Thursday, April 23, 2009

கிச்சடி 23.04.2009



போன வாரத்தில் ஒரு நாள்...

"ஒரே டயர்டா இருக்கு... இன்னிக்கி நைட் நீங்களே எதாவது டிஃபன் பண்ணிடுங்க"

"ம்..."

"உப்புமாவே பண்ணிடுங்க... சீக்கிரம் ஆகும். சாப்ட்டுட்டு தூங்கலாம்.."

"ம்..."

"வெங்காயம் சின்னதா நறுக்குங்க... மொடா மொடாவா நறுக்கிடாதீங்க..."

"ம்..."

"எண்ணை அளவா.... அடுப்பை 'பே'ன்னு எரிய விட்டு கடுகைக் கருக்கிடாதீங்க.. ரவையை நல்லா வறுத்துடுங்க... இல்லாட்டா பச்சை வாசனை புரட்டும்... "

"ம்..."

"ஒரு டம்ளருக்கு 2 டம்ளர் தண்ணி.... ஜாஸ்தி விட்டு களி மாதிரி ஆக்கிடாதீங்க... தண்ணில ரவையை கொஞ்ச கொஞ்சமாப் போட்டு கிளறிக்கிட்டே இருங்க.... கட்டி தட்டிடப் போகுது... உப்பு அளவாப் போடுங்க... உப்புமா ஆக்கிடாதீங்க "

"ம்..."

(10 நிமிஷம் கழிச்சு...........)

"அட.... நல்லா டேஸ்டாவே இருக்கே.... உங்க பொண்ணு இன்னிக்கு ஒரு பிடி பிடிக்கப் போறா... தேங்கா எண்ணையா போட்டீங்க... வாசனையா இருக்கே... கேரட்லாம் போட்டு... அட முந்திரி வேற... மஞ்சள் கொஞ்சமாப் போட்டு அப்பிடி கோல்ட் கலர்ல டாலடிக்குதே... தக்காளி எல்லாம் பொடிப் பொடியாப் போட்டு.... ம்ம்ம்... கொத்தமல்லி தூவி... அட்டகாசமா இருக்கே.... அம்மாடி... ஒரு உப்புமாவை உங்களைப் பண்ண வெக்கறதுக்குள்ள உம்பாடு எம்பாடுன்னு ஆகுதே...."

ஙே !!

நெஜமாவே கிச்சடி பண்ணினேன் !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

போன வாரம் ஒரே சண்டை வாரமாப் போச்சு !! போன மாசம் பூரா ஜெனிவாவுல செலவு பண்ணதுக்கு (கார்பொரேட் கார்டுலதான்) ஸ்டேட்மென்ட் வந்தது. நேத்திக்கு ட்யூன்னு போட்டு. பொறுமையாப் பேசிப் பிரயோஜனம் இல்லாம காச் மூச்சுனு கத்தி 3 வாரம் எக்ஸ்டென்ஷன் குடுத்தா மகராசி.

3 மாசம் முன்னாடியே கம்பெனி ஸ்பான்சர்ல ஒரு ட்ரெய்னிங் கோர்ஸுக்கு புக் பண்ணி வெச்சுருந்தேன். ஊர்ல இல்லாததால போக முடியல. கோர்ஸ் ஆரம்பிக்கறதுக்கு ஒரு நாள் முன்னாடி மெயில் வருது. "நாளைக்கு க்ளாசுக்குப் போ. இல்லாட்டி கோர்ஸை ட்ராப் பண்ணு"ன்னு. சரி நாம சிங்கப்பூர் போக இன்னும் 2 நாள் இருக்கேன்னு ட்ராப் பண்ணினா "ஓகே. நோ ப்ராப்ளம்ஸ். ட்ராப் ஃபீஸ் 1450$. தேங்க்ஸ்"னு மெயில் வருது. நோ ப்ராப்ளம்ஸா? இப்பத்தானே ஸ்டார்ட் ஆகுது? நமக்கு ஒதுக்கறதே சின்ன பட்ஜெட். அதுலயும் புடுங்குனா? HR-ஐக் கூப்ட்டு "என்னாய்யா சிஸ்டம் வெச்சுருக்கீங்க... எம்ப்ளாயீஸ்க்கு உபயோகப்படாத சிஸ்டம்..."னு வெளு வெளுன்னு வெளுத்ததுக்கப்பறம் "அவன் கூடப் பேசு... இவ கிட்டப் பேசு"ன்னு மெயில் மேல மெயில் போட்டு "அய்யா... இனிமே பண்ண மாட்டோம்... இன்னொரு கோர்ஸ் அப்பறமா சேந்துக்குங்க"ன்னு சொல்ற வரைக்கும் "விட்டேனா பார் !!"னு ஆயிடுச்சு.

