Tuesday, February 19, 2013

அன்பு

அன் பெனும் பெருநிலத்தில்
விளையும் பயிரனைத்தும்
அண்டத்தின் பசி தீர்க்கும்.

அன் பெனும் பெருமழையின்
ஒவ்வொரு துளியிலும்
உயிர்த்தெழுதல் நிகழும்.

அன் பெனும் பெருநெரு ப் பில்
வேறு பாடுகளின் வேர்கள்
திண்ணமாய் அழியும்.

அன் பெனும் பெருவளி
செல்லும் வழியெங்கும்
நேசத்தின் வாசம் வீசும்.

அன் பெனும் பெருவெளியில்
அகிலமே சுயமிழக்க
அகண்ட பெருஞ்சோதியாய்.....
அன் பே சிவம் !!

0 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..: