Saturday, January 9, 2010

அவசர உதவிக்கு அமைச்சர்


"தலைவருக்கு இடது கை சுண்டு விரல் லேசா வீங்கியிருக்காமே..... 1/2 மணி நேரம் முன்னாடி கூட நல்லாத்தான் இருந்தாரு. என்னன்னு தெரியலயே? உடனேயே அப்போலோவுக்கு கூட்டிட்டுப் போயிருக்காங்க. ஒரே படபடப்பா இருக்கே? என்னாச்சோ ஏதாச்சோ?..... எதாவது விஷயம் தெரிஞ்சுதாய்யா? அசிஸ்டெண்டுக்கு ஃபோன் போட்டுக் கேட்டுச் சொல்லேன்யா..... அடாடா... அடாடா.... வலின்னு சொல்லி 5 நிமிஷம் கழிச்சுத்தான் போயிருக்காரு... பாவம்... எப்பிடித் தவிச்சாரோ?...."

* * * * * * * * * * * * * * * * *

"என்னங்க இது அநியாயம்.... அம்மாவுக்கு இன்னிக்கு மாஸ்டர் செக்கப்புக்கு போகணும்னு போன மாசமே தெரியுமே.... 8 மணிக்கு ஹாஸ்பிடல்ல இருக்கணும்... இப்பவே மணி 7 ஆச்சு. இன்னும் எப்ப கிளம்பி எப்ப போய்.... ஒருத்தனுக்கும் பொறுப்பே இல்லை... வரானுக பாருங்க தூங்கி வழிஞ்சுக்கிட்டு.... இந்த டிரைவர், செக்ரடரி, சமையல்காரன், செக்யூரிடி எல்லார் சீட்டையும் கிழிச்சாத்தான் அவனுகளுக்கும் புத்தி வரும் மத்தவனுகளுக்கும் பயம் இருக்கும்... என்னன்னு நினைச்சுக்கிட்டுருக்கானுக....ம்ம்...."

* * * * * * * * * * * * * * * * *

"கொடுமையைக் கேட்டீங்களா? அய்யாவுக்கு நேத்து தோட்டத்துக்கு போகும்போதே தலைவலி. அய்யாவே டாக்டர்தான். இருந்தாலும் ஆஸ்ப்ரோ, அனாசின்னு பாக்கெட்லயேவா வெச்சுக்கிட்டு சுத்த முடியும்? ஆனா கூட போனவனுக ஒருத்தன் கிட்டக் கூட ஒரு தலைவலி மாத்தரை கூட இல்லை... இது கூடவா வெச்சுக்க முடியாது? ஒரு ஆத்தரம் அவசரத்துக்கு உதவாத உதவாக்கரைகளையெல்லாம் வெச்சுக்கிட்டு அய்யா பாடு திண்டாட்டந்தான்.... எப்பிடி இருந்த ஆளு...ஹ்ம்ம்ம்..."

* * * * * * * * * * * * * * * * *

டமார்......

அய்யோ.... அம்மா......

க்ரீச்ச்..... க்ரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்..... டம்......டம்....

"அய்யய்யோ... வெடிகுண்டா? அய்யோ.... என்ன இது... இன்ஸ்பெக்டரோட காலையே காணோம்... என்னய்யா ரத்தம் இப்பிடி போகுது.... என்ன பண்றது... வாங்கய்யா... ஓடி வாங்கய்யா....."

"என்னய்யா கலாட்டா? நான் வரேன்னு எவனாவது கருப்புக் கொடி காட்றானா?"

"இல்லீங்கய்யா.... எவனோ வெடிகுண்டு வீசிட்டான்யா... இன்ஸ்பெக்டர் கால் போயிடுச்சு.... இன்னும் ரெண்டு பேரு வந்து வெட்டிட்டு ஓடறானுக.... பாக்கவே சகிக்கலைய்யா...."

"அப்பிடியா. ம்ம்ம்.... அதென்ன நம்பருய்யா... 100ஆ... ஓ... அவங்களுக்குத்தான் ப்ரச்னையா?.. ம்ம்ம்.... 106.. 107......ஆங்.... 108. நூத்திஎட்டுக்கு போன் போடுய்யா.... ஆம்புலன்ஸைக் கூப்பிடுங்க....."

"அய்யா.... சொல்லிட்டேங்கய்யா.... எப்பிடியும் வர 1/2 மணி நேரம் ஆகும் போல இருக்குய்யா....."

"அதுக்கு என்னய்யா பண்ண முடியும்.... பாரு இப்பவே டிராஃபிக் ஜாம் ஆகி நம்ம 15 வண்டிக கிளம்பறதே கஷ்டம் போல... என்ன பண்றது.... வெய்ட் பண்ணுவோம்.... யோவ்... நீ என்னய்யா பெரிய கர்ண பரம்பரை... போய் தண்ணி குடுத்துக்கிட்டு இருக்க.... சட்டைல ரத்தக்கரை பட்டா போகவே போகாது தெரியும்ல.... "

"அய்யா.... உயிர் போயிடும் போல இருக்குய்யா... தாமதிக்கக் கூடாதுய்யா... பாவமா இருக்குய்யா.... ரொம்ப நேரம் ஆச்சுய்யா...."