இதுதான் இப்பிடின்னா பேங்க்கோட ரெக்ரியேசன் க்ளப் மூலமா ஒவ்வொரு மே 1ந் தேதியும் எதாவது ஒரு தியேட்டர்ல சினிமாக்கு ஃபேமிலி டிக்கட் கிடைக்கும். என்ன கோளாறோ இந்த வருஷ ஆரம்பத்துல இருந்தே க்ளப்போடை ஈவண்டுகளுக்கு எனக்கு மெயிலே வரல. ஊருக்கு திரும்பி வந்த பிறகு பாத்தா எல்லாரும் போய் டிக்கட் வாங்கிட்டு வராங்க. உள்ள தூங்கிக்கிட்டு இருந்த விஜயகாந்த் ஏற்கெனெவே போன ரெண்டு சம்பவத்துல எழுந்து உக்காந்து கண்ணைக் கசக்கிக்கிட்டுருந்தாரு. இப்ப அவருக்கு கண்ணு "ஜிவு ஜிவு"ன்னு செவந்து போச்சு. புள்ளி விவரமாப் போட்டு இன்னொரு "விட்டேனா பார் !!" போர். டிக்கட் எல்லாம் தீந்து போச்சேன்னு கைய விரிச்சவனை வெரட்டி 3 டிக்கட் வாங்கின பிறகு "மன்னிப்பு - எனக்குப் புடிக்காத வார்த்தை"ன்னு சொல்லி அனுப்பிச்சேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சமீபத்துல "சுகி சிவம்" ஐயாவோட "கீதை அனுபவம்" சொற்பொழிவு mp3 கிடைச்சுது. சுமார் 18 மணிநேரம் இருக்கும். I-Podல போட்டு ஆபீஸ்க்கு போற வர நேரத்துல கேட்டேன். எனக்கு அவரோட ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். ரொம்ப யதார்த்தமா தினசரி வாழ்வியலோட ஒட்டியே பேசுவார். அனாவசிய ஜோடனைகள் இருக்காது. சில சமயம் மழுப்பாம மூஞ்சில அடிச்சாப்லயே இருக்கும். அது பலருக்குப் பிடிக்காம இருக்கலாம். ஆனா எனக்கு அதுதான் அவர் கிட்ட பிடிச்ச விஷயம். உள்ளது உள்ளபடி சொல்லணும்.. எதுக்கு, யாருக்கு பயப்படணும்கற அவரோட நேர்மை வணக்கத்துக்குரியது.

க்ஷெ கீதை சொற்பொழிவு மிக மிக மிக மிக அருமை. சில இடங்கள்ல அவருடைய சிந்தனைக் கோணம் 'அட... இப்பிடியும் பாக்கலாமே இதை... அப்ப இப்பிடி அனுபவிக்கலாமே'ன்னு ஆச்சரியப் பட வெச்சுது. நம்ம சிந்தனையும் அதை ஒட்டி பல திசைகள்ல கிளைத்து வேறு மாதிரியான வித்தியாசமான அனுபவங்களைக் கொடுத்தது. தொய்வு இல்லாம இருக்கறதுக்காக அங்கங்க சின்னச் சின்னக் கதைகளும் சொல்லியிருந்தார். ரொம்ப ரசிச்சேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த மாதிரி கிச்சடி, பிரியாணின்னு போட்டா கடேசில ஒரு கவிதை போடணுமாமில்ல. பயப்படாதீங்க (தாமிரா எனப்பட்ட) ஆதி. சொந்தக் கவிதை கிடையாது.

சுஜாதா ஒரு கட்டுரைல "ஹைக்கூ" அப்பிடின்னா ஒரு ஃபோட்டோ மாதிரி, ஒரு கண சிலிர்ப்பு மாதிரி, முடிஞ்சா ஈற்றடில ஒரு முரண் அல்லது திருப்பம் இருக்கணும்னு சொல்லியிருப்பார். சமீபத்துல பதிவர் ரவி ஆதித்யா பதிவுல படிச்சது.

மழை ஒய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழை


யோசிச்சுப் பாத்தா நான் உப்புமா பண்ணினது கூட ஒரு ஹைக்கூ மாதிரி....

31 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

ஆயில்யன் said...

மீ த பஷ்ட்டேய்ய்ய்ய்ய்ய்

அறிவிலி said...

சுவையான கிச்சடி.

ஆயில்யன் said...

