Showing posts with label போர். Show all posts
Showing posts with label போர். Show all posts

Wednesday, April 29, 2009

சமாதானம் - சில அவதானங்கள்


உன் குடையின் கீழே இருக்கும் மக்கள் யாவரும் உன்னுடைய மக்கள் என்ற எண்ணம் இல்லாதவரை உன்னால் சமாதானத்தை நிலை நாட்ட முடியாது - புற நானூற்றுப் பாடல்

ஒரு கௌரவத்துடன் சமாதானத்தை நிலை நிறுத்த இயலாதானால், அது சமாதானமாக இருக்க முடியாது - ஜான் ரஸல்

உனக்குள்ளே அமைதி இருந்தால் மட்டுமே உன்னால் உலகத்துக்கு அமைதியை அளிக்க முடியும். குறைந்த பட்சம் உன் நாட்டு மக்களுக்கு. - தாமஸ் கெம்பிஸ்

அடக்குமுறையின் மூலம் சமாதானத்தை அடைய முடியாது.... புரிதலின் மூலம் மட்டுமே அது சாத்தியம் - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

போர் முடிவுக்கு வந்து சமாதானம் பிறக்கும் - மரித்த ஒவ்வொரு உயிரும் திரும்ப வருமானால்.... - ஸ்டான்லி பால்ட்வின்

உரிமையுள்ள ஒரு போரை விட ஒருதலைப் பட்சமான சமாதானத்தையே விரும்புகிறேன் - சிசிரோ

யாராலும் ஒரே சமயத்தில் போரை நடத்தவும் சமாதானத்தை நிலை நாட்டவும் முடியாது ; சமாதானம் என்று முழங்கும் கொடுங்கோலர்களைத் தவிர - யாரோ

இரு போர்களுக்கு இடையில் எல்லாருமே தேவதூதர்கள்தான் ; இரு உணவுகளுக்கு இடையில் உண்ணாமல் இருப்பதைப் போல... - கால்மன் மெக்கார்தி

போரில் தந்தைகள் மகன்களை புதைக்கின்றனர் ; சமாதானத்தில் மகன்கள் தந்தைகளைப் புதைக்கின்றனர் - க்ரூசஸ்

முந்தைய பதிவு போரைப் பற்றி சில பேர்

Monday, February 2, 2009

போரைப் பற்றி சில பேர்


போரைப் பற்றி சிலரின் கருத்துக்கள் :


உருவாக்கப்பட்ட ஒவ்வொரு துப்பாக்கியும், செலுத்தப்பட்ட ஒவ்வொரு போர்க்கப்பலும், எறியப்பட்ட ஒவ்வொரு ராக்கெட்டும், கடைசியில் பார்த்தால், பசிக்கு உணவில்லாத ஒருவனிடமும் குளிருக்கு துணி இல்லாத ஒருவனிடமும் திருடியதற்கு ஒப்பானது. - ஐஷனோவர்

போர் அல்லது மனிதன் : ஏதோ ஒன்றுதான் இருக்க முடியும் - பக்மின்ஸ்டர் ஃபுல்லர்

ஒரு நல்ல போர் அல்லது மோசமான அமைதி எபோதுமே இருந்ததில்லை - பெஞ்சமின் ஃப்ரான்க்ளின்

வக்கற்றவனின் முதல் அடைக்கலம் வன்முறை - ஐசக் அஸிமோவ்

போரை ஆரம்பிப்பது மட்டுமே கிழங்கள். போரிட்டு மாண்டு போவது இளைஞர்கள்தாம் - ஹெர்பெட் ஹூவர்

போரில் இரண்டாவதாக வருபவனுக்கு பரிசு கிடையவே கிடையாது - ஜெனரல் ஒமர் ப்ராட்லி

ஒருவனைப் போரிட்டு கொல்ல வேண்டும் என்ற நிலையில் அமைதியாக இருப்பதனால் ஒரு இழப்பும் இல்லை - வின்ஸ்டன் சர்ச்சில்

ராணுவ ஊழியத்துக்கு செல்ல மறுக்கும் இளைஞர்களே போர்களற்ற உலகத்திற்கு வித்திடுபவர்கள் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

உலகில் அனைவரும் சகோதர சகோதரிகள், உலகத்தில் உள்ள சமுத்திரங்களைப் போல. பிறகு ஏன் காற்றும் அலைகளும் அவ்வளவு உக்கிரமாக மோதிக் கொள்கின்றன? - ஹிரோஹிடோ

எவ்வளவு தேவையென்றாலும், என்ன காரணமென்றாலும், போர் ஒரு கிரிமினல் குற்றம் இல்லை என்று சொல்ல முடியாது - எர்னெஸ்ட் ஹெமிங்வே

அடக்குமுறையின் விலை சல்லிசு என்று ஒரு அரசாங்கம் நினக்கும் அந்த நொடியில் போர் ஆரம்பமாகிறது என்று வரலாறு கூறுகிறது - ரொனால்ட் ரீகன்


டிஸ்கி : தமிழாக்கம் மட்டுமே அடியேனுடையது. இந்தப் பதிவுக்கும் இலங்கைல நடக்கற போருக்கும், ரா(ட்சச)ஜபக்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.