"என்னய்யா பெரிய ரோதனையா இருக்கு.... சரி.... அந்த போலீஸ் வேன்ல ஏத்திக்கிட்டு போங்க..... நமக்கு பாதுகாப்புக்கு வர வேன்.... என்ன பண்றது.... பொதுவாழ்க்கைக்கு வந்தாச்சு... கொஞ்சம் விட்டுக்குடுத்துதான் போகணும்.... எஸ்.ஐ என் கூடவே என் கார்ல வரட்டும்.... "

"அய்யா... உயிர் போயிடுச்சு மாதிரி தெரியுது.... ச்ச்ச்ச்.....ச்ச்ச்ச்..."

".............................................................ம்ம்ம்... ஆக வேண்டியதை கவனிங்க.... நான் கிளம்பறேன்....."

* * * * * * * * * * * * * * * * *

19 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

உண்மையிலேயே பரிதாபம்.இதை வீடியோ வேறு எடுத்துக் காண்பிக்கிறார்கள்.அத்தனை வண்டி நிற்கிறது. அதில் ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு போய் ஆம்புலன்ஸ் வந்ததும் அதில் ஏற்றி விட்டிருக்கலாம் அல்லவா? தும்பை விட்டு வாலைப் பிடிக்கிற கதையா செத்துப் போனதும் திமு திமுன்னு காட்டுக்குள்ளே ஓடறாணுவ. நல்ல வேளை இந்த மட்டும் வண்டியை நிப்பாட்டி அவங்களை நோக்கி சுடணும்னு தோணிச்சே அதுவே பெரிய விஷயம்.

சின்னப் பையன் said...

##$%###$% #$%#$@#$ #$%##$% #$%%##$%

Raj said...

எவனுக்கும் உயிரோட மதிப்பு தெரியல. ஒருத்தன் சாக கெடக்கான். அத படம் புடிச்சு ஊடகத்தில போட்டு பரபரப்பாக்க பக்காணுக. தூ.... வேணாம் . வாயில வேற என்னமோ வருது..

Mahesh said...

ஆமாங்க ஸ்ரீ & நிலாரசிகன்... சூர்யா டி.வி ஆரம்பிச்சு வெச்சது... ஒரு பைத்தியம் ஒரு ஆளை குளத்தில முக்கியே சாகடிச்சான்.... தீவிரமா படம் புடிச்சு காசாக்கினானுக....

அதே கோவந்தான் எனக்கும் ச்சின்னப்பையன்... :(

வெண்பூ said...

காலையில் இருந்து தமிழ்ல புதுசா கெட்ட வார்த்தைகளை தேடிட்டு இருக்கேன் மஹேஷ்.. :((((

அண்ணாமலையான் said...

*********************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
உலகத்துல உள்ள அத்தன கெட்ட வார்த்தையும் போட்டு எல்லாரும் திட்டுங்க... தே பசங்க....குச்

கிரி said...

படம் எடுத்துட்டு இருந்தது தவறு என்றாலும்.. அந்த படம் தான் தற்போது அமைச்சர் பெருமக்கள் மற்றும் மற்றவர்களின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றி இருக்கிறது

அதுலயும் ஒருத்தர் தண்ணீர் கொடுத்துட்டு ரத்தம் மேல பட்டுட போகுதுன்னு தள்ளி நிற்பாரு பாருங்க.. அசத்திட்டாங்க!

Mahesh said...

@ வெண்பூ, அண்ணாமலையான் : நீங்க எப்பிடி கேவலமாத் திட்டினாலும் இந்த அமைச்சனுகளுக்கெல்லாம் உறைக்காது... காண்டாமிருகத்தை விட தடியான தோல் இந்த மிருகங்களுக்கு....

சொல்றது சரிதான் கிரி... கேமராமேன் படம் புடிக்கட்டும்... மொத்த யூனிட்டுமா அதை வேடிக்கை பாக்கணும்... நாம தேர்ந்தெடுத்த நாய்கள் எந்த லட்சணம்னு நமக்குத்தான் தெரியுமே... அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாத ஜடங்க... சை...

அறிவிலி said...

:(

நசரேயன் said...

:(:(((

நசரேயன் said...

// ச்சின்னப் பையன் said...

##$%###$% #$%#$@#$ #$%##$% #$%%##$%//
ச்சின்னப் பையன் தெலுங்குல என்னவோ எழுதி இருக்காரு

Unknown said...
This comment has been removed by the author.
Dubukku said...

:(((( ரொம்ப கஷ்டமா இருந்துது அந்த விஷயத்தை கேட்டதுக்கு அப்புறம் அதுவும் எங்க ஊர் பக்கம் வேற,,,என்னத்த சொல்ல ஹூம்ம்ம்ம்ம்

Mahesh said...

ஆமாங்க டுபுக்கு... உங்க ஊர் பக்கந்தான்... நீங்க கொஞ்சம் சொல்லியிருக்கக் கூடாதா... :(((((

மணிப்பக்கம் said...

அமைச்சர் பாவம், நம்மாளுஙக பண்ணதுதானேன்னு நினைச்சிருப்பார், அதான் காப்பாத்தாம ...

பழமைபேசி said...

அண்ணே, வணக்கம்!

Mr(s) G :-)) said...

enna aachu? romba naala aalaye kaanom?

சாமக்கோடங்கி said...

நான் ரொம்ப லேட்.. ஆனா அந்த மனிதாபிமானமற்ற செயல் இனிமேலும் நிகழ கூடாது என்று வேண்டுவோம்..

அறிவிலி said...

அப்பாடி... ஒரு வழியா சரியாயிருச்சா?அப்பப்போ தூசி தட்டி ஒரு பதிவ போடுங்க。இல்லாட்டி இப்படித்தான்.