Showing posts with label வெண்பா. Show all posts
Showing posts with label வெண்பா. Show all posts

Thursday, July 2, 2009

என் பாக்களா? வெண்பாக்களா?

நீண்ட நாட்களுக்கு பிறகு மறுபடியும் வெண்பா முயற்சி. வழக்கம்போல நண்பர் திரு.அகரம்.அமுதாவின் உதவியுடன். ஈற்றடிகளை அவர் கொடுக்க, பாக்களை நான் இயற்ற (சரி.. சரி.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான்) சிலவற்றிற்கு அவர் தளை தட்டும் இடங்களை சரி செய்து கொடுக்க, அவற்றை நான் இங்கு படைக்க, அவற்றை நீங்கள் படிக்க..... அவரது/உங்களது பொறுமைக்கும், நன்றிகள் பல.


உலகம் சூடாகுதல்



மரங்களை வெட்டியே பிழைப்பினை நடத்தும்

கரங்களை வெட்டிட வேண்டாமோ - மறக்காமல்

கப்பந்தான் கேட்குமே தட்பமது குறைந்திட

வெப்பம் உயரும் உலகு !



கூட்டணி


கூறுவோர் கூறிடவும் மாறுவோர் மாறிடவும்

சேருவோர் யாரெனக் கேட்டேன் - பெருமைமிகு

நாட்டினிலே நாற்பது கட்சிகள் !! உன்றன்

கூட்டணி யாருடனோ கூறு !



ஊருக்கு உழைத்தல்


கரும்பெனவே இனிதாகப் பேசிடினும் சின்னத்

துரும்பையுங் கிள்ளாத் தலைவரே ! - இரும்பில்செய்

(ச்)சேரிலே இருந்தபடி நாட்டாமை செய்வதினும்

ஊருக்(கு) உழைத்தல் உயர்வு.



டாஸ்மாக்கும் படிப்பும்


டாஸ்மாக்கைத் தேடி ப்ரெண்டுகளைக் கூட்டிக்கிட்டு

ரோஸ்மில்க் குடிக்கவா போவாங்க? - பாஸ்மார்க்கு

வாங்கத்தான் முடியாம அரியர்ஸை வெச்சுவெச்சு

தேங்கியே போனதே படிப்பு.

சரியாயிருந்தா வெண்பா... இல்லைன்னா என் பா. என்னப்பா நண்பா? சொல்றது தப்பா?

என்னோட முதல் முயற்சி உங்களுக்கெல்லாம் மறந்து போயிருக்கலாம்... மறுபடி இங்க ஒரு தடவை ஞாபகப்படுத்திடறேன்.

Wednesday, May 6, 2009

அலர் மலர்ந்த நாள் !! அகம் மகிழ்ந்த நாள் !!











மே 9. செல்ல மகள் சஹானாவின் 4 வது பிறந்த நாள். ப்ராஜெக்ட் வேலைக்காக இன்று மறுபடி ஜெனீவா போக வேண்டி இருப்பதால, 2 வாரம் கழிச்சு திரும்பி வந்த பிறகுதான் கொண்டாட்டம் எல்லாம் வெச்சுக்க முடியும். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் எதாவது போஸ்டர் வரைவேன். இந்த முறையும் ஒண்ணு வரைஞ்சாச்சு. அதுவும், கூடவே அவள் வரைஞ்ச சில போஸ்டர்களும் உங்கள் பார்வைக்கு.


ஹி.. ஹி... அப்பிடியே ஒரு வெண்பா... ரொம்ப நாளாச்சுல்ல... அதான்...


எனக்கும் துணைக்கும் யாண்டும் இன்பம்
தனக்குள் கொண்ட கலைமகள் - மனத்துள
காயங்கள் மாறிடவே மழையெனப் பொழிந்திட்ட
நீயெங்கள் வாழ்வின் வளம்.


இதெல்லாம் பாப்பா வரைஞ்சது...









இது அப்பா வரைஞ்சது.....





Sunday, January 25, 2009

தன்பால் எனையீர்த்த வெண்பா !!


