இத்தனைக்கும் அவருடையே சகோதரர் ஒரு மருத்துவர்.<br /><br />நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்களைப் பற்றி பேசவில்லை. நிஜமாகவே தூக்கம் என்பது நேர விரயமா? மனிதனுக்கு ஒரு நாளைக்கு 6 மணி நேரத் தூக்கம் அவசியம் என்று மருத்துவ அறிவியல் சொல்கிறது. இல்லாது போனால், மனித உடல்கூற்றுப் படி, இயக்கமும் உற்பத்தி திறனும் மங்கி, வளரும் நாடு என்ற நிலையிலிருந்து இறங்கி வளர்ச்சி குன்றிய நாடாகத்தான் போகும்.<br /><br />அது நிற்க. விவாதம் தொடர்ந்தது. அறிவியல், மருத்துவம் , வானவியல் இவையெல்லாம் வாழ்வியலில் கலக்கும் முன்பிருந்து இருக்கும் வேதம் என்ன சொல்கிறது? ("வேதம்" என்பது, மதம் - குறிப்பாக இந்து மதம் -மற்றும் ஆத்திகம் தொடர்புடையது என்ற கருத்து உடையவர்கள் இந்த வரியுடன் திரும்பி விடலாம்). வேதங்களைப் பொறுத்தவரை மதம், ஆத்திகம் போன்றவை மிக மலிவான விஷயங்கள். அவற்றின் ஆழமும், அகலமும் இந்த பிரபஞ்சத்தை விடவும் அதிகம்.<br /><br />இன்று அறிவியல் பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்ற கேள்விக்கு பதில் தேட முயன்று கொண்டிருக்கிறது . (இது பற்றிய <a href="http://thuklak.blogspot.com/2009/05/blog-post_23.html">முந்தைய இடுகை</a>) அறிவியல் முயல வேண்டும். உண்மை என்பது தேடி அறிந்தே தீர வேண்டிய ஒன்று. ஆனால், இன்றைய நிலையில் அறிவியலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள பல் செய்திகள் எத்தனையோ காலத்திற்கு முன்பே வேதங்களில் இருக்கின்றன என்பது ஒரு ஆச்சரியமே.<br /><br />கடவுள் ஒளி உண்டாகட்டும் ; பூமி உண்டாகட்டும் ; உயிர்கள் உண்டாகட்டும் என்று நினைத்தார், படைத்தார் என்பது பரவலான நம்பிக்கை. போலவே, 2012-ல் பிரளயத்தில் (deluge) உலகம் அழியும் ; உலகமே நீரில் மூழ்கி விடும் என்பது போன்ற நம்பிக்கைகளும் பல மதங்களிலும் பரவலாக நம்பப்படுகிறது. ஆனால் வேதமோ, இதையெல்லாம் விடு ; 'நித்யப் பிரளயம்" என்று ஒன்று நாள்தோறும் உனக்குள்ளேயே நிகழ்வது உனக்குத் தெரியுமா என்கிறது. அதுதான் 'தூக்கம்'. எப்படி?<br /><br />"லயம்" என்றால் ஓய்தல் அல்லது ஒன்றுதல் என்று கூறலாம். நாம் சுய உணர்வுடன் (consciousness) இருக்கும்போது நம் மனதில் உள்ள என்ணங்கள், நாம் தூங்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி, ஒடுங்கி, ஓய்ந்து, ஒரு புள்ளியில் 'லயித்து' (withdrawn / unmanifest) விடுகின்றன. மறுபடி விழிக்கையில், 'மனம்' என்பதும் அதில் எண்ணங்கள் என்பதும் மறுபடி 'தோன்றி' (manifest) நம் சுய உணர்வின் புலனுக்கு தென்படுகின்றன. (இது பற்றிய <a href="http://thuklak.blogspot.com/2009/02/blog-post_11.html">முந்தைய இடுகை</a>) நாம் தூங்கி விழிக்கும்போது, உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. இது எங்கிருந்து வந்தது?<br /><br />இந்தப் பிரபஞ்சத்தில் நம் சுயஉணர்வுக்கு புலப்படும் / புரியும் ஒவ்வொரு பொருளும் அணுக்கள் / துகள்களால் ஆனது என்று அறிவியல் கூறுகிறது. அந்த அணுக்கள் / துகள்களுக்கும் அப்பாற்பட்டதை "வெளி" (field) என்கிறது. அதை அறியத்தான் அறிவியல் முயன்று கொண்டிருக்கிறது. அந்த ஒன்றை, அந்த ஆனந்தமான அமைதியை, அந்த மூலசக்தியை (energy) வேதம் "பிரம்மம்" என்றும், நம் சுய உணர்வில் புலப்படுவை எல்லாம் அதன் வெளிப்பாடுகளே (manifests) என்றும் கூறுகிறது. தூக்கம் ஒரு வகையான தியானம். நாம் தூங்கும்போது நிகழும் பிரளயத்தில், நம் மனம் அதன் மூலமான சத்தில் லயித்து, மீண்டும் வெளிப்படும்போது புத்துணர்வுடன் வெளிப்படுகிறது. எப்படி கடலில் ஒரு அலை எழுந்து, கடலிலேயே விழுந்து, கடலோடு லயித்து, மறுபடி இன்னொரு அலையாக எழுகிறதோ அதைப் போலவே. எந்த மூலசக்தியின் வெளிப்பாடாக மனமும், எண்ணங்களும் தோன்றினவோ, அதே மூலசக்தியிடம் லயித்து மீண்டும் தோன்றும்போது புத்துணர்வும், அதன் காரணமாக உடலியக்கமும், நமது அன்றாட வாழ்வும் நிகழ்கின்றன. அந்தப் புத்துணர்வு இல்லாமல் உடல் உழைப்பும், உற்பத்தித் திறனும் இல்லை. மனம் ஓயாமல், உடலுக்கு சக்தி கிடைக்காது. புத்துணர்ச்சி பெறுவது என்பதையும் தாண்டி, நம் இருப்பை, இந்தப் பிரபஞ்சத்தின் பேருண்மையை நமக்குப் புரிய வைப்பதும் தூக்கமே. <br /><br />நாம் உணரும் இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றமும், மறைவும், அதில் உயிர்களின் பிறப்பும், இறப்பும் கூட அந்த மூலசக்தியின் அலைகளே.<br /><br />"உறங்குவது போலும் சாக்காடு ; உறங்கி<br />விழிப்பது போலும் பிறப்பு"<br /><br />"புனரபி ஜனனம் ; புனரபி மரணம்"<br /><br /><span style="font-weight: bold;">வால் :</span> இதையெல்லாம் ஒருபுறம். மறுபுறம், பணியாளர் நலன்கள், அது தொடர்பான சட்டங்கள், அடிப்படை பொருளாதார விதிகள் இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுதும் வாரத்திற்கு 40 மணி நேரம் பணி என்பது சரியான ஒன்றுதான். மேலும் மேலும் பணி நேரத்தைக் கூட்டுவது பல விதங்களிலும் பாதிப்புதான். Only be counter productive.<br /></div>Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-82099797923576393112011-04-20T21:40:00.028+08:002011-04-20T22:34:21.475+08:00மீண்டும் ஜே.கே.பி. !!!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuE7lMc3TGm3rCefEFSNhDSYDxlQeQIUmWZ8agLxjMlbJu9DJv6pDOBSHBkBpfzRyZOcL0SWQTUdwCNeaZnjF-J3LOX6zde080Z_FwK_waMFtPc5Z-nHT2M1TA1lLuMh9KQyh-60BO1aq4/s1600/hibernation.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 400px; height: 174px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuE7lMc3TGm3rCefEFSNhDSYDxlQeQIUmWZ8agLxjMlbJu9DJv6pDOBSHBkBpfzRyZOcL0SWQTUdwCNeaZnjF-J3LOX6zde080Z_FwK_waMFtPc5Z-nHT2M1TA1lLuMh9KQyh-60BO1aq4/s400/hibernation.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5597673573768881122" border="0" /></a><br /><div style="text-align: justify;">பட்ட கால்லயேதான் படும். மறுபடியும் எழுத வந்தாச்சு. மீண்டும் ஜே.கே.பி. !!! பயப்படாதீங்க. ஒரேடியா அடிக்க மாட்டேன். தெளிய வெச்சு தெளிய வெச்சுதான் அடிப்பேன்.<br /><br />6 மாசமா எழுத முடியாம போனாக் கூட அப்பிடி இப்பிடின்னு 98 பேர் இன்னும் நம்மளை நம்பிக்கிட்டிருக்காங்க. 1 மாசம் முன்னால எதேச்சையா பார்த்தபோது 100 பேர் !!! அடடா.. .எழுதாததுக்கே 100ன்னா எழுதியிருந்தா 1000 ஆயிருக்குமோ... அலெக்ஸால அலேக்கா தூக்கி மொத 10ல உக்காத்தி வெச்சுருப்பாங்களோன்னு நினைச்சதும் உண்டு. இப்பதான் தெரியுது... வழி தவறி வந்து ரெண்டு நிமிஷம் திண்ணைல உக்காந்துட்டு... இந்த அக்கப்போருக்கு வெயில்லயே அலையலாம்னு ஓடிட்டாங்க. பாவம்... பொழச்சுப் போகட்டும்.<br /><br />* * * * * * * * * * *<br /><br />தேர்தல் முடிஞ்சு எல்லாரும் நகம், விரல், கை, கால், பக்கத்துல இருக்கறவங்க குரல்வளைன்னு எதையாவது கடிச்சுக்கிட்டே பதட்டமா இருக்கலாம். அல்லது "ஹ்ம்ம்ம்.... பச்சாப் பசங்க.... 1 மாசம்... 30 நாள்.... எவ்வளோ சவுகரியம்... என்னென்ன பண்ணலாம் தெரியுமா?"ன்னு குமரிமுத்து மாதிரி சிரிச்சுக்கிட்டு இருக்கலாம். ஆனா பத்திரிக்கைகளுக்கு அல்வா டைம். "கிராமங்களில் கருத்து கணிப்பு", "மக்களின் மனத் துடிப்பு"ன்னு எதையாவது அடிச்சு விட்டு, குட்டையக் கொழப்பி கல்லா கட்டலாம். எஞ்சாய் பண்ணுங்க மக்களே !!<br /><br />* * * * * * * * * * *<br /><br />துக்ளக்ல (அட.. .ஒரிஜினல் துக்ளக்ல...) 'சோ' எழுதியிருந்ததைப் படிக்கும்போது சிப்பு சிப்பா வந்தது. இவங்களும் இலவசம், அவங்களும் இலவசம்னு சொல்லிட்டதால "இலவசம்"ங்கற ஃபேக்டர் அடிபட்டு போகுதாம். என்னா லாஜிக் !!! வடிவேலு, சிங்கமுத்துவை எல்லாம் இஞ்சித்தண்ணில கரைச்சு குடிச்சு ஏப்பம் விட்டுட்டார். சரி.... ஆதரிக்கறதுன்னு முடிவு செஞ்ச பிறகு லாஜிக்கெல்லாம் பாத்தா முடியுமா? ஆனா இப்பிடியே லாஜிக் பாத்தா எப்பிடி இருக்கும்னு யோசிச்சு பாத்தா.....<br /><br />"ரெண்டு பேரும் இனிமே லட்சம் கோடிக்கு அதிகமா ஊழல் பண்றதில்லைனு சொல்லிட்டதால ஊழல் ஃபேக்டர் அடிபட்டு போகுது."