Wednesday, March 13, 2013

நடிப்பு

வீட்டினில் பழக ஆரம் பித்து
பள்ளியில் பாங்காய் வளர்த்து
கல்லூரியில் கையாண்டு பார்த்து
காதலியிடமும் கோடி காட்டி
நேர்முகத் தேர்வில் முயன்று பார்த்து
அலுவலகத்திலும் செறிவு சேர்த்து....
பின்னர் தேடியலைந்து,
ஒரு வாய் ப் புக் கிடைத்த போது
நன்றாக வெளிக்காட்டிய பின்
கிடைத்த முதல் விமரிசனம்:
"நடி ப் பு இவன் ரத்தத்துலயே இருக்குய்யா!!"

ம்ம்ம்ம்....
நாம பட்ட பாடு நமக்குத்தான் தெரியும்....
நடிக்கறதுக்கும்,
இந்த கவிதையை விதைக்கறதுக்கும்....

0 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..: