....நீங்கதான்..... நீங்களேதான். பின்ன என்னங்க? நீங்க இல்லாம இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா? என்னதான் மொக்கை போட்டாலும், கவிதை (!!) வடிச்சு இம்சை பண்ணினாலும், வெண்பா படைச்சு துன்புறுத்தினாலும், சிறுகதை எழுதி சிலிர்க்க வெச்சாலும், நெடுங்கதை எழுதி நடுங்க வெச்சாலும், போட்டிக் கதை அனுப்பி பயமுறுத்தினாலும், அறிவியல் புனைவு படைச்சு அலட்டிக்கிட்டாலும், பயணக் கட்டுரைகள் போட்டு பந்தா பண்ணினாலும், கிச்சடி பண்ணி உங்களை பச்சிடி பண்ணினாலும், கடவுளைப் பத்தி எழுதி கல்லா கட்டுனாலும், கடவுள் இருக்கான்னு கேள்வி கேட்டாலும், எதிர்பதிவுல எசப்பாட்டு பாடினாலும், துணைப்பதிவுல திகைக்க வெச்சாலும், சொந்த ஊரைப்பத்தி கொஞ்சம் பெருமை பேசினாலும், பேட்டி எடுத்தாலும், சினிமா விமர்சனம் பண்ணினாலும், படிச்ச புத்தகங்களை உங்களுக்கு பிரிச்சுக் காட்டினாலும், சுயவிமர்சனம் பண்ணிக்கிட்டாலும், சின்ன வயசு அனுபவங்களை அசை போட்டாலும், கற்பனைல பதிவர் சந்திப்புகள் நடத்தினாலும், பகிரங்கக் கடிதம் எழுதினாலும், இவ்வளவு ஏன்..... வலைப்பூவுக்கு "துக்ளக்"னு பேர் வெச்சாக் கூட.... இப்பிடி என்ன குட்டிக்கரணம் போட்டாலும், பல வேலைகளுக்கு நடுவுலயும் வந்து பொறுமையாப் படிச்சுட்டு 'அருமை தல.... கலக்கல்.... ஜூப்பரு... அசத்தல்...' ன்னெல்லாம் வஞ்சனையில்லாம தாராளமா கமெண்ட் போடற உங்களை மாதிரி பதிவர்கள், வாசகர்கள் (சரி...சரி... மேல... மேல...) மற்றும் நண்பர்களோட ஊக்குவிப்பு இல்லைன்னா இப்ப நானெல்லாம் இதை 100வது பதிவுன்னு போட முடியுமா?
யம்மாடி.... மூச்சு வாங்குது !! அண்ணன்களே... தம்பிகளே.... அக்காக்களே... தங்கைகளே... ஆன்றோர்களே.. சான்றோர்களே.. எல்லாருக்கும் நன்றிகள் பல.
யம்மாடி.... மூச்சு வாங்குது !! அண்ணன்களே... தம்பிகளே.... அக்காக்களே... தங்கைகளே... ஆன்றோர்களே.. சான்றோர்களே.. எல்லாருக்கும் நன்றிகள் பல.