தேடுதலே வாழ்வாகிப் போனதன் விளைவு
வேடனமு தாவின்வலைப் பூவழியில் - மூடன்
என்போல் தமிழறியா தொருவனைக் கரம்நீட்டித்
தன்பால் ஈர்த்த வெண்பா !

இந்தப் பதிவு திரு.அகரம்.அமுதா அவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக....

நண்பர் அகரம்.அமுதா அவர்களின் அழகாக வெண்பாக்கள் எழுதக் கற்றுக் கொடுக்கவென்றே ஒரு வலைப்பூ நடத்தி வருகிறார். அமுதாவை சிங்கை பதிவர் சந்திப்பில் பார்த்தபோதும் பேருந்தில் விக்னேசுவரனுக்கு வெண்பாவின் அடிப்படைகளை சொல்லிக் கொடுத்துக்கொண்டே வந்தார். அதன் பின் சில மாதங்களுக்குப் பிறகு சென்ற வாரம் அமுதாவின் வலைப்பூவிற்குச் சென்று பார்த்து பதிவுகளைப் படித்தபின் நானும் வெண்பாக்கள் எழுத வேண்டுமென்ற உத்வேகம் புறப்பட்டது.

அதுவும் அவர் தன்னுடைய ஒவ்வொரு பதிவின் இறுதியிலும் ஈற்றடியைக் கொடுத்து அதற்கு வெண்பா எழுத ஊக்குவித்தது என்னை மிகவும் ஈர்த்தது. இது வரை கவிதை என்று இரண்டு வரிகள் எழுதியது கிடையாது. வெண்பாவின் இலக்கணம் தெரியாது. இருந்தாலும் முயற்சித்துத்தான் பார்ப்போமே என்று முயன்றதில் சற்று சுமாராகவே எழுத வந்தது. அமுதாவும் பொறுமையோடு தளை தட்டும் இடங்களை சிறிது சரி செய்து கொடுக்க போதை தலைக்கேறியது. நண்பர் பழமைபேசியும் பச்சைக்கொடி காட்ட மூன்று நாட்களில் 4 வெண்பாக்கள் எழுதினேன். அவை இங்கே உங்கள் பார்வைக்கும் கருத்துக்கும்....

விதி வலியது... என்னென்னெ ரூபத்துல எப்பிடியெல்லாம் வருது பாருங்க... தீந்தீங்க நீங்கள்லாம்... தப்பிக்கவே முடியாது. தமிழ்க்கடவுள், தமிழ்த்தாத்தா, தமிழ்ப்பாட்டி இப்பிடி யாரையாவது கும்புட்டு படையல் போடறேன்னு வேண்ணா வேண்டிப் பாருங்க. எதாவது நல்லது நடந்தாலும் நடக்கலாம்.


புகைப்படத் தொகுப்பு

பாரெங்குஞ் சுற்றிவர பாங்காய் பவனிவர
யாரெங் கெதுவென் றுணர்ந்தே - ஊரெங்கும்
கண்பார்த்த காட்சியெலாம் கருத்துடனே விண்டுரைக்க
வெண்பா விரித்தேன் விரைந்து !


பெண்கள்

பேரிடர் வரினும் நேர்கொண்டு பொருதப்
பாரினில் பாவையர் உண்டாம் - வீரமிகு
மங்கையர் சீறினும் சிரிப்பினும் மேல்நோக்க
நங்கைக்கு நாணம் நயம் !

கோபம்

கோபம் எனும்தீ இறையெனக் கீந்த
சாப மெனவுறுத்தும் போதெலாம் - லோபியின்
கண்மணி தாமரைக் கண்ணாற் சிரித்திடத்
தண்ணென மாறும் தழல் !

ஈழம்

மண்ணை யிழந்து மக்களை யிழந்து
தன்னையு மிழந்த சோதரர்காள் ! - இன்னமும்
ஏழேழ் சென்மமுந் தொடர்ந் திடுமோ
ஈழத் தமிழர் இடர்?


பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றுந் தா ! - ஔவை.


பயப்படாதீங்க... கோவப்படாதீங்க... அடுத்த முயற்சியில இன்னும் கொஞ்சம் நல்லா பண்ணறேன்...