Sunday, February 21, 2010

கிச்சடி 08.03.2010


மன்னிக்கணும் மக்களே.... ரொம்ப நாளாச்சு வலைப்பக்கமா வந்து. "ஏன் இன்னும் எழுதல? என்னதான் வேலைன்னாலும் ஒரு இடுகை கூட எழுத முடியாதா என்ன? எப்ப அடுத்த இடுகை வரும்னு உங்க திண்ணைலயே குத்த வெச்சு உக்காந்து முட்டி வலிக்குது. சீக்கிரம்... சீக்கிரம்.... " இப்பிடியெல்லாம் தினமும் ஏகப்பட்ட கடுதாசி, மெயில், ஃபோன் வந்ததுன்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க? ஒரு 'பிரபல' பதிவன் வாழ்க்கைல இதெல்லாம் சாதாரணமப்பான்னு கவுண்டர் தட்டிக் குடுத்ததுனால போனாப் போகுதுன்னு விட்டுட்டு மறுபடி வந்தாச்சு. ம்ம்..ம்ம்.. மேல... மேல....

* * * * * * * * * * * * * * *

கொஞ்ச நாள் அசந்து மறந்து இருந்தா நாட்டுல என்னென்னமோ நடந்து போச்சு.

முதல்ல மகிழ்ச்சிகள் :

- கேபிளார் & பரிசலாரின் புத்தக வெளியீடுகள்
- கேபிளார் வழக்கம்போல தினம் 5000, 6000 ஹிட்டுனு போட்டு 8 லட்சம்
தாண்டிட்டார்
- நண்பர் அருமை அண்ணன் அப்துல்லா மூணு இடுகைகள் எழுதிட்டார்
- சிங்கை சிங்கம் "அறிவிலி ராஜேஷ்" இடுகைகளை கடுகு, ஜெ.மோ. போன்ற ஜாம்பவான்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்
- பல புதிய பதிவர்கள் வருகை

எல்லாருக்கும் ஊர்ல உலகத்துல இருக்கற எல்லா சாமி மற்றும் ஆசாமிகளோட ஆசிகளும் வாழ்த்துகளும். சும்மா வெச்சுக்கோங்க.....

சில அசௌகரியங்கள் :

- பழமையார் vs வினவு குரூப்
- தண்டோரா vs வினவு குரூப்
- பரிசலாருக்கு நேர்ந்த விபத்து

எல்லாரும் இப்ப பரம சௌக்கியம்.

* * * * * * * * * * * * * * *

கதவைத் தொறந்து வெச்சா காத்து வருமா? வரும் வரும். ஆனா கேமராவை ஆன் பண்ணி வெச்சா? என்னென்னமோ வந்துது.

"நித்தமும் ஆனந்தமே" சொன்னவர் வீட்டினுள்
சத்தமின்றி யோர்கருவி வைத்து - அத்தனையும்
அம்பலம் ஏற்றிட அயராது (உ)ழைத்திட்ட
பின்புலத் தாருக்கு நன்றி.

* * * * * * * * * * * * * * *

சமீபத்துலதான் "அபியும் நானும்" டிவில பாத்தேன். சில டயலாக்குகள் அற்புதம். குறிப்பா "உனக்கு சரியான வாழ்க்கைத் துணையைத் தேடிக்கறது உன்னோட உரிமை மட்டுமில்லை; கடமையும் கூட"ன்னு பிரகாஷ்ராஜ் த்ரிஷா கிட்ட சொல்றது.... அருமை. ராதாமோகனுக்கு சுத்திப் போடணும்.

இன்னொரு படம் "The Shahshawnk Redemption". படத்தைப் பத்தியோ மார்கன் ஃப்ரீமன் நடிப்பைப் பத்தியோ, டைரக்சன், எடிட்டிங் பத்தியோ சொல்ல எனக்கு அவ்வளவு அறிவு இல்லை. வாய்ப்பு கிடைச்சா நீங்களே பாத்து அனுபவியுங்க.

