Wednesday, January 16, 2013

நம் பிக்கை நன்னாள்

நம் பிக்கை நன்னாள்

ஆசைதான்.....
தமிழர் அனைவருக்கும் உளங்கனிந்த
பொங்கல் வாழ்த்துகள் சொல்ல ஆசைதான்....
....
....
விவசாய நிலங்கள் வீட்டு மனைகள் ஆனதும்,
விவசாயம் ஒரு வாழ்வாதாரம் என்ற நிலை அருகி ப் போனதும்,
விளைக்க விரும் பு பவனுக்கு மின்சாரம் இல்லாமற் போனதும்,
கழனி நீர் கானல் நீர் ஆனதும்,
விளைந்த பயிருக்கு விலையில்லாமல் போனதும்,
தொடரும் சுய உயிர் மாய் ப் புகளும்,
ஆள்வோரின் அலட்சியங்களும்,
போராடிக் களைத்த சீவன்களும்,
வறண்ட நதிகளும்,
மழை தவறிய பருவங்களும்,
பருவந் தவறிய மழைகளும்,
சாவியாய் ப் போன விளைச்சலும்,
மூழ்கி மடிந்த பயிர்களும்
நினைவிலிருந்து அகல மறுத்தாலும்
...
....
தை மலர்ந்தால் பாதை மலரும் ; பார்வை தெளியும்
என்ற நம் பிக்கை ஊறிய தமிழரின் உணர்வுக்கு மரியாதையாய்.....
....
....
"உலகத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்"

0 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..: