Saturday, November 28, 2009

பட்ட காலிலேயே படும்....

துபாய் முதலீடுகள் - மேக மூட்டம் :(

போன ஒரு வாரமா துபாய் பத்தி வர செய்திகள் அவ்வளவு ஆரோக்கியமா இல்லை. லீமன் பிரதர்ஸ்ல ஆரம்பிச்சு, சிடி பாங்க் அது இதுன்னு ஒரு பெரிய கண்டத்துல இருந்து மெல்ல மீண்டு வந்து ஒரு நம்பிக்கை வளர்ந்து வரும்போது இப்ப மறுபடி ஒரு சறுக்கல். என்ன நடக்குது, எப்பிடி சமாளிக்கப் போறோம்னு இன்னும் தெளிவா இல்லாட்டாலும், ஒரு பெரிய சரிவிலிருந்து சமீபத்துல மீண்டு வந்திருக்கறதால, சமாளிச்சுடலாம்னு ஒரு சின்ன நம்பிக்கை இருக்கு.

துபாய்ல முதன்மையான முதலீடு ரியல் எஸ்டேட். பரந்து கிடக்கற பாலைவனம், நிலங்களை மீட்டெடுக்க தோதான, அவ்வளவு ஆழமில்லாத கடல் பரப்பு, கிழக்கையும் மேற்கையும் இணைக்கிற மையமா துபாய் விமான நிலையம், மதம் சார்ந்த சில கட்டுப்பாடுகளில் இருந்து கொஞ்சம் விலகி இருப்பதுன்னு பல ஆதாயங்கள். நவீன கட்டடக்கலை ஆர்வலர்களுக்கு சரியான விளையாட்டுக்களம். எமிரேட்ஸ் கோபுரங்கள், புர்ஜ் அரப் 7 நட்சத்திர ஹோட்டல்னு பல வியாபார மையங்கள், ஜபேல் அலி ஏற்றுமதிப் பகுதின்னு வெற்றிகரமாப் போயிட்டுருக்கும்போது வந்தது "ஜுமெரா பாம்" திட்டம். விரிஞ்ச பனைமர வடிவத்துல, கடல்ல மணலைக் கொட்டி நிலத்தை மீட்டெடுத்து அதுல குடியிருப்புகள். உலகத்தோட பல மூலைகள்ல இருந்து பெரிய அளவுல முதலீடுகள் குவிஞ்சுது. உலகின் பல பிரபலங்கள் "ஜுமேரா பாம்"ல வீடு வெச்சுக்கறது ஒரு கௌரவம்னு நினக்கிற அளவுக்கு வெற்றி. திட்டமும் நல்லபடியா முடிஞ்சது.



அதைத் தொடர்ந்து வந்தது "துபாய் வேல்ட்". இதுவும் பாம் மாதிரியே கடல்ல நிலம் மீட்டெடுத்து குடியிருப்புகள் கட்டற திட்டம். கொஞ்சம் வித்தியாசமா உலகப் படம் மாதிரி. பாம் வெற்றியைப் பாத்துட்டு இதுல கொஞ்சம் அதிகமாவே முதலீடு. பல பங்குதாரர்கள்.... முக்கியமா நகீல். இந்த பெருமையான திட்டத்துக்காக 2004ல வெளியிட்ட "சுகுக்" பாண்டுகள் இப்ப 2009 டிசம்பர்ல முதிர்வடையும்போது முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பணும்.

ஆனா போன வருஷ நெருக்கடி சமயத்துல இருந்தே பிரச்னைகள் ஆரம்பிச்சாச்சு. இப்ப சரியான நெருக்கடி. 2010 மே வரைக்கும் பொறுத்துக்க வேண்டியிருக்கும்னு போன வாரம் நகீல் ஒரு அறிக்கை விட்டு ஒரு அதிர்ச்சி அலையைக் கிளப்பினதுமே உலக சந்தைகள்ல பீதி. உடனே டாலர்ல முதலீடுகள் குவிய அதுக்கு டிமாண்ட். துபாய்ல இருக்கற மற்ற முதலீடுகளை அவசரமாத் திரும்ப எடுக்க ஆரம்பிக்கவே, முதலீடுகளை மறுமதிப்பீடு செய்யும்போது சரிவு. அதுலயும் சமீபத்து நெருக்கடிகளின் பின்னணில பார்க்கும்போது முதலீட்டாளர்கள் பயம் புரியக்கூடியதே.