கிச்சடின்னு சொல்லிட்டு உப்புமா படத்தை போட்டா என்னிய ஏமாத்த பாக்குறீங்க அண்ணாச்சின்னு நல்லா நறுக்குன்னு க்கேக்கலாம்ன்னு பார்த்தா செய்முறையில கரீக்டா எல்லாம் மஞ்சளோட முடிஞ்சிருந்துச்சு ஸோ படம் சுட்டு போட்டுட்டு ,கிச்சடி தின்னுட்டீங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன்!

ஆயில்யன் said...

பை தி பை

கரீக்டா அண்ணி சொன்ன புரோகிராம் படி செஞ்சு உப்புமா aka கிச்சடி செஞ்சு இன்று முதல் கிச்சடி கிங் ஆகிவிட்டீர்கள் :))))

ஆயில்யன் said...

//நம்ம சிந்தனையும் அதை ஒட்டி பல திசைகள்ல கிளைத்து வேறு மாதிரியான வித்தியாசமான அனுபவங்களைக் கொடுத்தது.//

ஸேம் ஃபீலிங்க்ஸ்ஸ்

எனக்கு ரொம்ப புடிக்கும் சுகி சிவம் சொற்பொழிவு! இன்னும் அருமையாக இருக்கும் புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவுகள் வாய்ப்பிருந்தால் கேட்டுப்பாருங்கள்!

:))

எம்.எம்.அப்துல்லா said...

//யோசிச்சுப் பாத்தா நான் உப்புமா பண்ணினது கூட ஒரு ஹைக்கூ மாதிரி.... //

அட ங்கொன்னியா.... மனசாட்சியே இல்லையாண்ணே உங்களுக்கு??

இஃகி இஃகி இஃகி :)

Mahesh said...

நன்றி ஆயில்யன்.... உங்க கடைக்குப் போயிட்டு இங்க வந்து பாத்தா போட்டுத் தாக்கியிருக்கீங்களே :)

நன்றி அறிவிலி....

வாங்க அப்துல்லாண்ணே... பதிவு போடறதுன்னு ஆனதுக்கப்பறம் மனச்சாச்சி அது இதுன்னு என்னென்னமோ சொல்றீங்களே :))))))))

Mahesh said...

@ ஆயில்யன் : புலவர் கீரனுடைய பெரிய விசிறி நான். கொஞ்ச மாசம் முன்னால ஒரு பதிவு போட்டேன்... ஆனா சரியா கவனிக்கப்படலை.. :(

http://thuklak.blogspot.com/2008/11/blog-post_13.html

கிரி said...

//நெஜமாவே கிச்சடி பண்ணினேன் !!//

:-))))

Raju said...

இன்றுமுதல் நீங்கள் கிச்சடி மகேஷ் என அழைக்கப்படுவீராக..!
கடசியா நீங்க பண்ணுனது கிச்சடியா..உப்புமாவா?

Unknown said...

வ்ந்துட்டேன்.

நன்றி!நன்றி!நன்றி! மகேஷ்.

மகேஷ்,

//சமீபத்துல பதிவர் ரவி ஆதித்யா பதிவுல படிச்சது//

படிச்ச அன்னிக்கே ஒரு பின்னூட்டம் போட்டு ஊக்கப்படுத்தக் கூடதா?

அடுத்து நண்பா, அது யாரோ எழுதினது.நம்ம கவித ஒண்ணுப் போட்டு மார்கெட் பண்ணக்கூடாதா?

மீண்டும் நன்றி!

அடிக்கடி வாங்க.

உங்க கிச்சடி மற்றும் கிச்சடியையும்
படித்தேன். நல்லா இருக்கு.

தராசு said...

கிச்சடி கம கம!!!!

சொ(நொ)ந்த சோகத்தை கொஞ்சம் அதிகமா கொட்டீட்டிங்களோ!!!!

வாழ்த்துக்கள்.

kama said...

எனக்கு அவரோட ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். ரொம்ப யதார்த்தமா தினசரி வாழ்வியலோட ஒட்டியே பேசுவார். அனாவசிய ஜோடனைகள் இருக்காது. சில சமயம் மழுப்பாம மூஞ்சில அடிச்சாப்லயே இருக்கும். அது பலருக்குப் பிடிக்காம இருக்கலாம்.////

நல்ல வரிகள்...
nellaitamil

Mahesh said...

நன்றி கிரி...

நன்றி டக்ளஸ்... அவ்வ்வ்... புதுப்பட்டமா? நான் பண்ணது கிச்சடி மாதிரியான உப்புமா. :))))

நன்றி கே.ரவிஷங்கர்.... அட...அதுவும் அப்பிடியா? :))

நன்றி தராசு... ஆமாங்க.. சொந்தக்கதை அதிகம்தான்...

நன்றி nellaitamil...