<br /><br />"ரெண்டு பேரும் எதிர்கட்சி பிரமுகர்களை குண்டு வெச்சு மட்டுமே கொல்வோம், அருவாளால வெட்டமாட்டோம்னு சொல்லிட்டதால வன்முறை ஃபேக்டர் அடிபட்டு போகுது."<br /><br />"சொந்தப் பிரச்னைன்னா மட்டுமே டெல்லிக்கு போவோம் ; மத்த பிரச்னைக்கு எல்லாம் புறா கால்ல சீட்டு கட்டி அனுப்புவோம்னு ரெண்டு பேருமே சொல்லிட்டதால டெல்லிக்கு காவடி தூக்கற ஃபேக்டர் அடிபட்டு போகுது."<br /><br />'சோ' மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடுச்சு.<br /><br />* * * * * * * * * * *<br /><br />சிங்கைலயும் அடுத்த மாசம் 7ந் தேதி தேர்தல். முதல் முறையா இங்க நேரடியா பாக்கறேன். என் வரையில இங்க ரொம்ப வித்தியாசமா இருக்கு. தேர்தல் முறைகள்ல இல்ல ; அரசியல்வாதிகளும் மக்களும் தேர்தலை அணுகற முறைல. நேரடியான கேள்விகள் கேக்கறாங்க. பிரதமர்ல இருந்து எல்லாரும் அதை விட வெளிப்படையா பதில் சொல்றாங்க. நெகடிவ்வா பார்க்கறவங்களும் இருக்காங்க. நான் ரொம்ப ஆர்வமா பாத்துக்கிட்டுருக்கேன். அநேகமா அங்க ரிசல்ட் வரும்போது இங்கயும் வந்துடும்னு நினைக்கிறேன்.<br /><br />* * * * * * * * * * *<br /><br />வழக்கம்போல போரடிச்சாச்சு. அப்பறம் பாக்கலாம். _/\_<br /><br /></div>Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-16932663618540406802010-10-11T22:45:00.000+08:002010-10-11T22:54:02.204+08:00பா.கே.ப.இ<div style="text-align: justify;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidH9TEAHYCk0d9o84DckGxDU_K0koNgm1EQCfadv2pDBRb1fdMtUi78UDfxFqJph-DXf-24lJoDnJRwKZ82YxrtpOEP-W1QjmtrIHaIDjHqHwmV3FzwAmAyQ2IqkGOM2vMXftveSfUh3t-/s1600/eye.jpg"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 79px; height: 48px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidH9TEAHYCk0d9o84DckGxDU_K0koNgm1EQCfadv2pDBRb1fdMtUi78UDfxFqJph-DXf-24lJoDnJRwKZ82YxrtpOEP-W1QjmtrIHaIDjHqHwmV3FzwAmAyQ2IqkGOM2vMXftveSfUh3t-/s200/eye.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526777751961227042" border="0" /></a>வேற என்ன? அதேதான். சிங்கைல ரெண்டாம் நாளே கொஞ்சம் காத்தாடினாலும், மூணாம் நாள் போய் பார்த்தோம். நிறைய எழுதணும்தான். டெக்னிகலா சுபீரியர் படம். ஆனா, க்ரிடிகலா எழுதினா வயித்தெரிச்சல் கோஷ்டிங்கறாங்க. சிலரெல்லாம் விமர்சனம் எழுதியிருக்கவே வேண்டாம்னு வேற. அந்தப் படத்தை சொன்னாங்களா... இந்தப் படத்தை மட்டும் சொல்றாங்களேன்னு கேள்விகள். நாளைக்கு கல்மாடி மேல விசாரணை வெச்சா, அவரும் 'ராசாவைக் கேட்டிங்களா? லாலுவைக் கேட்டிங்களா? என்னை மட்டும் கேக்கறீங்களே'ன்னு சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம். என்னுடைய பார்வையில்:<br /><br />1. இவ்வளவு கோடி பணத்தைப் போட்டு மீண்டும் ஒரு காதல் கதைன்னு எடுக்காம, இன்னும் தெம்பாவே பண்ணியிருக்கலாம்.<br />2. 'ஆர்டிஃபீசியல் இண்டெலிஜன்ஸ்' - கான்செப்ட் ரொம்பவே டைல்யூட் ஆயிடுச்சு.<br />3. ஒரு ப்ரோடோடைப், மாஸ் ப்ரொடக்சன்க்கு போகணும்னா ஒரு க்ரிடிகல் வால்யூம் வேணும். அது எதுவுமே இல்லாம செல் மாதிரி இரட்டிப்பாகி நூற்றுக்கணக்கா பல்கிப் பெருகறது.....ஹ்ம்ம்ம்...<br />4. இந்த மாதிரி ப்ராஜெக்ட் எல்லாம் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஃபண்ட் பண்ணி நடக்கறது. ஆனா, என்னமோ தன் சொந்த சொத்து மாதிரி தனக்கு எதிரியா நினைக்கிற ரோபோவை வெட்டி(!!!) பெருங்குடி குப்பை மேட்டுல போடறது...ம்ஹூம்ம்ம்...<br /><br />சுஜாதா இருந்திருந்தார்னா இன்னும் பெட்டராயிருந்திருக்குமோன்னு சில கருத்துகள். ஆனா அவர் இருந்தபோது, அவரைப் பக்கத்துல வெச்சுக்கிட்டே, அவரே எழுதின "விக்ரம்" கதையை நாறடிச்சாங்க. அந்தப் படத்துக்கு கமல் வேற. சரி.... போதும்.<br /></div><br /><div style="text-align: justify;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYjWfN2TsnSXierytRlPy_dbrvVxi-q4Lo3oWW916eCnyJBI2vv-RdLIgSOeut7K4mO0qVLiHGRV1GOCo3k5kCNTH3AiFwwDq0bs-xeW9IIIj7j7h2cAZVriLpDGbIe3BMpV68WWRCb9wK/s1600/ear.jpg"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 33px; height: 58px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgYjWfN2TsnSXierytRlPy_dbrvVxi-q4Lo3oWW916eCnyJBI2vv-RdLIgSOeut7K4mO0qVLiHGRV1GOCo3k5kCNTH3AiFwwDq0bs-xeW9IIIj7j7h2cAZVriLpDGbIe3BMpV68WWRCb9wK/s200/ear.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526777822982883714" border="0" /></a>"காதல் அணுக்கள்" பாடல். ஒரு சந்தேகம். "செந்தேனில் வஸாபி...." வஸாபி ஒரு ஜப்பானிய கிழங்கு. மொளகா மாதிரி காரம். அதைத் தேனில் ஊறப்போட்டா ரெண்டுமே சகிக்குமான்னு தெரியல. ஒரு வேளை "செந்தே<span style="font-weight: bold;">ள</span>ன்ன வஸாபி..."யா இருக்குமோ? அம்மிணி கண்ணு அவ்வளவு ஷார்ப்பா?<br /></div><br /><div style="text-align: justify;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoZUs0_mqT4otHS405KwD4gvzL9iw-r5lJBwarmS8lVqkxWYha3-F75GswTdV1sNGNuRf7LwgJ1khUEOdYSJOkw173dQD_sfIZvtRj1x5_vJV5YOblpGMM4Gl64kzX1S_yJHaxvsFccvaz/s1600/mouth.jpg"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 57px; height: 34px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhoZUs0_mqT4otHS405KwD4gvzL9iw-r5lJBwarmS8lVqkxWYha3-F75GswTdV1sNGNuRf7LwgJ1khUEOdYSJOkw173dQD_sfIZvtRj1x5_vJV5YOblpGMM4Gl64kzX1S_yJHaxvsFccvaz/s200/mouth.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526777893092149586" border="0" /></a>நண்பர் ஃபேஸ்புக்ல எழுதியிருந்தார். "முதல் டெஸ்ட் மேட்ச் கடைசி ஓவர்கள்ல விவிஎஸ்ஸை கொஞ்சம் 'கன்னிங் லிப் ரீடிங்' பண்ணினேன். ஓஜாவை திட்ற மாதிரி இருந்தது"ன்னு. இப்பிடி ஒரு லிப் ரீடிங் தேவையான்னு கமெண்ட். அதுக்கு அவர் சொன்ன பதில் டாப். "அவனவன் இதழ்ல கதையே எழுதறான். படிக்கலைன்னா கோச்சுக்க மாட்டானா?". நன்றி <a href="http://tamilsribees.blogspot.com/">ஸ்ரீஜி</a>.<br /></div><br /><div style="text-align: justify;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQd-6Ck-JlNtVXjI2WnAO_4YGs3xUxBuCfWsLm9FiGB3uNOApFZi55oUU9KXTK4TlemX5SSPcwZfxkls1rkmiSn8uGR7YvqBy7I41C5dqVwNN8w9voGJQeAFgRIilsFIJSisflwDU7ui0u/s1600/hand.jpg"><img style="float: left; margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 49px; height: 51px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQd-6Ck-JlNtVXjI2WnAO_4YGs3xUxBuCfWsLm9FiGB3uNOApFZi55oUU9KXTK4TlemX5SSPcwZfxkls1rkmiSn8uGR7YvqBy7I41C5dqVwNN8w9voGJQeAFgRIilsFIJSisflwDU7ui0u/s200/hand.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5526777977523394658" border="0" /></a>காமன்வெல்த் விளையாட்டு. அந்த ஊழல் சந்தி சிரிச்சாச்சு. 70000 கோடியாம். எத்தனை சைபர்னு எண்ணும்போதே கொட்டாவி வருது. அட... வீட்டுக்கு கட்டிக்கிட்டு போங்கப்பா. அதையெல்லாம் நாங்க ஒண்ணுமே சொல்ல முடியாது; வெறுமனே வேடிக்கை பாத்துட்டு, பஸ்லயும், ஃபேஸ்புக்லயும், ட்விட்டர்லயும் பேசி பொழுது போக்கிப்போம். போட்ட பட்ஜெட்ல உள்ளூர் விளையாட்டு வீரர்களையும் கொஞ்சம் கவனிச்சு நல்ல பயிற்சி குடுத்திருக்கலாமே. குமுதம்களும், விகடன்களும் வசதியில்லாத எத்தனையோ விளையாட்டு வீரர்களைப் பத்தி எழுதியிருக்காங்க. அந்த அபாக்கியவான்களும் கண்ல தண்ணி வர கெஞ்சியிருக்காங்க. அவங்கள்லாம் கண்லயே படலயா? இவ்வளவு ஊழல் பண்ணியாச்சு. பயிற்சின்னு தனியா ஒரு பட்ஜெட் போட்டு அதுலயும் கொஞ்சம் ஏப்பம் விட்டிருந்தாலும் மிச்சமாவது அந்த பாவப்பட்ட ஜீவன்களுக்கு போயிருக்கும். என்ன செய்ய? மேரா பாரத் மஹான் !!