இந்த நெருக்கடியோட மையத்துல இருக்கற முதலீட்டின் மதிப்பு 60 பில்லியன் டாலர்கள். இன்னும் அதிகமா கிட்டத்தட்ட 90பில்லியன் வரைக்கும் இருக்கலாம். ஆனா இதுனால வங்கிகளுக்கு பெரிய சரிவு எதுவும் இருக்காதுன்னு ம், 2010 மே மாதத்துக்குள்ள இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துடலாம்னும் எதிர்பார்க்கலாம். எப்பிடியும் RBS, HSBC, Standard Chartered வங்கிகளுக்கு இழப்பு கணிசமா இருக்கலாம். கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா சார்ந்த கட்டுமான நிறுவனங்கள் கொஞ்சம் பாதிக்கப்படும். பொதுவா வளர்ந்து வரும் சந்தைகள்ல முதலீடுகள் ரொம்ப நிதானமா இருக்கலாம். இது மாதிரி ஒரு "மந்த" நிலை ஏற்கெனவே சரிவிலிருந்து மீண்டு வர சந்தைக்கு ஒரு வேகத்தடைங்கறதை மறுக்க முடியாது.

நிலைமயை சரி செய்ய மற்ற எமிரேட்டுகள் கிட்ட பாண்டுகள் மூலமா நிதி திரட்டலாம். முக்கியமா எண்ணை வளம் மிக்க அபுதாபி. சவுதி அரேபியா உதவிக்கு வரலாம். இந்த நெருக்கடிக்கு எதிர்வினையா உலக சந்தைகள் கொஞ்சம் சரிஞ்சு 3 நாட்கள்ல மறுபடியும் பழைய நிலைக்கு வந்தாச்சு. போன சரிவுல நமக்குக் கிடைத்த பாடங்கள் நிறைய. மறுபடி இன்னொரு சரிவை நாம அனுமதிக்கக்கூடாது ; அனுமதிக்க மாட்டோம். Yes. We are resilient enough.

Thursday, November 26, 2009

நோ ஷாப்பிங் விரதம்


நவம்பர் 28. பல நாடுகள்ல (குறிப்பா யூ.கே) இன்னிக்கு "பை நத்திங் டே". அதாவது கடைக்குப் போய் எதையும் வாங்குவதை தவிர்க்க சொல்கிற நாள். இந்த அல்ட்ரா மாடர்ன் உலகத்துல தேவைக்கு வாங்கறதை விட பகட்டுக்கு வாங்கறது அதிகம்கறது ஒரு சிலரோட சித்தாந்தம். கூடவே பூமி சூடாகுதல், வானிலை மாற்றங்கள் (எல் நினோ மாதிரி), மறு சுழற்சியை ஊக்குவித்தல் மாதிரியான காரணங்களுக்காகவும் இந்த "எதையும் வாங்காதே" நாள்.

இதுலயே சில தீவிர சித்தாந்திகள், இந்த ஒருநாளை ரமலான் நோன்பு மாதிரி இருக்கணும்னு சொல்றாங்க. அதுவும் எப்பிடி? வீட்டுல லைட் எதுவும் போடாம, கேஸ் உபயோகிக்காம, கார் ஓட்டாம, கம்ப்யூட்டர், டி.வி., ரேடியோ, போன், மொபைல் எதையும் உபயோகிக்காம - சுருக்கமா இயற்கையை தொந்தரவு செய்யக்கூடிய எதையும் செய்யாம - இருக்கணும்னு பிரச்சாரம் பண்றாங்க. கூடவே பணத்தை பெட்டில போட்டு பூட்டி வைக்கறது, கடன் அட்டையை வெட்டிப் போடறதுன்னு சில நூதன முயற்சிகள் வேற. இது கொஞ்சம் அதிகமாத் தெரிஞ்சாலும் ஒருவிதத்துல பாக்கப்போனா இது கூட நல்லதுதான்னு தோணுது. நுகர்வோர் சந்தைங்கற பேர்ல பல பகட்டு / சொகுசுப் பொருட்கள்/சேவைகள் எல்லாம் இன்றியமையாததுங்கற அந்தஸ்துக்கு உயர்ந்துடுச்சு. ஒரு 10 வருஷம் முன்னாடி இதெல்லாம் இல்லாம எப்பிடி இருந்தோம்னு பிரமிப்பா இருக்கு. "கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டமோ?"னு ஒரு சின்ன குற்ற உணர்வு இல்லாம இல்லை.