பழமைபேசி said...

உப்புமா செய்வீங்களாண்ணே நீங்க?

//ஒய்ந்த//
ஓய்ந்த

வால்பையன் said...

//ஒரு உப்புமாவை உங்களைப் பண்ண வெக்கறதுக்குள்ள உம்பாடு எம்பாடுன்னு ஆகுதே...."//

கத்துகிட்டிங்கள்ள
இனிமே தினமும் அதே மாதிரி கிச்சடி செய்யணும் சரியா!

அறிவிலி said...

//நன்றி கே.ரவிஷங்கர்.... அட...அதுவும் அப்பிடியா? :))//

:)))))))

வெண்பூ said...

கிச்சடி நல்ல டேஸ்ட்.. ஹைக்கூ அற்புதம்..

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
//
அட ங்கொன்னியா.... மனசாட்சியே இல்லையாண்ணே உங்களுக்கு??

இஃகி இஃகி இஃகி :)

//
நம்மூட்டுத் திண்ணைகளுக்கு வந்து போயி, அண்ணன் நம்மூர் அண்ணனாவே ஆயிட்டாரு பாருங்க.... இஃகிஃகி!!

பழமைபேசி said...

//சரி சரி வேலயப் பாருங்க...//

அது பாக்கப் புடிக்காமத்தான எதோ நெனச்சிகிட்டு இங்க வந்தம்.. நெனச்சதை நெனச்சி எழுத வர்றக்குள்ள இப்படி நெனச்சி நெனச்சி எழுதவுடாம வேலையப் பாருங்கன்னு நெனச்சி....... அவ்வ்வ்வ்வ்வ்.......

Thamira said...

சூப்பரான கிச்சடி.. அதுவும் நீங்க நம்பள மாதிரியே கோவக்காரருன்னு நெனைக்கிறப்ப..

கவிதை எங்கேயோ, எப்போதோ படித்த ஞாபகம்.! பத்திரிகையில் ஏதும் வந்ததா? ரவிக்கு வாழ்த்துகள்.!

Mahesh said...

நன்றி பழமைபேசி.... திருத்தத்துக்கு நன்றி.

நன்றி வால்பையன்.... தினமுமா?? அவ்வ்...

மீண்டும் நன்றி அறிவிலி...

நன்றி வெண்பூ......

Mahesh said...

நன்றி ஆதி.... என்னை மாதிரியே நீங்களும் "கோவை"க்காரரா?

http://urupudaathathu.blogspot.com/ said...

:-)

anujanya said...

நல்லா இருக்கு மஹேஷ். ஹைக்கூ ஏற்கெனவே படித்திருந்தாலும் நல்லா இருக்கு. சுவிஸ் புகைப்படங்கள்?

அனுஜன்யா

Mahesh said...

வாங்க அணிமா... ஒரே ஆணியாம்மா?

நன்றி அனுஜன்யா... அடாடா.. நீங்க நம்ம திண்ணைக்கு வந்து ரொம்ப நாளாச்சு... அதான் மிஸ் பண்ணிட்டீங்க...

இந்த இடுகைல எல்லாம் இருக்கு...
http://thuklak.blogspot.com/2009/04/blog-post.html

பரிசல்காரன் said...

//
க்ஷெ //

மேற்கண்ட என்ற பொருள்வரும் இந்த குறியீட்டை வலையுலகில் சமீபத்தில் பயன்படுத்தியது நீங்கள் மட்டுமாகத்தான் இருக்க வேண்டும்.

மிகவும் ரசித்தேன்.

Mahesh said...

நன்றி பரிசல்...

Anonymous said...

நல்ல சுவையா இருக்கு மகேஷ்.

இதேதான் நம்ம கதையும். நான் என் ஸ்டைலில் கிச்சடி கிண்டியபின் இவ்வளவு வருசத்துல இதமட்டும் ஒழுங்காக் கத்துக்கிட்டீங்க அப்படீம்பாங்க என் த மணி.

சுகி.சிவம் பேச்சு நன்றாக இருக்கும். அந்த MP3 எங்க இருந்து எடுத்தீங்க?

Mahesh said...

நன்றி வேலன் அண்ணாச்சி... சுகிசிவம் சொற்பொழிவு என் நண்பர் குடுத்தாரு... கூட பல சொற்பொழிவுகள் குடுத்தாரு... எல்லாமா ஒரு 300 மணிநேரம் வரும் !!

சின்னப் பையன் said...

கிச்சடி சூப்பர்..

பரிசலுக்கு முன்னாடி நீங்க அவியல்னு எழுதியிருந்தீங்கன்னா, அவியல் செய்திருப்பீங்களா?????