<br /></div><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOcxq7qsUiD4JcKuQ602C64sE1flLxZfwCjdWrIdbkk6TWjR2UKEqYXZyHYTnKQlkrvA-kDxjy1qTJzaWJTnxnbkSGmJYr2py_cBvkurlzPwEmtKXfn8JCWDghHB-OrI3XTfeUsVQ44K9S/s1600/eye.jpg"><br /></a><div style="text-align: justify;"><span style="font-weight: bold;">கொசுறு : </span>ஃபேஸ்புக்கை "முகநூல்"னு தமிழ்ப்'படு'த்தறாங்க. அப்பிடிப் பாத்தா ட்விட்டரை "கீச்சான்"ன்னு மொழிபெயர்க்கலாமே. ட்விட்டை "கீச்"சுன்னும் ட்விட்டுகிறேன்கறதை "கீச்சுகிறேன்"ன்னும் சொல்லலாமே. சில அடிப்படை விதிகளின்படி பெயர்ச்சொற்களை மொழிபெயர்க்கக் கூடாது. அப்படியேதான் பாவிக்கணும்னு சொல்றாங்க. ஃபேஸ்புக், ட்விட்டர், கூகில் இதெல்லாம் ப்ராண்ட் பெயர்கள். அப்படியே இருக்கட்டுமே. (சிங்கையில் நமது பதிவர்கள் ப்ராண்டுக்கு "பொரிம்பு" என்ற அழகான பதத்தை உபயோகிக்கிறார்கள்)<br /></div>Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-8222706198125586272010-07-25T22:37:00.041+08:002010-07-26T07:30:43.418+08:00பா.கே.ப.இ.<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrNU8ziNnDCh-uXekTzpkGKQ-ERWIEL8gcNC1creMHzVLx1VwWtfvNDM11SVwhHcTmSHVsGl4nQyzaJ2D4ycvujMz6uoZlglVDjjFfu94AX7gwH-qY2B7n1ca6Ls9Ex_eY14b5cSdl1izd/s1600/senses.jpg"><br /></a><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwperOv-4HBU_7LIVtfZs7xg9jsposKempc3qDIYZNxz3nI3u1be4s-eL_uNV49rQfS6yQi3_JpSn5EsR10J8MH2sg3dvVflKxd0bvFRs_-N67SSBLqqK43VzbOqHYK3LaembzBHOxIqmm/s1600/senses.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 130px; height: 168px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhwperOv-4HBU_7LIVtfZs7xg9jsposKempc3qDIYZNxz3nI3u1be4s-eL_uNV49rQfS6yQi3_JpSn5EsR10J8MH2sg3dvVflKxd0bvFRs_-N67SSBLqqK43VzbOqHYK3LaembzBHOxIqmm/s400/senses.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5497864708542327106" border="0" /></a><br /><div style="text-align: justify;">போனவார சென்னைப் பயணத்தின்போது.........<br /><br /><span style="font-weight: bold;">பார்த்தது :</span> போக்குவரத்து நெசவாளர்கள் (traffic weavers)னு கேள்விப்பட்டிருக்கேன். சென்னை இரண்டு சக்கர வாகன ஓட்டிகளோட சாகசங்களை நேர்ல பாத்தபோதுதான் புரிஞ்சது. ஊடுபாவு மாதிரி இங்க இருந்து அங்க... அங்க இருந்து இங்கன்னு... கிடைக்கிற சின்னச் சின்ன இடைவெளிகள்ல புகுந்து புகுந்து ஓட்டறதைப் பாக்கவே பயமா இருக்கு. அதுவும் முன்னால ஒரு பையன், பின்னால மனைவி (கைல குழந்தை) நடுவுல ஒரு பொண்ணுன்னு போறதைப் பாக்கும்போது.... நினைக்க சங்கடமா இருந்தாலும் 'நம்ம வண்டில வந்து இடிச்சு விழாம இருக்கணுமே; அனாவசிய சிக்கல்ல சிக்காம இருக்கணுமே'ங்கற சுயநல எண்ணம் வராம இல்லை. அலைபேசக் கூடாது, தலைக்கவசம் போடணும்னு எல்லாம் கரடியாக் கத்தறாங்க. (யாரும் கேக்கறதில்லைங்கறது வேற விஷயம்) இந்தமாதிரி ஏகப்பட்ட பேர் உக்காந்து போகக்கூடாதுன்னு ஒரு சட்டம் கிடையாதா?<br /><br /><span style="font-weight: bold;">கேட்டது :</span> படம், எழுதியது, பாடியது.... எதுவும் தெரியல... ஆனா பாடல் வரிகள் நல்லா இருந்தது...<br /><br /><span style="color: rgb(0, 0, 153); font-style: italic;">ஒரு கல்... ஒரு கண்ணாடி..</span><br /><span style="color: rgb(0, 0, 153); font-style: italic;">உடையாமல் மோதிக்கொண்டால் காதல்...</span><br /><br /><span style="color: rgb(0, 0, 153); font-style: italic;">ஒரு சொல்... சில மௌனங்கள்...</span><br /><span style="color: rgb(0, 0, 153); font-style: italic;">பேசாமல் பேசிக்கொண்டால் காதல்....</span><br /><br />நல்லா இருக்குல்ல?<br /><br /><span style="font-weight: bold;">படித்தது :</span> மியான்மரின் இன்றைய நிலை. ராணுவ அதிகாரிகள், உள்ளூர் தாதாக்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - இந்த முக்கோண அமைப்பு செய்யும் அட்டுழியமும், செய்யும் ஊழலும், அள்ளும் பணமும்.... அடேங்கப்பா. விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மேலும் மேலும் அளவிட முடியாத செல்வத்தை திரட்டுவதும் நாட்டிலுள்ள மீதி 99% கடும் ஏழ்மையில் உழல்வதும்.... படிப்பவர் கண்ணில் ஒரு சொட்டு கன்ணீர் வரவில்லையென்றால்... ஒருவேளை இடிஅமீனுக்கு சொந்தக்காரராய் இருக்கலாம்.<br /><br /><span style="font-weight: bold;">இடித்தது :</span> குமுதத்தில் ஞானி. இந்திய ரூபாய்க்கு கிடைத்துள்ள சின்னம் பற்றி. இந்தியைத் திணிக்கிறார்களாம். எப்பேர்ப்பட்ட ஆளாய் இருந்தாலும் இந்த தமிழுக்கு குரல் கொடுக்கிறேன்னு எதற்காவது எப்போதாவது ஜல்லியடிக்கிறார்கள். ஆங்கில சின்ன எழுத்து "r" பயன்படுத்தியிருக்கலாமே என்று ஆலோசனை வேறு. புதிய சின்னத்துக்கு இந்தியா முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான யோசனைகள் வரப்பெற்று, பல நிலைகளில் பரிசீலனைக்குப் பிறகு தேர்ந்த்தெடுக்கப்பட்டுள்ளது. இவரும் அனுப்பியிருக்கலாமே.<br /></div>Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-55121579298172349582010-06-14T21:36:00.045+08:002010-06-14T22:37:27.573+08:00ரத்தமும் தக்காளித் தண்ணியும்......வடிவேல் காமெடி மாதிரிதான் இருக்கு. ஆனா வேதனை.......<br /><br /><div style="text-align: justify;">1984 போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்து மேல போட்ட வழக்குல ஒரு வழியா 26 வருஷத்துக்கு அப்பறம் தீர்ப்பு வந்தாச்சு. அவ்வளவு பெரிய பேரிடர். அன்னிக்கு ராத்திரி மட்டுமே 2500 உயிரிழப்பு. அதுக்கு அப்பறமா இந்த 25 வருஷத்துல சாவுகள், உடல் குறைபாடுகள், பிறவிக் குறைபாடுகள், குடிதண்ணீர் மாசு, நிலத்தடி நீர் மாசுன்னு இன்னிக்கு வரைக்கும் அதோட தாக்கம் தொடர்ந்து இருக்கு. இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்குமோ தெரியாது.<br /><br />2010. மெக்சிகோ வளைகுடால ப்ரிடிஷ் பெட்ரோலியம் கம்பெனியோட ஆழ்கடல் எண்ணை கிணறு. 10000 அடி கீழ குழாய் உடைஞ்சு ஒரு நாளைக்கு 40000 பீப்பாய் அளவுக்கு எண்ணைக் கசிவு. 2 மாசம் ஆச்சு. ஆயிரக்கணக்கான சதுரமைல் பரப்புக்கு கடல் மேல எண்ணை மிதக்குது. தண்ணிப் பரப்புக்கு கீழ இருக்கறது இன்னும் கணக்குல எடுத்துக்கல. எடுத்துக்க முடியல. கண்க்கில்லாத கடல் உயிரினங்கள், பறவைகளுக்கு பாதிப்பு. பரவிப் பரவி இப்ப கடற்கரைகளையும் தொட்டாச்சு. சுற்றுச் சூழல் பாதிப்பு, குடிதண்ணீர் பாதிப்பு, காத்துல எண்ணை வீச்சம், கடல்லயே பாதி எண்ணையை எரிக்கறதுல வர புகை, கடலோட மேல்பரப்பு சூடாகுதல்னு அழிவுகள் தொடருது. இன்னிக்கு வரைக்கும் உடைஞ்ச குழாயை முழுசா அடைக்க முடியல. எடுத்த சில முயற்சிகளும் தோல்வி. உலகமே உன்னிப்பா கவனிச்சுக்கிட்டு இருக்கு.<br /><br />முதல் கொஞ்ச நாளைக்கு நான் இல்லை அவன், நானும் இல்லை இவன்னு ஜல்லியடிச்சுக்கிட்டிருந்தாங்க. ஆனா இந்த எண்ணைக்கசிவுனால ஆன இழப்புகளுக்கு ஒவ்வொரு பைசாவையும் ப்ரிடிஷ் பெட்ரோலியம் கம்பெனி திருப்பியே ஆகணும்னு ஒபாமா கண்டிப்பா சொல்லிட்டாரு. பல பில்லியன் டாலர்கள். இதுல நீக்குப்போக்குக்கு இடமே இல்லைன்னு சொல்லிட்டாரு. நல்ல விஷயந்தான். இது மாதிரி அழிவுகளுக்கு காரணமானவங்க எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், எவ்வளவு பெரிய நிறுவனமா இருந்தாலும் விடவே கூடாது. முழுப் பொறுப்பையும் சுமந்தே தீரணும். ஒபாமான்னா சும்மாவா?<br /><br />ஆனா அதே பெருந்தகையாளர் ஒபாமா போபால் விஷவாயு கசிவு இந்தியாவின் உள்நாட்டு ப்ரச்னைன்னு சொல்றாரு. எவ்வளவோ அழுத்தம் குடுத்து யூனியன் கார்பைடு முதலாளிகளுக்கு வெறும் 2500$ அபராதம், 2 வருஷம் சிறை, அதுலயும் அப்பீலுக்கு இடம் இருக்கு. சும்மா உலுலாயிக்கு. இதைப் பத்தி ஒபாமா வாயே திறக்கலியே. ஏன்னா எண்ணை கசிவு அமெரிக்காவுல. விஷவாயு கசிவு இந்தியாவுல. ரெண்டுமே பேரிடர்தான். பெரிய இழப்புகள்தான். மாற்றுக்கருத்தே கிடையாது. ஆனா ஒபாமாவுக்கு.... ஒரு கண்ணுல வெண்ணை இன்னொரு கண்ணுல சுண்ணாம்பு.<br /><br />அமெரிக்காவுக்கு வந்தா அது ரத்தம். அதுவே இந்தியாவுக்கு வந்தா வெறும் தக்காளித்தண்ணி. ஹ்ம்ம்ம்ம்......<br /><br /></div>Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-14886589847992813112010-05-22T21:27:00.000+08:002010-05-23T14:08:57.611+08:00க்ரீஸ்..... கிறீச்.... கிறீச்.....