ஒருநாள் இப்பிடி விரதம் இருந்தா எல்லாம் சரியாயிடுமா?ஆகாதுதான். ஆனா, இப்பிடி ஒரு சிந்தனை நம்மள்ல ஒரு பகுதி மக்களுக்கு இருக்கு ; அடுத்த சந்ததியினரையும், இந்த பூமியைப் பத்தியும் கவலைப்படணும் ; அதுல நம்ம பங்கு என்ன? அப்பிடிங்கற ஒரு சின்ன விழிப்புணர்வு வந்தாலே இது வெற்றிதான் அப்பிடிங்கறாங்க. இது முழுக்க முழுக்க சுயபங்கேற்புதான். யாரும் யாரையும் கைய முறுக்கி வாங்கதடான்னு சொல்லப்போறதில்லை. "அய்யய்யோ... யாவரத்தை கெடுக்கறாங்களே"ன்னு சில சில்லறை சந்தை நிறுவனங்கள் (வால்மார்ட் மாதிரி) கூப்பாடு போட்டாலும், "அடப் போப்பா, வாங்கறவன் வாங்கத்தான் செய்வான்.... குதிரை கும்பி காஞ்சா தன்னால புல்லைத் திங்கும்"னு சில நிறுவனங்கள் இதை கொஞ்சம் கூட சட்டை செய்யலை. இது எவ்வளவு தூரம் வெற்றியாகும், எந்த அளவுக்கு மக்கள் பங்கேற்பு இருக்கும்கறதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

எது எப்பிடியோ, பாஷா பட டயலாக் மாதிரி "மேட்டர் நல்லாருக்கே !!"

Monday, November 23, 2009

பிடித்த ஏழரையும் பிடிக்காத நாலரையும் !!


"இது ஆவறதில்லை"ன்னு நினைச்சு சும்மா இருந்தேன். இருந்தாலும் பெரியவர் பரிசல் கூப்பிட்டார்ங்கறதாலயும், அறிவிலி ரிமைண்டர் போடுவேன்னு மிரட்டினதாலயும், எழுத வேற ஒண்ணும் சிக்காததாலயும், நம்ம வீட்டு போண்டா பிட்டு சாப்பிடற மாதிரி இருந்ததால ஒரு ஆணவப்படம் (ஸ்பெல்லிங் மிஷ்டிக்கா... தெரியலயே..) எடுக்கமுடியாமப் போனதாலயும், கவித கிவிதன்னு எதாவது கிறுக்கினா விரலை ஒடிப்பேன்னு ஆதி கண்ணை உருட்டி உருட்டி மிரட்டினதாலயும்..... சரி சரி விஷயத்துக்கு வரேன்.

அரசியல்

டிச்சவர் : எஸ்.வி.சேகர். மத்த அரசியல்வாதிக எப்பவும் எது செஞ்சாலும் எரிச்சலையே மூட்டும்போது இவராவது டிராமா கீமா போட்டு கொஞ்சம் காமெடியாவது பண்றாரு.

டிக்கவே டிக்காதவர்கள் : இரு கழகத் தலைவர்கள். ஒருத்தர் எப்ப எதைப் பண்ணணுமோ அப்ப அதைப் பண்ணமாட்டார். மத்தவர் எப்ப எதைப் பண்ணக் கூடாதோ அப்ப அதை கரெக்டாப் பண்ணுவார். ரெண்டும் தமிழ்நாட்டுக்கு கெடுதலையே பண்ணும். முன்னவர் ஒய்வு ஒழிச்சலில்லாம தன் குடும்ப முன்னேற்றம் மட்டுமே குறியா இருப்பார். மத்தவர் ஓய்வெடுத்து ஓய்வெடுத்தே களைப்பாகி மறுபடி ஓய்வெடுப்பவர்.