நம்மாளு க்றிஸ்டஃப் வால்ட்ஸ் ஆஸ்கார் வாங்கிட்டாரு. Inglourious Bastards பத்தி நான் ரொம்ப சிலாகிச்சு எழுதும்போதே நினைச்சேன். இதெல்லாம் போய் ஊருக்குள்ள சொல்லுங்க "அண்ணன் நல்லவரு ; ம்ம்ம்ம்... வல்லவரு ; ஆஸ்காராலாஜி தெரிஞ்சவரு "ன்னு.

* * * * * * * * * * * * * * *

கீ போர்ட் கத்துக்கணும்னு ரொம்ப நாளா ஆசை. நம்ம ஆசையைப் பாத்து புல்லரிச்சுப் போன ஒரு நண்பர் "ஆஹா... அதுக்கென்ன... நானாச்சு"ன்னு சொல்லிக் குடுக்க ஆரம்பிச்சுட்டாரு. அடுத்த மாசம் "பில்ஹார்மோனிக்" ஆர்கெஸ்டிராவுல ஒரு சிம்ஃபனி பண்ணலாமான்னு யோசிச்சுக்கிட்டுருக்கேன். "ஹங்கேரில அவுக கூப்டாக ; லண்டன்ல இவுக கூப்டாக ; ஆஸ்திரியாவுல அல்லாரும் கூப்டாக" அப்பிடின்னெல்லாம் நான் பீலா உடற ஆள் கிடையாதுன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன?

ஆகவே, ஆன்றோர்களே சான்றோர்களே... கீ போர்ட் (அல்லது எதோ ஒண்ணு) கத்துக்க ஆசையிருந்தா உட்னே ஆரம்பிங்க. என்ன மாதிரி ஏப்ப சாப்பைகளே கத்துக்க முடியும்போது நீங்கள்லாம் ஓஹோ..... அப்பறம் நான் "தேவாரம்" கம்போஸ் பண்ண ஹங்கேரிக்கு கூட்டிக்கிட்டு போகலைன்னு வருத்தப் பட்டு பிரயோஜனம் இல்லை

* * * * * * * * * * * * * * *

10 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

மணிஜி said...

வெல்கம் பேக் மகேஷ். உங்க குறுஞ்செய்தி கிடைத்தது. நான் வர இயலவில்லை. கேபிள் மட்டும் வருகிறார். யூத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்.

ஸ்வாமி ஓம்கார் said...

இங்கே எல்லாம் கமெண்ட் போட முடியாது :)

நேரில் வந்து வச்சுக்கிறேன் :)

Mahesh said...

நன்றி மணிஜி.... அடாடா... ஏமாற்றம் :(

நன்றி ஸ்வாமி.... ஆமாமாம்... இங்க வந்தே வெச்சுக்கலாம்....

அறிவிலி said...

ரெண்டு பேருக்கும் ஒரு போட்டி நடந்துகிட்ருந்துது.நான் ரெண்டு நாள் முன்னாடி சரண்டர் ஆயி போஸ்ட் போட்டுட்டேன்.ஜெயிச்ச நீங்க இன்னிக்கு போட்டுட்டீங்க.தோல்விய ஒப்புத்துக்கறேன்.

கடுகு, ஜெ.மோ. அப்புறம் உங்களோட ரெஃபரன்ஸும் கிடைச்சுருச்சு. தன்யனானேன்.

இராகவன் நைஜிரியா said...

வாங்க மகேஷ்.

பார்த்து ரொம்ப நாளாச்சு...

கிச்சடி ரொம்ப பிரமாதம்.

நசரேயன் said...

இம்புட்டு நாளா நல்லாத்தான் போய்கிட்டு இருக்கு .. இனிமேல எப்படியோ

நாகா said...

வாங்க.. வாங்க எனக்கும் ஆணியும் சோம்பேறித்தனமும் அதிகமாயிட்டதால இந்தப்பக்கமே வரமுடியல..இந்த வாரமாவது முடியுதான்னு பாக்கலாம்.

பழமைபேசி said...

வாங்க, வருக அண்ணே!

Thamira said...

ஆனாலும் நம்ம டேலண்டு நாளுக்கு நாளு கூடிக்கிட்டே போவுது தல.! அப்துல்லு கண்ணு வச்சிடப்போறாரு. பாத்து.!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in