<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-V1slMZn98FFSXEdu05xV9toqZT8vfQGBgzvZgBhamJ3ElgUjs5Z-IGcrF1aM3i0dk92dNm3fpYp48wCmPhCX1LaxXvlSjn_QOtuFQ2cGcMCzBHFmW6Mjr9kIWIUmkHpBoLg3Zm3EM0-z/s1600/eu_greece_crisis2.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 265px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-V1slMZn98FFSXEdu05xV9toqZT8vfQGBgzvZgBhamJ3ElgUjs5Z-IGcrF1aM3i0dk92dNm3fpYp48wCmPhCX1LaxXvlSjn_QOtuFQ2cGcMCzBHFmW6Mjr9kIWIUmkHpBoLg3Zm3EM0-z/s320/eu_greece_crisis2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5474010604239979186" border="0" /></a><br /><div style="text-align: justify;">அடுத்த பொருளாதார நெருக்கடி வந்தாச்சு. நாம எல்லாம் ஆஹா ஓஹோ அட்டகாசம்னு நினைச்சுக்கிட்டு இருக்கற ஐரொப்பிய யூனியன்ல இருக்கற க்ரீஸ் (Greece) நாட்டோட பொருளாதார இயந்திரம் இப்ப கிரீஸ் இல்லாம கிறீச்... கிறீச்சுன்னு கதறுது. நாரசமா இருக்கு சத்தம். என்னதான் ஆச்சு? சிம்பிளா சொன்னா வரவு எட்டணா செலவு பத்தணா. அதோட விளைவு. இது எல்லா நாட்டுலயும் நடக்கறதுதானே? நம்ம இந்திய பட்ஜெட்லயெல்லாம் சாதாரண துண்டா விழுகுது? ஈரோடு ஸ்பெஷல் ஜமுக்காளமே இல்ல விழுகுது. அங்க மட்டும் என்ன ஆச்சு? <span style="font-size:85%;"><span style="font-style: italic;">(போச்சுடா... எங்கயாவது பொருளாதார சரிவுன்னா இவன் ஆரம்பிச்சுடுவானேன்னு நீங்க முனகறது கேக்குது. அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை... எழுதி உங்களை குழப்பியே ஆகணும்)<br /><br /></span></span>மொத காரணம் போன வருஷம் க்ரீஸ் நாட்டோட கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product - GDP) யில் 13%க்கு மேல. ரொம்ப ஒண்ணும் அதிகமில்ல ஜென்டில்மென்... ஜஸ்ட் 400 பில்லியன் டாலர்கள் மட்டுந்தான். சரி அதனால? அதனால என்ன.... அதிக வட்டி, அதிக தவணை, இன்னும் அதிக கடன், அதிக அவநம்பிக்கை. க்ரெடிட் ரேட்டிங் குறைவு. அனுமானிச்சதை விட பட்ஜெட் பற்றாக்குறை ரெண்டு பங்கு. அவ்வளவுதான். யாரும் முதலீடு செய்ய தயாரில்லை. ஐரோப்பிய யூனியனுடைய தலையீடு, க்ரிஸ் எடுத்த செலவு கட்டுப்பாடு மற்றும் சிக்கன நடவடிக்கைகள் எல்லாம் முதலீட்டளர்கள் கிட்ட நம்பிக்கையை உண்டாக்கலை. கொஞ்சம் ஊதாரித்தனமான செலவுக் கொள்கைகள். உதாரணத்துக்கு, அரசு ஊழியர்கள் 40 வயசுலயே ஓய்வு பெறலாம். அவ்ஙளுக்கு ஏதாவது ஆச்சுன்னா அவங்க மனைவி அல்லது மணமாகாத பிள்ளைகள்/பெண்கள் இவங்க அந்த ஓய்வூதியத்தை தொடர்ந்து வாங்கிக்கலாம். இன்னும் மத்த ஐரோப்பிய நாடுகள்ல இல்லாத அதிகப்படியான சலுகைகள். எப்பிடி சமாளிக்க முடியும்?<br /><br />இப்ப சர்வதேச நிதியும், யூனியனும் சேர்ந்து பணத்தைக் கொட்டி மீட்கறோம்னு சொல்றாங்க. யூனியன்ல 15க்கு மேல நாடுகள் இருக்கு. "நான் இங்க ராப்பகலா உழைக்கிறேன். எவனோ அளவுக்கு அதிகமா செலவு பண்ணி போண்டியானதுக்கு என் நாடு ஏன் பணம் குடுத்து அந்த அழுகிப் போன கடன்களை வாங்கி வெச்சுக்கணும்? தலையெழுத்தா?"னு கேக்கறாங்க. நியாயந்தானே.<br /><br />ஐரொப்பிய யூனியன்ல சேரறதுக்கு உண்டான தகுதிகளை காமிச்சு யூனியன் சேர்ந்த எல்லா நாடுகளும், பொருளாதாரத்தைப் பொறுத்தவரையில பல கட்டுப்பாடுகளையும் விதிகளையும் அனுசரிக்கணும். ஒவ்வொரு பட்ஜெட்லயும் இவ்வளவு உற்பத்தி, இவ்வளவு செலவு, இவ்வளவு முன்னேற்ற இலக்குன்னு காமிக்கணும். இந்த இலக்கு யூனியனோட மொத்த பட்ஜெட்டோட ஒத்துப் போகணும். இப்பிடியெல்லாம் இருந்தும் ஏன் இந்த மாதிரி சரிவுகள்?<br /><br />ஐரொப்பிய யூனியனில் 27 நாடுகள் இப்ப இருந்தாலும் 16 நாடுகள்தான் "யூரோ"வுக்கு மாறியவை. இந்த 16 சேர்ந்தது Euro Zone. பொதுவான நிர்வாகம் ஒரு மையத்துல இருந்தாலும் , "யூரோ"வைப் பொறுத்தவரை, அது ஒரு கரன்ஸி அடிப்படையிலான யூனியன் (monetary union). அரசியல் அடிப்படையிலோ அல்லது முழுமையான பொருளாதார யூனியனோ அல்ல. பொருளாதார அடிப்படையில் சில கட்டுப்பெட்டியான நாடுகளும் உண்டு சில ஊதாரி நாடுகளும் உண்டு. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் முதிர்வடையாத கரன்ஸி யூரோ. உள்நாட்டு உற்பத்தி, செலவு வகைகள், சேமிப்பு வழிகள், பல்முனை வளர்ச்சி என்று எல்லா வகையிலும் வேறுபட்ட நாடுகள்.<br /><br />இப்படியான ஒரு கூட்டமைப்பில், கரன்ஸி மட்டும் ஒன்றே என்ற நிலையில் போட்டித்தன்மையை (competitive edge) தக்கவைத்துக் கொள்வது கொஞ்சம் கடினமே. முன்பு இருந்த நிலையை விட ஏற்றுமதிகள் குறையலாம். உதாரணத்திற்கு, இத்தாலி தானியங்கி வாகன வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடு. இருந்தாலும் யூரோ அடிப்படையில், ஜெர்மனி உற்பத்தி ஆகும் வாகனத்துடன் ஒப்பிடும்போது விலையில் போட்டித்தன்மை குறையும்போது, அந்த விலை வேறுபாடு கூட வாகனத்தை விற்பனையிடத்திற்கு கொண்டு சேர்க்கும் போக்குவரத்துக் கட்டணத்தில் அடிபட்டுப் போகும் எனும்போது ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது. கரன்ஸி ஒன்றாகும்போதிலிருந்தே, வருமான குறைபாடுகளை எதிர்பார்த்து செலவினங்களையும் மாற்றியமைப்பது கட்டாயம் என்ற நிலையையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும். அன்னியச் செலாவணி ஏற்றத்தாழ்வுகளை சமாளிக்கும் வேலை குறைவு, சுலபமான வியாபாரம் போன்றவைகளைக் கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு என்ன மாதிரியான விளைவுகள் இருக்கலாம், எப்படி சமாளிப்பது போன்றவற்றை பின்னுக்குத் தள்ளி வைத்தனர். போகப் போக சரியாகும் என்ற அனுமானங்களும் இருந்தன. இப்போது சர்வதேச நிதியமும், யூனியனும் சேர்ந்து க்ரீஸின் கடன்களை வாங்கி 1 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பணத்தைக் கொட்டினாலும் மட்டும் உடனே எல்லாம் சரியாகி விடப் போவதில்லை. க்ரீஸ் தனது செலவினங்களை இறுக்கிப் பிடிக்க வேண்டும். மக்கள் அதிக கட்டுப்பாடுகள், வரிவிதிப்புகள், வங்கி கெடுபிடிகள் எல்லாம் இருக்கும். மக்களோட வாழ்க்கை முறையே மாறலாம். ரொம்ப சிரமமாத்தான் இருக்கும்.<br /><br />க்ரீஸ்க்கு பின்னால் போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின் என்று சரிவுகள் வரிசை கட்டி நிற்கின்றன. ஸ்பெயினும் இத்தாலியும் கூட சமாளித்து விடும். ஆனால் போர்ச்சுகல் சவாலாக இருக்கும்.<br /><br />இது இப்பிடியேதான் இருக்குமா? நிலையான வழி எதுவும் இல்லையா? க்ரீஸ்க்கு தனியான கரன்ஸி இருந்தா அதை மதிப்பு குறைச்சு போட்டித்தன்மையை கொண்டுவர முடியும். ஆனா யூரோவுல இருந்து வெளியில வர அரசியல் உறுதி வேணும். அது இப்போதைக்கு இன்னும் கடினமா இருக்கலாம் ஆனா நீண்டகால தீர்வு அதுவாத்தான் இருக்க முடியும்.<br /><br />மக்கள் ஒப்புதலோடதான் யூரோவுக்கு வந்தோம்னு சொல்லலாம். ஆனா பின்னணி அரசியல் விளையாட்டுகள் ரொம்ப. கரன்ஸியை வெச்சுதான் இன்னிக்கு சர்வதேச அளவுல போட்டித்தன்மையை தக்க வெச்சுக்க முடியும். இல்லைன்னா அமெரிக்கா சைனா கிட்டப் போய் யுவான்-டாலர் மதிப்பை சரி பண்ணச் சொல்லி ப்ரஷர் குடுப்பாங்களா?<br /><br />1999ல அர்ஜென்டினால இதே மாதிரி நிலைமை வந்து 3 வருஷம் ஆச்சு நிமிர்ந்து உட்கார. அப்ப பெசொவைத் தவிர இன்னொரு கரன்ஸியை உருவாக்கி உள்நாட்டு புழக்கத்துக்காக விட்டு, பெசோவை டாலருக்கு எதிரா குறைச்சு ஏற்றுமதியை அதிகரிச்சு, இறக்குமதிகளை தடை பண்ணி, வங்கிகள்ல இருந்த டாலரை எல்லாம் பெசோவா மாத்தின்னு தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு ஒருவழியா மேல வந்தது. பார்க்கலாம் க்ரீஸ் என்ன ஆகுதுன்னு. இப்போதைக்கு நம்ம நாட்டு பங்கு மார்க்கெட் ரொம்ப விழாம இருக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgj5OBiMXXzWv1_tv04kN7jb1zUhJdYd1Y-WhtlCxUiNuUH7yh2F1repIZ4B47pEETSv9JAjbPctXVahpab4iYn7tCj7ERwNKiwpH8xe-4T9mA2KsVc7FXNt0t3oMW0o0eeFZEHx-SPRuaw/s1600/eu_greece_crisis.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 165px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgj5OBiMXXzWv1_tv04kN7jb1zUhJdYd1Y-WhtlCxUiNuUH7yh2F1repIZ4B47pEETSv9JAjbPctXVahpab4iYn7tCj7ERwNKiwpH8xe-4T9mA2KsVc7FXNt0t3oMW0o0eeFZEHx-SPRuaw/s320/eu_greece_crisis.