எழுத்து


ச்சவர்கள் : கி.ராஜநாராயணன், சுஜாதா, மேலாண்மை பொன்னுசாமி, தமிழ்வாணன்

க்காதவர்கள் : பி.டி. சாமி, புஷ்பா தங்கதுரை மற்றும் பலர்


தொழில்

ச்சவர்கள் : நா.மகாலிங்கம், லட்சுமி குழுமம், கெங்குசாமி நாயுடு, சிம்ப்சன்ஸ் , டிவிஎஸ், வி.ஜி.பி, ஆர்.எம்.கே.வி......

க்காதவர்கள் : பொதுமக்கள் பணத்தை ஆட்டையைப் போட்ட/போடுகிற எல்லா பைனான்ஸ் கம்பெனிக்காரர்களும்


பொதுநலவிரும்பிகள்

ச்சவர்கள் : நம்மாழ்வார், டாக்டர்.சுவாமிநாதன்

க்காதவர்கள் : பொதுநலம்ங்கற பேர்ல சுய விளம்பரம் தேடற எல்லாரும்


தமிழ் பதிவுலகம்

ச்சவர்கள் : வலைப்பூ தொடங்கி எழுதும் எவரும்

க்காதவர்கள் : அக்கப்போர் செய்யும் "பெயரில்லாப்" பெரியண்ணன்கள் எவரும்


சினிமா

ச்சவர்கள் : ராதா மோகன், ராம.நாராயணன் (??!!)

க்காதவர்கள் : ஷங்கர், பாலசந்தர், சேரன்.....


இசை


ச்சவர்கள் : எம்.எஸ்.வி, ராஜா, ஜேம்ஸ் வசந்தன்

க்காதவர்கள் : விஜய் ஆண்டனி, சந்திரபோஸ்


சினிமா பாடல்கள்


ச்சவர்கள் : வைரமுத்து, வாலி, நா.முத்துக்குமார்

க்காதவர்கள்
: பா.விஜய், கபிலன்


யாரையும் குறிப்பிட்டு அழைக்கப்போவதில்லை. பொதுவான தலைப்பு என்பதால் இதை தொடர விரும்பும் எவரும் தொடரலாம். தட்டுல வெத்திலை, பாக்கு ரெடியா இருக்கு.

Monday, November 16, 2009

கிச்சடி 16.11.2009


3 வருஷமா இழுத்தடிச்சுக்கிட்டுருந்த ப்ராஜெக்ட் போன திங்கள்கிழமை ஒருவழியா கரை சேந்துது. டீம்ல இருந்த எல்லாரும் விட்ட பெருமூச்சுல ஜெனீவால இருந்த மரங்கள்ல இருந்த இலைக அம்புட்டும் உதுந்து போச்சு. ஆனா உழைச்ச உழைப்பு வீண் போகாம ரொம்ப தொல்லை பண்ணாம, எதிர் பார்த்ததை விட ஸ்மூத்தாவே "கட்-ஓவர்" ஆனதுல ஒரு நிறைவு, சந்தோஷம். அப்பாடான்னு....சிங்கப்பூர் திரும்பியாச்சு. ஒரு மாசமா பதிவுகள் பக்கம் ரெகுலரா (!!) வரமுடியாம போச்சு. (அப்பிடியே வந்துட்டாலும்.... வந்து ஒரு கவிதை எழுதிட்டாலும்னு ஆதி முனகறது கேக்குது... இருக்கட்டும்... இருக்கட்டும்...) இனிமே ரெகுலரா வந்து போக முயற்சி பண்ணலாம்னா இன்னும் ரெண்டு வாரத்துல இந்தியாவுக்கு வெகேஷன்ல.....

