Wednesday, January 16, 2013

அவர்கள் காத்திருக்கிறார்கள்....

அவர்கள் காத்திருக்கிறார்கள்....
ஆள் பவர்களின் செவிகளும்
இதயங்களும் திறக்குமா என்று.
ஈரமுள்ள நெஞ்சம் கொண்ட அரசியலாரும்
உலகத்தில் உள்ளனரா என்று.
ஊனமில்லாத கொள்கைகள் இருக்காதா என்று.
எண்ணிய படியெல்லாம் இயங்கி, மக்களை
ஏமாளிகளாக்கும் காலம் கலையாதா என்று.
ஐநூறு நாட்கள்.....
ஒன்று பட்டு நின்று ஒற்றுமையோடு
ஓங்கிக் குரலெழு ப் பி, குறை தீர ஓர்
ஔடதம் கிடைக்காதா என்று.
எஃகு போன்றதோர் தலைவன் பின்னால்....
.......
.......
இடிந்தகரையில்
நம் பிக்கை இடியாமல்
அவர்கள் காத்திருக்கிறார்கள்.

அதே உலகம்

"அ ப் பா.... நான் வரைஞ்சிருக்கறதை ப் பாரேன்..."
"அட.... நல்லா இருக்கே... இது என்ன பாம் பா?"
"ஐயோ.... விரலை நீட்டாத.... கொத்திடும்..."
"இது.... தாமரை ப் பூதானே?"
"தள்ளி நில்லு ப் பா.... குளத்துக்குள்ள விழுந்திடுவ..."
....
....
குழந்தைகளின் உலகில் அனைத்தும் உயிர் ப் புடன்.

"சரி. வேற வெளயாட்டு வெளயாடலாம்....
நீதான் தென்ன மரம்... நான் மேல ஏற ப் போறேன்."
...
...
அதே உலகம். அ ப் பன் மரம்.

நம் பிக்கை நன்னாள்

நம் பிக்கை நன்னாள்

ஆசைதான்.....
தமிழர் அனைவருக்கும் உளங்கனிந்த
பொங்கல் வாழ்த்துகள் சொல்ல ஆசைதான்....
....
....
விவசாய நிலங்கள் வீட்டு மனைகள் ஆனதும்,
விவசாயம் ஒரு வாழ்வாதாரம் என்ற நிலை அருகி ப் போனதும்,
விளைக்க விரும் பு பவனுக்கு மின்சாரம் இல்லாமற் போனதும்,
கழனி நீர் கானல் நீர் ஆனதும்,
விளைந்த பயிருக்கு விலையில்லாமல் போனதும்,
தொடரும் சுய உயிர் மாய் ப் புகளும்,
ஆள்வோரின் அலட்சியங்களும்,
போராடிக் களைத்த சீவன்களும்,
வறண்ட நதிகளும்,
மழை தவறிய பருவங்களும்,
பருவந் தவறிய மழைகளும்,
சாவியாய் ப் போன விளைச்சலும்,
மூழ்கி மடிந்த பயிர்களும்
நினைவிலிருந்து அகல மறுத்தாலும்
...
....
தை மலர்ந்தால் பாதை மலரும் ; பார்வை தெளியும்
என்ற நம் பிக்கை ஊறிய தமிழரின் உணர்வுக்கு மரியாதையாய்.....
....
....
"உலகத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்"