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5474017617294981602" border="0" /></a><br /><br /></div>Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-1281461654173309292010-05-09T14:47:00.033+08:002010-05-10T22:44:31.593+08:00கிச்சடி 11.05.2010<div style="text-align: justify;">"சொறா" படத்தைப் பாக்காமயே நிறையப் பேர் நிறைய எழுதியாச்சு. நான் ஒருத்தந்தான் பாக்கின்னு நினைக்கிறேன். அது ஒரு குறையா இருக்கலாமா? நம்ம நண்பர்கள் வட்டத்துல பேசும்போது கேட்டவை:<br /><br />"கமல் ஒரே படத்துல் பத்து ரோல்ல நடிச்சாரு ; விசய் பத்து படத்துல ஒரே ரோல்ல நடிக்கிறாரு (!!) "<br /><br />"நல்ல வேளை.... ஒவ்வொரு படத்துலயும் வேற வேற ஹீரொயின்க... இல்லாட்டா என்ன படம் பாத்துக்கிட்டுருக்கோம்னே தெரியாது"<br /><br />"இது ஒருதடவை பாக்கறதுக்கு வேட்டைக்காரன் 100 தடவை பாக்கலாம்"<br /><br />"அம்பது படம் ஆயிடுச்சா? சீக்கிரம் அரசியலுக்கு இழுத்துக்கிட்டு போங்கப்பா.... அங்கயாவது வேற மாதிரி நடிக்கிறாரான்னு பாக்கலாம்"<br /><br />*****************************<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS4Z0oWZCUxQnJL6sDz1TYMIaNWNp7fee_780CKV2z-TCAfdtPFKzXH8GCfkbgweZguTjcyI9QgVkUOCHSmfoNB0H6rBr2s8FYeRrfAkcdB_r_h77swvpkfvpk-_gNGcVYBZZSLRSchSY2/s1600/marina-bay-sands-render.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 191px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhS4Z0oWZCUxQnJL6sDz1TYMIaNWNp7fee_780CKV2z-TCAfdtPFKzXH8GCfkbgweZguTjcyI9QgVkUOCHSmfoNB0H6rBr2s8FYeRrfAkcdB_r_h77swvpkfvpk-_gNGcVYBZZSLRSchSY2/s320/marina-bay-sands-render.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5469637638220942994" border="0" /></a><br /><br />சிங்கப்பூரின் ரொம்பவும் எதிர்பார்க்கப்பட்ட "மரினா பே சேண்ஸ்" உல்லாச/சூதாட்ட நகரம் (சிலருக்கு நரகம்) திறந்தாச்சு. (<span style="font-style: italic;">அதுலயும் அந்த டி.என்.ஏ ஏணி மாதிரி நடைபாலம்... க்ளாஸ்... அது ஒரு ஆர்கிடெக்சுரல் மார்வல்!!)</span> சூதாடறதுக்கு க்யூவுல நின்னு என்னவோ தலைவர் படம் ரிலீஸ் முதல் ஷோ பாக்கற மாதிரி திடுதிடுன்னு ஓடறாங்க மக்கள். யார் அதிர்ஷ்டம் எப்பிடியோ? திறந்து 3 வாரம் ஆச்சு. தினமும் ஏதாவது பிரச்னைக இருந்துக்கிட்டே இருக்கு போல. "கரண்ட் இல்ல ; ஏசி நின்னு போச்சு ; லிஃப்ட்ல மாட்டிக்கிட்டாங்க ; சிங்கப்பூர் இமேஜ் டேமேஜ்"ன்னு தினம் ஒரு புலம்பல். இதெல்லாம் நமக்கு சாதாரணமப்பா.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgK7jFeILmFwCjZqWGP2_SghipvXo_XNun5AHvzOnkhyAkCZwbw1x_bCiYO3rJ3LXmUDQUu9uVunKPBKur_FgW0ykn4KEsbctdlfwPfFsmGVitLFS09sVO9veMGWG6U8GIUqwLjSWZcdt4_/s1600/Double_Helix_Bridge_Under_Construction.JPG"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgK7jFeILmFwCjZqWGP2_SghipvXo_XNun5AHvzOnkhyAkCZwbw1x_bCiYO3rJ3LXmUDQUu9uVunKPBKur_FgW0ykn4KEsbctdlfwPfFsmGVitLFS09sVO9veMGWG6U8GIUqwLjSWZcdt4_/s320/Double_Helix_Bridge_Under_Construction.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5469652208290169506" border="0" /></a><br /><br /><br />*****************************<br /><br />நண்பர் ஒருத்தர் சவுதில வேலை பாக்கறார். ஊருக்கு வந்துபோக 3 மாசம் முன்னாலயே லீவு வாங்கி, டிக்கட் எல்லாம் புக் பண்ணிட்டு, கிளம்பறதுக்கு 2 நாள் முன்னால போய் ஆபீஸ்ல பாஸ்போர்ட் கேட்டிருக்காரு. பகீர் !!! பாஸ்போர்ட்டைக் காணோமாம் !! மறுநாளும் அகப்படல. நொந்து போய், கிளம்பற அன்னிக்கு கார்த்தால போய் நானே தேடிப் பாக்கறேன்னு சொல்லி தேடியிருக்காரு. இன்னொரு பகீர் !! டேபிள் ஆடுதுன்னு டேபிள் காலுக்கு முட்டுக் குடுக்கறதுக்காக ரெண்டு பாஸ்போர்ட்டுகளை வெச்சுருக்காங்க. எப்பிடிடா இப்பிடியெல்லாம் யோசிக்கிறீங்கன்னு மனசுக்குள்ள வசவு பாடிட்டு, அடிச்சு புடிச்சு ஊர் வந்து சேந்தாச்சு. ஆனா அவங்க ரொம்ப சாதாரணமா "அதான் கிடைச்சுடுச்சுல்ல... கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்"னு விரட்டிட்டாங்களாம். மூளை தலைக்குள்ளதான் இருக்கா இல்லை முட்டில இருக்கான்னு புலம்பித் தள்ளிட்டாரு. ராட்சசன் உசுரு ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு கிளி கிட்ட இருக்குங்கற மாதிரி, நம்ம உசுரு அந்த பாஸ்போர்ட். அதுவும் சவுதி மாதிரி நாட்டுல.... ம்ம்.... என்ன சொல்ல?<br /><br />*****************************<br /><br />ஓசில டிக்கட் கிடைச்சுதுன்னு "அயர்ன் மேன் 2" குடும்பத்தோட போனோம். காமிக் புக்கை விடவும் காமிக்கலா இருந்தது. படம் அமெரிக்காவுல ஹிட்டாம். என்னங்கடா உங்க ரசனை? டைட்டானிக், பொசைடான், ஐடி4, ஆர்மகெட்டான்ன்னு பிரமாண்ட படங்களை எடுத்த கை காயறதுக்குள்ள இது மாதிரி பேத்தல் படங்களும் எடுக்கறீங்க. அம்புட்டு பெருசா ஒரு வில்லனை டெவலப் பண்ணிட்டு பொசுக்குனு அவன் கதையை முடிச்சுட்டு, கதையை முடிக்க முடியாம.... போங்கப்பா. அடுத்த"அயர்ன் மேன்3" ஓசி டிக்கட் கிடைச்சா ....பாக்கலாம்......பாத்துட்டு இதே மாதிரி......<br /><br />*****************************<br /></div>Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-67767228214916235632010-04-28T22:00:00.002+08:002010-04-27T23:10:44.352+08:00ஆழ்கடல்... ஒற்றைப்படகு... உறுதியான மனம்<div style="text-align: justify;">Solo <a href="http://en.wikipedia.org/wiki/Circumnavigation">Circumnavigation</a> - உலகத்தை தன்னந்தனியாக ஒரு படகில் சுற்றி வருவது. இமயத்தின் உச்சியை அடைவது போல ஒரு உலக சாதனையாகக் கருதப்படும் இந்தப் பயணத்தை வெகு சிலரே முயற்சி செய்துள்ளனர். 15-ஆம் நூற்றாண்டில் மெகலனின் பயணத்தை ஒப்பிட்டு அதிலிருந்து சில விதிமுறைகளை வகுத்து இந்த "தனி உலகப்பயணம்" மிகச் சிறந்த சாதனையாகக் கருதப்படுகிறது.<br /></div><div style="text-align: justify;"><br />விதிகள் ரொம்பவே "சுலப"மானவை:<br />1. பூமியின் விட்டத்தில் இரண்டு நேரெதிர் இடங்களைக் கடக்க வேண்டும்.<br />2. பூமத்திய ரேகை, அட்சரேகை, தீர்க்க ரேகை இவைகளை இரண்டு முறை கடக்க வேண்டும்.<br />3. குறைந்தது 40,000 கி.மீ. தூரம் பயணம் செய்ய வேண்டும்.<br />4. பனாமா, சூயஸ் போன்ற பெருங்கால்வாய் வழிகளைத் தவிர்க்க வேண்டும். எனவே தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ந்யூசிலாந்து போன்ற நாடுகளின் தென்முனைகளை சுற்றியே வர வேண்டும்.<br />5. பயணத்தை ஆரம்பித்த இடத்திற்கே திரும்ப வந்து சேர வேண்டும்.<br /><br />இப்படிப்பட்ட ஒரு கடுமையான சாதனைப் பயணத்தை மேற்கொள்ள உடல்வலிமையை விட அதிகமான மனவலிமை தேவை. நமது இந்தியக் கடற்படையின் கமாண்டர் திலிப் டோண்டே சென்ற ஆகஸ்ட் 15 அன்று இந்த பயணத்தை மும்பையிலிருந்து துவக்கி கிட்டத்தட்ட 75% தூரத்தைக் கடந்து விட்டார். இந்த பயணத்திற்காகவே கோவாவில் உள்ள ஒரு கப்பல் கட்டுமான நிறுவனத்தால் "மாதெய்" என்ற கண்ணாடிநார் பாய்மரப்படகு (fibreglass sail) பலவிதமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளுடன் விசேடமாக வடிவமைக்கப்பட்டது. இந்த பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் இந்திய கடற்படை செய்துள்ளது. ஏறத்தாழ ஒரு வருட காலம் பிடிக்கும் இந்த பயணத்தை தொடர்ந்து கண்காணிக்க ஒரு சிறப்பு குழுவே அமைக்கப்பட்டிருக்கிறது.<br /><br />சுவாரஸ்யாமான அவரது பயண அனுபவங்களை அவருடைய <a href="http://sagarparikrama.blogspot.com/">இந்த </a>வலைப்பூவில் காணலாம். இந்திய விமானப்படையில் இருக்கும் என் அண்ணன் கமாண்டர் திலிப் டோண்டேவின் நண்பர் என்பது ஒரு பெருமையான செய்தி.<br /><br /><div style="text-align: center;"><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8GoHv7lzVoH3gIX3SXEfH5EyVO616BvMvVSd3BS8qMZnvpj4k5KAO_nMAbMdafkImG5DJlC8RHqDUpqrOM6p_tVGxEGeWp4lC1L6vWOzzj7n8UCrBM8drnjlfOiEUJS4fuoEYV421-EPo/s1600/sagarparikrama-1.