ஆகவே மகாஜனங்களே.... ஜனவரி வரைக்கும் இப்ப மாதிரியே இருக்கலாம், ஜனவரிக்கு அப்பறம் இதே நிலைமை நீடிக்கலாம் அல்லது முன்னேறலாம் அல்லது இன்னும் மோசமடையலாம்... சே !! இந்த மனுஷன் ரமணன் ரொம்பவே இன்ஃப்ளூயன்ஸ் பண்றாரே !!!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


"சிறு கூடுன்னாலும் தன் வீடு"ன்னு இருக்கணும்னு, வாடகை குடுத்து கட்டுபடியாகாம, தலைகீழா நின்னு தண்ணி குடிச்சு ஒரு வீடு வாங்கி குடிபோயாச்சு. அதுவும் நான் ஜெனிவாக்கு (வழக்கம்போல) வேலை நிமித்தமா போய் திரும்பி வரதுக்குள்ள, மனைவியும் மகளும் "இவனை நம்புனா அவ்வளவுதாண்டே..."ன்னு சாமான் செட்டைத் தூக்கிக்கிட்டு வண்டி புடிச்சு வீடு மாறிப் போயிட்டாங்க. பழைய வீட்டுல இருந்து ஊருக்குப் போயிட்டு திரும்ப வரும்போது புது வீட்டுக்கு போறது த்ரில்லிங்காத்தான் இருந்தது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பிரபல பதிவர் மற்றும் கவிஞர் "அனுஜன்யா" அவர்கள் சென்ற வாரம் பணி நிமித்தமாக சிங்கப்பூர் வந்து 3 நாட்கள் தங்கி, பணி முடிந்து பின் தாயகம் திரும்பிச் சென்றிருக்கிறார். வயதில் அவர் மிகவும் இளையராக இருப்பதாலும், சிங்கப்பூரில் உள்ள மற்ற பதிவர்கள் மிகவும் மூத்தவர்களாக இருப்பதாலும் அன்னார் இங்கு எவரையும் சந்திக்கவில்லை. இதை "சிங்கை பதிவர் குழுமம்" மிகுந்த ஆதுரத்துடன் கண்டனம் செய்கிறது என்பதை இங்கு பதிவு செய்து கொள்கிறேன். அத்துடன் இனி அவரது ஒவ்வொரு கவிதைக்கும் விளக்கம் கேட்டே தீருவது என்ற தீர்மானமும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை வழக்கம்போல... கடும் வெயிலுக்குப் பிறகு, வறட்சி நிவாரண நிதி வாங்கி ஏப்பம் விடலாமான்னு மஞ்சத்துண்டு போட்டுக்கிட்டு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போதே, வெள்ளமும் வந்தாச்சு. கோபாலபுரத்தில் வசிக்கும் குடிசைவாழ் மக்கள் கருணையுடனும், அன்புடனும் நிதிகள் பல பெற்று எல்லா நலமும் வளமும் பெற "அன்னை"யின் அருள் பெருகுவதாக.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சென்னை பதிவர் சந்திப்பு மழை காரணமா ரெண்டு முறை தள்ளி வெச்சுட்டாங்க. கலந்துக்க நினைச்சு எதிர்பார்ர்புகளோட இருந்த நிறைய புதிய பதிவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமா இருந்திருக்கலாம். இருந்தாலும், பதிவர்களை சந்திக்க விடாம பெய்யற மழையும் ரொம்ப தேவையா இருக்கறதால... தண்ணியெல்லாம் வடிஞ்சு கொஞ்சம் பளிச்னு ஆனபிறகு சந்திக்கலாமே. அட்டெண்டன்சும் சுமாரா இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"கேபிள் சங்கர்" அவர்களோட தந்தையாரின் மறைவுக்கு அஞ்சலிகள். அன்னாரது ஆன்மா சாந்தி அடையவும், கேபிள் சங்கர் குடும்பத்தார் சோகத்திலிருந்து மீண்டு வரவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். யுவகிருஷ்ணா பின்னூட்டத்தில் சொல்லியிருப்பது போல ஒரு தகப்பனின் மரணம் மிகப் பெரிய துயரம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Monday, November 2, 2009

ரஃபியும் கிஷோரும்....

