Friday, February 27, 2009

மணக்கும் தமிழ் !! கலக்கும் பதிவர்கள் !!


ஊர் சனமெல்லாம் எதிர்பாத்து பாத்து கண்ணு பூக்கட்டுமா, காய்க்கட்டுமான்னு இருக்கும்போது தமிழ்மண விருதுகள் அறிவிப்பு வந்தே வந்துடுச்சு. நாம எல்லாரும் நல்ல நல்ல ஓட்டுக போட்டு மொத பத்துல கொண்டாந்து நிறுத்துன பதிவுக பட்டியலையும் பாத்துருப்பீங்க. நம்ம ஆளுக கலக்குன கலக்குல தேர்வுக் குழு ரொம்பவே கலங்கிப் போயிட்டாங்க போல. இம்புட்டு நாளாயிப் போச்சு பாருங்க. எப்பிடியோ நாளானாலும் நல்ல பதிவுக தேர்வானதுக்கு எல்லாருமே நெம்ப சந்தோசமாத்தான் இருப்பீங்க. அப்துல்லா அண்ணன் மாதிரி சிலருக்கு அனுப்புன எல்லாப் பதிவுமே தேர்வானது டபுள் சந்தோசமா இருக்கு... என்ன சொல்றீங்க?

விருது கிடைச்ச எல்லா சக பதிவர்களுக்கும் வாழ்த்துகள். இன்னும் நல்லா கலக்கோ கலக்குன்னு கலக்கி, 2009 விருதுகளை அள்ளீரணும். 2009 விருதுகள் தேர்வு குழுவுக்கு இன்னும் சிரமம் குடுக்கணும். அடுத்த விசுக்கா இன்னும் பல பிரிவுகள்ல விருதுக எதிர்பாக்கலாம்னு மூணாநா ராத்திரி சாமக்கோடங்கி வேற உடுக்கடிச்சுட்டு போச்சு.

நான் அனுப்புன 3 பதிவுகளுக்கும் உங்கள்ல யாரச்சும் தெரியாத்தனமா ஓட்டுப் போட்டுருக்கலாம். அப்பிடிப் போட்ட எல்லாருக்கும் நன்றி. கும்புட்டுக்கறனுங்.

மறுக்கா... விருது கிடைச்ச / கிடைக்காத எல்லாருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.

17 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

எம்.எம்.அப்துல்லா said...

//அப்பிடிப் போட்ட எல்லாருக்கும் நன்றி. கும்புட்டுக்கறனுங்.
//

என்னைய மதிச்சு நன்றி சொன்ன உங்க பெருந்தன்மை கண்டு பூரித்துப் போனோம்.

அடுத்தவாட்டி அள்ளிருலாம்பு :)

எம்.எம்.அப்துல்லா said...

ஹையா மீ த ஃபர்ஷ்ட்டா??

Mahesh said...

அட... நீங்கதான் இங்கியும் ஃபர்ஸ்ட்டா !!!!

குடுகுடுப்பை said...

எனக்கும் ஓட்டு போட்ட எல்லாருக்கும் நன்றி.

நான் எனக்கு உட்பட யாருக்குமே ஓட்டுப்போடலை.மறந்து போயிட்டேன்.

கோவி.கண்ணன் said...

பதிவர்களை வெளிப்படையாக பாராட்டும் உங்கள் நல்லுள்ளத்திற்கும் பாராட்டுகள் மற்றும் நன்றிகள் !

Anonymous said...

பாராட்டுகள்

பரிசல்காரன் said...

மிகச் சிறந்த பதிவு.

நன்றி

-நர்சிம்

பரிசல்காரன் said...

ஐயையோ... பேர் மாறிப்போச்சுங்க....

பழமைபேசி said...

விருது கிடைச்ச / கிடைக்காத எல்லாருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.

சி தயாளன் said...

அனைவருக்கும் என் வாழ்த்துகள்..:-)

anujanya said...

வாழ்த்துகள் மஹேஷ். அடுத்த வருடம் இன்னும் கலக்குங்க.

அனுஜன்யா

ஸ்வாமி ஓம்கார் said...

எதை நீ பிறருக்கு கொடுக்கிறாயோ அதை உனக்கே கொடுத்து கொள்கிறாய்.
- பகவான் ரமண மகரிஷி.

Mahesh said...

நன்றி குடுகுடுப்பை.... நல்லா மறந்தீங்களே :))

நன்றி கோவியாரே...

நன்றி கடையம் ஆனந்த்...

நன்றி பரிசல்... எதாவது உள்குத்தா? :)

நன்றி பழமைபேசி....

நன்றி நசரேயன்....

நன்றி டொன்லீ...

நன்றி அனுஜன்யா...

நன்றி ஸ்வாமிகளே...

சின்னப் பையன் said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

ஆதவா said...

கலக்குங்க..... வாழ்த்துக்கள்!!!!

Thamira said...

நான் அனுப்புன 3 பதிவுகளுக்கும் உங்கள்ல யாரச்சும் தெரியாத்தனமா ஓட்டுப் போட்டுருக்கலாம்.// நெஞ்சைத்தொட்டுட்டீங்க மகேஷ்.. :)

Mahesh said...

நன்றி ச்சின்னப்பையன்....

நன்றி ஆதவா...

நன்றி தாமிரா....