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 320px; height: 191px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj8GoHv7lzVoH3gIX3SXEfH5EyVO616BvMvVSd3BS8qMZnvpj4k5KAO_nMAbMdafkImG5DJlC8RHqDUpqrOM6p_tVGxEGeWp4lC1L6vWOzzj7n8UCrBM8drnjlfOiEUJS4fuoEYV421-EPo/s320/sagarparikrama-1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5464829748762150882" border="0" /></a><br /></div><br /><div style="text-align: center;">ஆகஸ்ட் 28, 2009<br /></div><div style="text-align: center;"><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTTAj1kUX-wK20HaL402LXzY9r-2TQ5gybbZRl9-z5wMb06u4YfZBmMZUtOs5HSoLcQTbOabsKz1oqGG2yxSf9nqYA2C10r0rCQw0M9aMfZ1tQoegRhVa4g5zIqhw0NAtEk4SnjKDZPDnS/s1600/sagarparikrama-2.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; cursor: pointer; width: 320px; height: 206px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTTAj1kUX-wK20HaL402LXzY9r-2TQ5gybbZRl9-z5wMb06u4YfZBmMZUtOs5HSoLcQTbOabsKz1oqGG2yxSf9nqYA2C10r0rCQw0M9aMfZ1tQoegRhVa4g5zIqhw0NAtEk4SnjKDZPDnS/s320/sagarparikrama-2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5464829914526813618" border="0" /></a><br /></div><br /><div style="text-align: center;">ஏப்ரல் 22, 2010<br /></div><br /><br />கொசுறு: இந்த செய்தியை ஒரு நண்பரிடம் மிகவும் சிலாகித்து சொன்னபோது, "அடப் போய்யா, நாட்டுல ஆயிரம் பிரச்னைக.... முக்காவாசி ஜனத்துக்கு கஞ்சிக்கு காசில்ல.... இவுங்க கடல்ல உலகத்தை சுத்தறாங்களாம்.... உருப்படியா எதாவது பண்ணச்சொல்லு" என்றார். ஒருவகையில் நியாயமான கேள்விதான் என்றாலும், சிக்கல்கள் தீர்ந்த பின்னரே சாதனை என்றிருந்தால் நாம் என்றுமே சாதனை புரிய முடியாது.<br /></div>Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-52652164364873268172010-04-26T21:00:00.002+08:002010-04-26T21:33:15.824+08:00நான் என்றால் அது கவிதை !!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_C5WkxsB-YEvikudAWHuaUHcDoXm1DuI7MRlPFYAGSLbxePKNgP57D__yQYGAHUaubhh5DQQN3AX_UdiwvMvzmkJl7MTLkI4H6N5PHmWjtc15263McA7mDwSVypmTMGvjZYfi3EW9x5aP/s1600/poem.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 320px; height: 215px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_C5WkxsB-YEvikudAWHuaUHcDoXm1DuI7MRlPFYAGSLbxePKNgP57D__yQYGAHUaubhh5DQQN3AX_UdiwvMvzmkJl7MTLkI4H6N5PHmWjtc15263McA7mDwSVypmTMGvjZYfi3EW9x5aP/s320/poem.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5464062641158851602" border="0" /></a><br /><div style="text-align: justify; color: rgb(0, 0, 0);">என் கவிதைகளைப் வாசித்ததும்<br />உன் கண்களில் வழியும் ரௌத்திரம்தான்<br />என் மகிழ்ச்சியின் இடுபொருளாகிறது,<br />காரணம் நானெனில் நொடிப்பொழுதில் மிதக்கிறேன்.<br /><br />உனது கோபமோ அழகைக்கூட்டிச் செய்யப்பட்டது,<br />ரசித்துக்கொண்டேயிருக்கலாம்.<br />எனது மகிழ்ச்சியோ நறநறக்கும் உன் பற்களின் ஓசையில்<br />பிறந்து தொடரும் உனது சினத்தில் பல்கிப் பெருகுகிறது.<br />அந்தப்பல் வரிசையை பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.<br /><br />எந்தக் கவிதையில் எந்த கருப்பொருளில் ஒளிந்திருக்கிறது<br />என் கவிதையின் ஜீவன் எனும் தேவரகசியங்களையெல்லாம்<br />நீதான் கற்றுத்தருகிறாய்.<br />உன் கோபங்கள் பசியாற்றுவதாய் ஒருபோதும் இருப்பதில்லை,<br />அதை மேலும் கிளறிக்கொண்டேயிருப்பதாயிருக்கின்றன.<br /><br />நீ என் கவிதைகளின் மீது கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு ,<br />ஐ பி எல் போட்டி முடிவுகள் மீது ரசிகர்களுக்கிருக்கும்<br />எதிர்பார்ப்பை விடவும் அதிகமானது<br />என்பதை பெருமிதத்தோடு ஒப்புக்கொள்கிறேன்.<br /><br />உன் சினம் அது என்னால், கவிதை எனில் அது நான் என்றிருக்க<br />நான் எண்ணத்தான் செய்கிறேன்.<br />ஆனால் நீ அதை சொல்லியே விடுகின்றாய் உன் பின்னூட்டத்தில்...<br /><br /></div><p style="text-align: justify; color: rgb(0, 0, 0);">கவிதையின் முதல் வரிக்கு நீ சொல்வது,</p><div style="text-align: justify; color: rgb(0, 0, 0);"> </div><p style="text-align: justify; color: rgb(0, 0, 0);">'அய்யோ... அய்யோ... அய்யோ....'</p><div style="text-align: justify; color: rgb(0, 0, 0);"> </div><p style="text-align: justify; color: rgb(0, 0, 0);">உனக்கான எனது இரண்டாவது கவிதைக்கு நீ சொல்வது,</p><div style="text-align: justify; color: rgb(0, 0, 0);"> </div><p style="text-align: justify; color: rgb(0, 0, 0);">'முடியல.... முடியவே இல்ல....'</p><div style="text-align: justify; color: rgb(0, 0, 0);"><br />*****************************<br /><br />கவிஞர் ஆதியின் விருப்பத்திற்கிணங்க நிகழ்ந்த கவிதை இது. இது அவருடைய <a href="http://www.aathi-thamira.com/2010/04/blog-post_21.html">இந்தக் கவிதை</a>க்கு எதிர் கவிதையாக இருக்குமோ என்று நினைப்பீர்களேயானால் அதற்கு நான் பொறுப்பல்ல.<br /><br /><span style="color: rgb(51, 51, 255);font-size:85%;" ><span style="font-style: italic;">@ ஆதி : ச்சாட்ல வந்து கவிதையா கேட்கிறீர் கவிதை? இந்த கவிதை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?</span></span><br /><br /></div>Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-55728270787989339162010-03-24T21:25:00.032+08:002010-04-25T01:46:24.452+08:00த்யானமும் வியாக்யானமும்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVVDAl0Ycp0f-ceQ0XLWM8eBTTzFVyOj9izliGQkWggmoiE2SCX6-npoDpqyq9OAIsZDXDr01IyQDAWwPvG3FQKTALS6XEk4Cb3l3B7MSVPItm63ATBAHvu_Ob4AT_IN5q_u9_BETgWf3B/s1600/meditation.jpg"><img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 227px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgVVDAl0Ycp0f-ceQ0XLWM8eBTTzFVyOj9izliGQkWggmoiE2SCX6-npoDpqyq9OAIsZDXDr01IyQDAWwPvG3FQKTALS6XEk4Cb3l3B7MSVPItm63ATBAHvu_Ob4AT_IN5q_u9_BETgWf3B/s320/meditation.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5463761358531184482" border="0" /></a><br /><div style="text-align: justify;">போன மாதம் பதிவர்கள் ஸ்வாமி ஓம்காரும் கேபிள்காரும் ... மன்னிக்க... கேபிள் சங்கரும் வந்திருந்தனர். வேலைப்பளு காரணமாக முதல் இரண்டு நாட்கள் தவிர சந்திக்க முடியவில்லை. பதிவர் சந்திப்புக்கும் செல்ல இயலாத நிலை. வந்த மறுநாள் வடபத்திரகாளியம்மன் கோவிலில் திரு.ஓம்காரின் "தினம் தினம் திருமந்திரம்" சொற்பொழிவுக்குப் போனதில் செவிக்கும் வயிற்றுக்கும் நிறையவே உணவு கிடைத்தது.<br /><br />சொற்பொழிவின் முடிவில் கேள்வி நேரத்தின்போது "த்யானம் செய்வதன் மூலம் நாம் அடையும் பயன்கள் என்ன?" என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஸ்வாமி ஓம்கார் பதிலிறுக்கும்போது "பயன்கள் என்று எதுவும் சொல்ல முடியாது. அது ஒரு அனுபவம். அது தனிப்பட்ட முறையில் அவரவர் அனுபவத்தில் உணர வேண்டியது" என்று சொன்னார். அதை ஒட்டி நாமும் ஒரு இடுகை இடலாமே என்று கணநேரத்தில் தோன்றினாலும், இன்றுதான் அதை தட்டச்ச நேரம் கிடைத்தது.<br /><br /><span style="font-weight: bold;">பொறுப்பி :</span> இந்த இடுகையிலுள்ள கருத்துகள் நான் படித்து, கேட்டு, உணர்ந்ததன் மூலமான சொந்தக் கருத்துக்களே.<br /><br />***<br /><br />அரசன் ஒருவனுக்கு திடீரென ஒருநாள் ஒரு கேள்வி எழுந்தது. அந்த ஊரிலிருந்த ஒரு ஆசிரமத்தில் உள்ள துறவிகள் என்ன செய்து உயர்ந்த நிலையை அடைந்தார்கள்? தன்னை விட அதிகமாக மக்களால் மதிக்கப் படுவதற்கு என்ன காரணம்? இதை தெரிந்து கொண்டு வரலாம் என்று அங்கே சென்று தலைமை குருவை சந்தித்தான்.