என் இதயம் கவர்ந்த ஹிந்திப் பாடகர்கள். நான் ஒண்ணாவது படிக்கும்போதுன்னு நினைக்கிறேன். அப்பா மிலிட்டரில இருந்து ரிடையர்மெண்ட் வாங்கிட்டு வந்து ஐ.ஓ.பி. பேங்க்ல வேலைக்கு சேந்த பிறகு வீட்டுக்கு ஒரு சின்ன பிலிப்ஸ் டிரான்சிஸ்டர் வந்தது. நாங்கள்லாம் அதைத் தொடக் கூடாது. எதோ ஒரு ஸ்டேஷனை ட்யூன் பண்ணினார்னா பாதி நேரம் ஹிந்திப் பாட்டுகதான். "அமீன் சயானி - பினாகா கீத் மாலா" இது மட்டும்தான் நமக்கு தெளிவா கேக்கும். அதுக்கப்பறம் ஒண்ணும் புரியாது.

பிறகு வந்தது ஒரு "வெஸ்டன்" பெட் டைப் கேஸட் ப்ளேயர். எஜக்ட் பட்டனை அமுக்கினா படக்குனு ஒரு மூடி மேல் பக்கமா திறக்கும். மத்தபடி வழக்கம்போல அது என்ன பாட்டு பாடினாலும் நமக்கு ஒரே மாதிரிதான் இருக்கும். அப்பறமா பானாசோனிக் 543, க்ரண்டிக், ஸோனி. இப்பிடி சின்ன வயசுல இருந்து ஹிந்தி பாட்டுக கேட்டு கேட்டு, வார்த்தை, அர்த்தம் எதுவும் புரியாட்டாலும் கொஞ்சம் கொஞ்சமா அதுல ஒரு ஈர்ப்பு வந்துடுச்சு. சும்மாவாச்சும் எதாவது ஒரு பாட்டை முனகிக்கிட்டு இருப்போம். அப்பிடி நம்ம மனசுக்குள்ள நுழைஞ்சவங்கதான் ரஃபியும் கிஷோரும்.

ஆனா அந்த பாட்டுகளோட தாக்கத்தை உணர ரொம்ப வருஷமாச்சு. மனசை மயக்கி, உருக்கி, நெகிழ வைக்கிற குரல்கள். அவ்வளவு பாவம், எக்ஸ்ப்ரெஷன்ஸ்.... ம்யூசிக்குக்கு நம்ம எம்.எஸ்.வி மாதிரி அங்க அவங்களுக்கு ஆர்.டி.பி. பாட்டு எழுத மஜ்ரூ சுல்தான்புரி, குல்சார், ஸஹீர் லுதியான்வி, ஜாவேத் அக்தர்...... நம்ம அமிதாப்போட அப்பா ஹர்வன்ஷ்ராய் பச்சன் கூட. காதல், சோகம்னு சொல்லிட்டா போதும்... அப்பிடியே புழிஞ்சு குடுத்துடுவாங்க...... தேன் தமிழ், சுந்தரத் தெலுங்கு, மயக்கும் மலையாளம் மாதிரியே ஹிந்தியும், அதோட சொல்வளமும் (நிறைய உருது மொழி பாதிப்பு) பரந்து விரிஞ்சது. அர்த்தமும் புரிஞ்சு கேக்கும்போது, அந்த இனிமை, ஆழம், உயிர்ப்பு எல்லாம் அனுபவிக்கும்போது... அந்த பரவசமே தனி. அதுலயும் ஸ்பெஷலா இவங்க ரெண்டு பேர் குரல்கள். அதே மாதிரி பாடகிகள்ல லதா, உஷா, ஆஷா சகோதரிகள். லதா ராஜ்ஜியம் பண்ணினாலும் என்னோட ஃபேவரிட் ஆஷாதான்.

90களுக்குப் பிறகு எத்தனையோ பாடகர்களும்,பாடகிகளும் வந்தாலும், ஆயிரக் கணக்கான பாட்டுகள் கேட்டிருந்தாலும், ரஃபி கிஷோர் காலத்துப் பாட்டுகளோட இனிமையும் அழகும்.... சான்ஸே இல்லை. நீங்களும் கேளுங்க....

கிஷோர்

ப்ளாக் மெயில் : பல் பல் தில் கே பாஸ்....


சாகர் : சாகர் கினாரே...

ரஃபி

ஹம் கிஸி ஸே கம் நஹி : க்யா ஹுஆ மேரா வாதா...

ரஃபி & ஆஷா

யாதோங் கி பாராத் : ச்சுரா லியா ஹை தும் மேரே தில் கோ...