Showing posts with label சுயபரிசோதனை. Show all posts
Showing posts with label சுயபரிசோதனை. Show all posts

Friday, August 15, 2008

நானே நானா....யாரோதானா?

கொஞ்ச நாளாவே சில கேள்விகள் மனசுக்குள்ள மொளச்சுக்கிட்டெ இருக்கு. அதுவும் போன வாரம் என் அண்ணனி(சித்தப்பா பையன்)டமிருந்து வந்த மெயிலப் படிச்சதுக்கப்பறம் ரொம்ப அதிகமாயிடுச்சு. மெயிலிலிருந்த வாசகங்கள் இங்க தேவையில்ல. ஆனா என்ன ரொம்பவே யோசிக்க வெச்சிருச்சு.

அவர் இப்போ சத்தியமங்கலத்துல குடும்பத்தோட நல்லா சந்தோசமாத்தான் இருக்கார். பொறந்தது, படிச்சது எல்லாம் அங்கதான். வேலையும் பக்கத்துலயே ஒரு நல்ல இடத்துல. பக்கத்து வீட்டு பொண்ணையே காதலிச்சு கல்யாணம். காலைல டி வி எஸ் 50 ஒரு மிதி மிதிச்சு வேலைக்கு போயிட்டு, மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துட்டு, ஒரு குட்டி தூக்கமும் போட்டுட்டு மறுபடி போனா, பொழுதோட திரும்பிரலாம். அப்பறம் கோயில், பஜனை, திண்ணைன்னு அப்பிடியே பொழுது போயே போயிரும்.

ஆனா நாம ஊர்ல இருக்க புடிக்காம (கூரை...கோழி...வைகுண்டம் ?! ) அங்க இங்க சுத்தி டெல்லி போயி, படிச்ச மெக்கானிகல் இஞ்சினியரிங்குக்கு சம்பந்தமே இல்லாம விளம்பர கம்பேனில சேந்து காப்பி எழுதி, விசுவலைசஷன் அனிமேஷன்லாம் பண்ணி, அப்பிடியே ஏஜன்சிக்கு கம்ப்யூட்டர் செட் பண்றேன், நெட்வொர்க் பண்றேன்னு கிளம்பி...அடடா இந்த ஐ.டி.ல நல்ல காசாம்ல...நாம கோடுன்னு எதையோ தட்டுனா அது வேற உருப்படியா எதையோ செய்யுதே...உட்றக் கூடாது (உக்காந்த எடத்துல காசு பாக்கலாம்...நம்மள மாதிரி சோம்பேறிக்கு (ம்ம்ம்..நோகாம நோம்பிருக்கலாம்....உஸ்ஸ்...இந்த மனசாச்சிக்கு வெவஸ்தையே கிடையாது) செரியான வேலைன்னு முடிவு பண்ணி, அப்பிடி கெளம்பி தருமமிகு மெட்ராசுக்கு வந்தா...எது கேட்டாலும் தெரியாதுங்கறானே...இவன் ரொம்ப நல்லவன்னு நெனச்சு ஒரு எடத்துல வேலைக்கு சேத்திகிட்டாங்க. (அப்பறம் வருத்தப் பட்டிருப்பாங்க) எப்பிடியோ அடிச்சு புடிச்சு இப்பொ இருக்கற எடத்துக்கு வந்தோம்னு வைங்க. (அப்பாடா....சுய புராணம் பாடியாச்சா....இத எல்லாம் படிக்கறாங்க பாரு...அவுங்களைச் சொல்லணும்....ஏய்...இப்போ நீ போப்போறயா இல்லயா..)

செரி....செரி...பாயிண்ட்டுக்கு வந்துட்டம்ல.....

இப்பொ மல்லாக்க படுத்துக்கிட்டு யோசிச்சு பாத்தா....நாம (நாம எப்பவும் நம்மள நாமன்னுதான் சொல்றது) புடிச்சது என்ன, விட்டது என்ன (அட அது இல்லீங்க...நீங்க வேற) இதற்காகத்தான் ஆசைப்பட்டாயா மகேஷ் குமாரா? இவ்வளவு ஊரு ஒலகம் சுத்தி நாலு மனுச (யாருங்க இந்த நாலு பேரு? தொல்லை தாங்க முடியல..) மக்களை பாத்து பேசி பழகி.......

எந்த விதத்துலயாவது நம்மள ஒசத்தீருக்கா....நம்ம எண்ணங்கள்ள எதாவது மாத்தத்தை செஞ்சிருக்கா...கோப தாபம், பொறாமை, பொச்சரிப்பு இதெல்லாம் கொறஞ்சிருக்கா.. சகிப்புத்தன்மை ஊசி மொனயளவாச்சும் வளந்திருக்கா....கூட இருக்கிறவங்கள அனுசரிச்சு போக கத்து குடுத்திருக்கா...மத்தவங்க மனசு நோகாம பேச தெரிஞ்சிருக்கா.... பெத்தவங்க மத்தவங்க கிட்ட தன்மையா இருக்கறமா...நாலு பேருக்கு (மருக்கா...பார்ரா) நல்லது பண்ணுனமா...அட பண்ணனும்னு நெனக்கவாவது நெனச்சமா.... காசு பணம்னு இல்லாட்டியும் சுண்டு வெரல ஒசத்தி எதாவது உதவி பண்ணுனமா.... ... ... ... ... இப்பிடியெல்லாம் யோசிச்சு பாத்தா, பல கேள்விகளுக்கு "இல்ல" ங்கறதுதான் பதிலா இருக்கு. அட வருமானந்தான் அதிகப்படி வருதே.. வீடு மன காரு மத்தது மட்டன்னு.... சந்தோசமாத்தான இருக்கன்னா.... நெசமா? இதுதான் சந்தோசமா? நாமதான் இப்பிடியா...நம்மள மாதிரி சில என்.ஆர்.ஐ-ங்க (Non Reconciliable Individuals ன்னு ஒருத்தரு வெளக்கம் சொன்னாரு) கிட்ட சும்மா கல்ல போட்டு பாத்தா பத்துக்கு எட்டு பழுதில்லாம இதே பாட்டு பாடறாங்க... எங்க தப்பு? யாருகிட்ட தப்பு? ஏன் சுயநலம் பொது நலத்தை அமுக்குது? திருப்திங்கறது ஏன் கிட்ட போனா எட்ட போகுது? உள்ளூர்லயே பலருக்கு கிடைக்கிற நிறைவுங்கிறது ஏன் வெளியில கிடைக்கல? ஆனாலும் ரொம்ப நிறைவா இருக்கிற மாதிரி ஏன் காட்டிக்கிறோம்? ஈகோவுக்கு தீனி போடவா? அப்பிடி என்ன அதுக்கு அசுர பசி...அடங்கவே மாட்டேங்குது....

ரொம்ப சீரீசான பதிவா ஆயிடுச்சோ? இருக்கட்டும் இருக்கட்டும்.... நெதம் கண்ணாடில மூஞ்சிய பாக்கறோம்.... கொஞ்சம் உள்ளயும் பாப்பமேன்னு தோணுச்சு....

பி.கு: இதுல 'நாம'ங்கறது.....ம்ம்ம்..நாமதாங்க....