<br /><br />"நீங்களெல்லாம் இங்கே என்ன செய்து இப்படி ஒரு உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். கொஞ்சம் விளக்க முடியுமா?<br /><br />"தாராளமாக. என்னோடு வாருங்கள். இதோ படித்துறை. இங்கே நாங்களெல்லாம் குளிக்கிறோம். இதோ கற்கள். இங்கே துணிகளைத் துவைத்து அந்த மரங்களில் உலர்த்தி காய வைக்கிறோம். பிறகு அதோ அந்த சிறிய கூடத்தில் அமர்ந்து உண்கிறோம். இந்த மடத்தில் மக்களை சந்திக்கிறோம். அவ்வளவுதான்..."<br /><br />மிகுந்த கோவத்துடன் கேட்டான். "என்னை கேலிக்குள்ளாக்குவது போல இருக்கிறதே? அதோ... அந்த தியான மண்டபத்தில் என்ன செய்கிறீர்கள்? அங்கேதானே விஷயமே இருக்கிறது...."<br /><br />"அதுவா? நீ என்னிடம் கேட்டது நாங்கள் என்ன <span style="font-weight: bold;">செய்கிறோம்</span> என்பது. நாங்கள் <span style="font-weight: bold;">செய்வதை</span>யெல்லாம்தான் உனக்கு எடுத்துச் சொன்னேன். அந்த தியான மண்டபத்தில் நாங்கள் ஒன்றும் செய்வதில்லை. அதனால்தான் உன்னிடம் சொல்லவில்லை. "<br /><br />***<br /><br />த்யானம் "செய்தல்" என்பதே சரியா? த்யானிப்பதே நாம் செய்து கொண்டிருக்கிறவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக விடுவதற்காகத்தான். தியானம் என்பதன் பொருள் "ஆழ்ந்து நோக்குதல்". மனம் அமைதியாவது ஒன்றுதான் நாம் தியானத்தில் இருப்பதன் மூலம் "அடைவது". ஆனால் மனத்தை ஒருமுகப்படுத்தி தியானத்தில் அமர்வது அவ்வளவு சுலபம் அல்ல. இன்றைய பரபரப்பான உலகில் ஒரே சமயத்தில் பல வேலைகளை (multi tasking) செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது தியானிப்பது என்பது கடினமான காரியமே. தியானத்தில் இருக்கலாம் என்று அமரும்போதுதான் ரேஷன் சர்க்கரை, மின்வெட்டு, தண்ணீர் வராதது, கொடுத்த கடன் எல்லாம் நினைவில் ஓடும். மனதை ஒருமுகப் படுத்தி எண்ணங்களே இல்லாமல் ஓயச் செய்வது என்பது எளிதில் கைகூடாத ஒரு கலை.<br /><br />அதனால்தான் நம் முன்னோர்கள் ஏதோ ஒன்றில் மனதை நிறுத்தி அதனை ஆழ்ந்து கவனிப்பதன் மூலம் மனதை அமைதிப்படுத்த முடியும் என்று உணர்ந்தனர். உணர்த்தினர். அதற்கு பக்தி ஒரு சிறந்த வழி எனவும் வலியுறுத்தினர். கண்ணனோ கீதையில் கர்ம யோகத்தை வலியுறுத்தினான். ஏனெனில் பக்தியை வலியுறுத்துவது கூட ஒரு சாராருக்கு ஏதோ ஒன்றைத் திணிப்பது போல இருக்கலாம் என்பதாலும், உலக வாழ்க்கையில் செயல் (கர்மம்) இல்லாமல் இருக்க முடியாது என்பதால் செய்யும் செயலில் மனதை நிறுத்தி செயலையே தியானிப்பதன் மூலம் மனம் அமைதி பெறும் என்பது கண்ணனின் பார்வை.<br /><br /><span style="font-size:85%;"><span style="font-style: italic;">(ஒரு இடைச்செருகல். கர்ம யோகத்தை சொல்லும்போது "செயலைச் செய்; பலனை எதிர்பாராதே" என்ற விளக்கம் பரவலாக இருக்கிறது. ஆனால் கீதையில் சொன்னது "செயலைச் செய்வதில் மட்டுமே நமக்கு choice உண்டு ; அதன் விளைவில் அல்ல ; எப்போதும்... ; எனவே விளைவில் பற்று இல்லாமல் இரு ; அதற்காக செயல் செய்யாதவனாகவும் இருக்காதே" என்பதே. அதனால்தான் செய்யும் செயலையே தியானித்து செய் என்கிறான் கண்ணன்)</span></span><br /><br />என்றாலும் இப்படித்தான் தியானிக்க வேண்டும், இதுதான் சிறந்த வழி என்றெல்லாம் எதுவும் இல்லை. அவரவருக்கு தெரிந்த முறையில் ஒரு பொருளையோ, ஒரு கருத்தையோ பற்றி ஆழ்ந்து கவனிப்பது கூட ஒரு வகையில் தியானமே. நமக்குப் பிடித்த நடிகர், தலைவர், சினிமா, மலர், பாடல் , முதுகு வலி, கொசுக்கடி.... இப்படி எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் ஆழ்ந்து அனுபவிக்கும்பொழுது முடிவில் அது தன்னை - ஒரு உண்மையை, ஒரே உண்மையை - வெளிப்படுத்தும். அது ஒரு அனுபவம். ஆனந்த அனுபவம். ஒரு உணர்வு. ஒரு awareness. விவரிக்க வார்த்தைகளற்ற உணர்வு. பிறரிடம் விவரிக்க தோன்றக் கூட செய்யாத ஒரு உணர்வு. அந்த awarenessதான் மோட்சம், நிர்வாணம், சூன்யம், enlightenment, liberation என்று பல விதமான வார்த்தைகளால் சொல்லப்படுகிறது.<br /><br />பக்தி யோகமோ, கர்ம யோகமோ, நாத யோகமோ, ஸ்புரண யோகமோ எதை வேண்டுமானாலும் - அதன் மையக்கருத்து அல்லது தன்மை மனத்தை அமைதிபடுத்துவது ஒன்றே என்று இருக்கிற வரையில் - பின்பற்றலாம். வழி எதுவாக இருந்தாலும் முடிவு ஒன்றுதான். அவரவர் சொந்த அனுபவத்தில் பெறவேண்டிய ஒன்றை யாரும் யாருக்கும் விளக்கவோ, விளங்க வைக்கவோ முடியாது.<br /><br />அப்படி விளங்க முடியாத ஒன்றுக்காக எதற்காக மெனக்கெட வேண்டும்? விளங்காத புதிராகவே இருந்து விட்டுப் போகட்டுமே.... எனக்கு என்ன இழப்பு வந்து விடும்? மிகச்சரி. தியானத்தில் "அடைவது" என்று ஒன்றும் இல்லை என்பதால் "இழப்பு" என்றும் எதுவும் இல்லை. சரியா?<br /></div>Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-28489579644084501332010-02-21T22:42:00.036+08:002010-03-09T22:16:39.980+08:00கிச்சடி 08.03.2010<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIGGhp_KSqeRRWh1NV1VFrFoPvjgMdpMx8PKSdXO_3ZWZFwswYcSMr88ORZWYdy0hMr44wqbEYbDCje8RjXJAnUVAC-5-eaikQOvgeTrviGTDTlW6Hn3tlFj1xI45_8H4yUACaFqr1Ec3j/s1600-h/Im_back.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 304px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgIGGhp_KSqeRRWh1NV1VFrFoPvjgMdpMx8PKSdXO_3ZWZFwswYcSMr88ORZWYdy0hMr44wqbEYbDCje8RjXJAnUVAC-5-eaikQOvgeTrviGTDTlW6Hn3tlFj1xI45_8H4yUACaFqr1Ec3j/s320/Im_back.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5446634632498304338" border="0" /></a><br /><div style="text-align: justify;">மன்னிக்கணும் மக்களே.... ரொம்ப நாளாச்சு வலைப்பக்கமா வந்து. "ஏன் இன்னும் எழுதல? என்னதான் வேலைன்னாலும் ஒரு இடுகை கூட எழுத முடியாதா என்ன? எப்ப அடுத்த இடுகை வரும்னு உங்க திண்ணைலயே குத்த வெச்சு உக்காந்து முட்டி வலிக்குது. சீக்கிரம்... சீக்கிரம்.... " இப்பிடியெல்லாம் தினமும் ஏகப்பட்ட கடுதாசி, மெயில், ஃபோன் வந்ததுன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க? ஒரு 'பிரபல' பதிவன் வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பான்னு கவுண்டர் தட்டிக் குடுத்ததுனால போனாப் போகுதுன்னு விட்டுட்டு மறுபடி வந்தாச்சு. <span style="font-style: italic;">ம்ம்..ம்ம்.. மேல... மேல....</span><br /><br /><div style="text-align: center;">* * * * * * * * * * * * * * *<br /><br /></div>கொஞ்ச நாள் அசந்து மறந்து இருந்தா நாட்டுல என்னென்னமோ நடந்து போச்சு.<br /><br />முதல்ல மகிழ்ச்சிகள் :<br /><br />- கேபிளார் & பரிசலாரின் புத்தக வெளியீடுகள்<br />- கேபிளார் வழக்கம்போல தினம் 5000, 6000 ஹிட்டுனு போட்டு 8 லட்சம்<br />தாண்டிட்டார்<br />- நண்பர் அருமை அண்ணன் அப்துல்லா மூணு இடுகைகள் எழுதிட்டார்<br />- சிங்கை சிங்கம் "<a href="http://kirukkugiren.blogspot.com">அறிவிலி ராஜேஷ்</a>" இடுகைகளை கடுகு, ஜெ.மோ. போன்ற ஜாம்பவான்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்<br />- பல புதிய பதிவர்கள் வருகை<br /><br />எல்லாருக்கும் ஊர்ல உலகத்துல இருக்கற எல்லா சாமி மற்றும் ஆசாமிகளோட ஆசிகளும் வாழ்த்துகளும். சும்மா வெச்சுக்கோங்க.....<br /><br />சில அசௌகரியங்கள் :<br /><br />- பழமையார் vs வினவு குரூப்<br />- தண்டோரா vs வினவு குரூப்<br />- பரிசலாருக்கு நேர்ந்த விபத்து<br /><br />எல்லாரும் இப்ப பரம சௌக்கியம்.<br /><br /><div style="text-align: center;">* * * * * * * * * * * * * * *<br /></div><br />கதவைத் தொறந்து வெச்சா காத்து வருமா? வரும் வரும். ஆனா கேமராவை ஆன் பண்ணி வெச்சா? என்னென்னமோ வந்துது.<br /><br /><span style="font-style: italic;">"நித்தமும் ஆனந்தமே" சொன்னவர் வீட்டினுள்</span><span style="font-style: italic;"><br /></span><span style="font-style: italic;">சத்தமின்றி யோர்கருவி வைத்து - அத்தனையும்</span><br /><span style="font-style: italic;">அம்பலம் ஏற்றிட அயராது (உ)ழைத்திட்ட</span><span style="font-style: italic;"><br /></span><span style="font-style: italic;">பின்புலத் தாருக்கு நன்றி.</span><br /><br /><div style="text-align: center;">* * * * * * * * * * * * * * *<br /><div style="text-align: left;"><br /><div style="text-align: justify;">சமீபத்துலதான் "அபியும் நானும்" டிவில பாத்தேன். சில டயலாக்குகள் அற்புதம். குறிப்பா "உனக்கு சரியான வாழ்க்கைத் துணையைத் தேடிக்கறது உன்னோட உரிமை மட்டுமில்லை; கடமையும் கூட"ன்னு பிரகாஷ்ராஜ் த்ரிஷா கிட்ட சொல்றது.... அருமை. ராதாமோகனுக்கு சுத்திப் போடணும்.<br /><br />இன்னொரு படம் "The Shahshawnk Redemption". படத்தைப் பத்தியோ மார்கன் ஃப்ரீமன் நடிப்பைப் பத்தியோ, டைரக்சன், எடிட்டிங் பத்தியோ சொல்ல எனக்கு அவ்வளவு அறிவு இல்லை. வாய்ப்பு கிடைச்சா நீங்களே பாத்து அனுபவியுங்க.<br /><br />நம்மாளு க்றிஸ்டஃப் வால்ட்ஸ் ஆஸ்கார் வாங்கிட்டாரு. <a href="http://thuklak.blogspot.com/2009/09/inglourious-basterds-2009.html">Inglourious Bastards</a> பத்தி நான் ரொம்ப சிலாகிச்சு எழுதும்போதே நினைச்சேன். இதெல்லாம் போய் ஊருக்குள்ள சொல்லுங்க "அண்ணன் நல்லவரு ; ம்ம்ம்ம்... வல்லவரு ; ஆஸ்காராலாஜி தெரிஞ்சவரு "ன்னு.<br /><br /><div style="text-align: center;">* * * * * * * * * * * * * * *<br /></div><br />கீ போர்ட் கத்துக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. நம்ம ஆசையைப் பாத்து புல்லரிச்சுப் போன ஒரு நண்பர் "ஆஹா... அதுக்கென்ன... நானாச்சு"ன்னு சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சுட்டாரு. அடுத்த மாசம் "பில்ஹார்மோனிக்" ஆர்கெஸ்டிராவுல ஒரு சிம்ஃபனி பண்ணலாமான்னு யோசிச்சுக்கிட்டுருக்கேன். "ஹங்கேரில அவுக கூப்டாக ; லண்டன்ல இவுக கூப்டாக ; ஆஸ்திரியாவுல அல்லாரும் கூப்டாக" அப்பிடின்னெல்லாம் நான் பீலா உடற ஆள் கிடையாதுன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?<br /><br />ஆகவே, ஆன்றோர்களே சான்றோர்களே... கீ போர்ட் (அல்லது எதோ ஒண்ணு) கத்துக்க ஆசையிருந்தா உட்னே ஆரம்பிங்க. என்ன மாதிரி ஏப்ப சாப்பைகளே கத்துக்க முடியும்போது நீங்கள்லாம் ஓஹோ..... அப்பறம் நான் "தேவாரம்" கம்போஸ் பண்ண ஹங்கேரிக்கு கூட்டிக்கிட்டு போகலைன்னு வருத்தப் பட்டு பிரயோஜனம் இல்லை<br /></div></div></div><br /><div style="text-align: center;">* * * * * * * * * * * * * * *<br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbmbK2y7mPJdxHLCOD2l47i9JTAGW9qJOceulXhsbjlz35RQGBPQRH1MA5AiqC4hDyYxD2CgfYy-rQQLK93jbZSDkshl1U-hLkvwwDdMBlif0Soecsx-zhgg-fxij14qETt5bxQ74fXU1K/s1600-h/Im_back2.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbmbK2y7mPJdxHLCOD2l47i9JTAGW9qJOceulXhsbjlz35RQGBPQRH1MA5AiqC4hDyYxD2CgfYy-rQQLK93jbZSDkshl1U-hLkvwwDdMBlif0Soecsx-zhgg-fxij14qETt5bxQ74fXU1K/s320/Im_back2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5446634641389947138" border="0" /></a></div></div>Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-9104281290005841257.post-46127915496293221222010-01-09T20:42:00.024+08:002010-01-09T21:25:10.578+08:00அவசர உதவிக்கு அமைச்சர்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgV9OuBCbg4yxea-PPx8L9kIbEdJDcwP47QhEnrBjY5LLESkXYQVmHmtjwa49i0SkBYYrkGuLnYb_rKkjk2tn6UqKpsbLIsShBupqJ0LOM7go8MpvJjqLOBFbM9qoL_kt5XvJII9dR5cf6A/s1600-h/108.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 247px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgV9OuBCbg4yxea-PPx8L9kIbEdJDcwP47QhEnrBjY5LLESkXYQVmHmtjwa49i0SkBYYrkGuLnYb_rKkjk2tn6UqKpsbLIsShBupqJ0LOM7go8MpvJjqLOBFbM9qoL_kt5XvJII9dR5cf6A/s320/108.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5424730360530381778" border="0" /></a><br /><div style="text-align: justify;">"தலைவருக்கு இடது கை சுண்டு விரல் லேசா வீங்கியிருக்காமே..... 1/2 மணி நேரம் முன்னாடி கூட நல்லாத்தான் இருந்தாரு. என்னன்னு தெரியலயே? உடனேயே அப்போலோவுக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. ஒரே படபடப்பா இருக்கே? என்னாச்சோ ஏதாச்சோ?..... எதாவது விஷயம் தெரிஞ்சுதாய்யா? அசிஸ்டெண்டுக்கு ஃபோன் போட்டுக் கேட்டுச் சொல்லேன்யா..... அடாடா... அடாடா.... வலின்னு சொல்லி 5 நிமிஷம் கழிச்சுத்தான் போயிருக்காரு... பாவம்... எப்பிடித் தவிச்சாரோ?...."<br /><br />* * * * * * * * * * * * * * * * *<br /><br />"என்னங்க இது அநியாயம்.... அம்மாவுக்கு இன்னிக்கு மாஸ்டர் செக்கப்புக்கு போகணும்னு போன மாசமே தெரியுமே.... 8 மணிக்கு ஹாஸ்பிடல்ல இருக்கணும்... இப்பவே மணி 7 ஆச்சு. இன்னும் எப்ப கிளம்பி எப்ப போய்.... ஒருத்தனுக்கும் பொறுப்பே இல்லை... வரானுக பாருங்க தூங்கி வழிஞ்சுக்கிட்டு.... இந்த டிரைவர், செக்ரடரி, சமையல்காரன், செக்யூரிடி எல்லார் சீட்டையும் கிழிச்சாத்தான் அவனுகளுக்கும் புத்தி வரும் மத்தவனுகளுக்கும் பயம் இருக்கும்... என்னன்னு நினைச்சுக்கிட்டுருக்கானுக....ம்ம்...."<br /><br />* * * * * * * * * * * * * * * * *<br /><br />"கொடுமையைக் கேட்டீங்களா? அய்யாவுக்கு நேத்து தோட்டத்துக்கு போகும்போதே தலைவலி. அய்யாவே டாக்டர்தான். இருந்தாலும் ஆஸ்ப்ரோ, அனாசின்னு பாக்கெட்லயேவா வெச்சுக்கிட்டு சுத்த முடியும்? ஆனா கூட போனவனுக ஒருத்தன் கிட்டக் கூட ஒரு தலைவலி மாத்தரை கூட இல்லை... இது கூடவா வெச்சுக்க முடியாது? ஒரு ஆத்தரம் அவசரத்துக்கு உதவாத உதவாக்கரைகளையெல்லாம் வெச்சுக்கிட்டு அய்யா பாடு திண்டாட்டந்தான்.... எப்பிடி இருந்த ஆளு...ஹ்ம்ம்ம்..."<br /><br />* * * * * * * * * * * * * * * * *<br /><br />டமார்......<br /><br />அய்யோ.... அம்மா......<br /><br />க்ரீச்ச்..... க்ரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்..... டம்......டம்....<br /><br />"அய்யய்யோ... வெடிகுண்டா? அய்யோ.... என்ன இது... இன்ஸ்பெக்டரோட காலையே காணோம்... என்னய்யா ரத்தம் இப்பிடி போகுது.... என்ன பண்றது... வாங்கய்யா... ஓடி வாங்கய்யா....."<br /><br />"என்னய்யா கலாட்டா? நான் வரேன்னு எவனாவது கருப்புக் கொடி காட்றானா?"<br /><br />"இல்லீங்கய்யா.... எவனோ வெடிகுண்டு வீசிட்டான்யா... இன்ஸ்பெக்டர் கால் போயிடுச்சு.... இன்னும் ரெண்டு பேரு வந்து வெட்டிட்டு ஓடறானுக.... பாக்கவே சகிக்கலைய்யா...."<br /><br />"அப்பிடியா. ம்ம்ம்.... அதென்ன நம்பருய்யா... 100ஆ... ஓ... அவங்களுக்குத்தான் ப்ரச்னையா?.. ம்ம்ம்.... 106.. 107......ஆங்.... 108. நூத்திஎட்டுக்கு போன் போடுய்யா.... ஆம்புலன்ஸைக் கூப்பிடுங்க....."<br /><br />"அய்யா.... சொல்லிட்டேங்கய்யா.... எப்பிடியும் வர 1/2 மணி நேரம் ஆகும் போல இருக்குய்யா....."<br /><br />"அதுக்கு என்னய்யா பண்ண முடியும்.... பாரு இப்பவே டிராஃபிக் ஜாம் ஆகி நம்ம 15 வண்டிக கிளம்பறதே கஷ்டம் போல... என்ன பண்றது.... வெய்ட் பண்ணுவோம்.... யோவ்... நீ என்னய்யா பெரிய கர்ண பரம்பரை... போய் தண்ணி குடுத்துக்கிட்டு இருக்க.... சட்டைல ரத்தக்கரை பட்டா போகவே போகாது தெரியும்ல.... "<br /><br />"அய்யா.... உயிர் போயிடும் போல இருக்குய்யா... தாமதிக்கக் கூடாதுய்யா... பாவமா இருக்குய்யா.... ரொம்ப நேரம் ஆச்சுய்யா...."<br /><br />"என்னய்யா பெரிய ரோதனையா இருக்கு.... சரி.... அந்த போலீஸ் வேன்ல ஏத்திக்கிட்டு போங்க..... நமக்கு பாதுகாப்புக்கு வர வேன்.... என்ன பண்றது.... பொதுவாழ்க்கைக்கு வந்தாச்சு... கொஞ்சம் விட்டுக்குடுத்துதான் போகணும்.... எஸ்.ஐ என் கூடவே என் கார்ல வரட்டும்.... "<br /><br />"அய்யா... உயிர் போயிடுச்சு மாதிரி தெரியுது.... ச்ச்ச்ச்.....ச்ச்ச்ச்..."<br /><br />".............................................................ம்ம்ம்... ஆக வேண்டியதை கவனிங்க.... நான் கிளம்பறேன்....."<br /><br />* * * * * * * * * * * * * * * * *<br /></div>Maheshhttp://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.com19