Sunday, August 10, 2008

போயும் போயும் "துக்ளக்".....?

என்னங்க செய்ய? பொழப்பு அப்பிடி ஆகிப் போச்சே !! என்னத்த செஞ்சாலும் மொத வாட்டி செரியா வரதில்லை. அப்பறம் இப்பிடி பண்ணலாமா, அப்பிடி பண்ணலாமான்னு ஓசிச்சி ஓசிச்சி மண்டை காஞ்சு போய் பழய படிக்கே திரும்பி வந்து...அட விடுங்க...அந்த கெரகமெல்லாம் இப்பொ எதுக்கு?


ஏதோ வாய்க்கு வந்தது கோதைக்கு பாட்டு...மனசுல தோணுனது மகா மொக்கைன்னு எதையாவது எழுதி வெப்போம். அப்பறம் இங்க வரவங்க பாடு...வந்ததுமில்லாம இதை படிக்கரவங்க பாடுன்னு தோணுச்சு. செரி நேரமும் நல்ல பழுத்த ராகுகாலமா இருக்கு..."இப்பொ இல்லாட்டி எப்போ.." அப்பிடின்னு பாடிக்கிட்டே ஆரம்பிச்சாச்சு. பாவம் பய புள்ளைங்களுக்கும் கும்மி அடிக்க கெரவ்ண்டு வேணுமல்ல...(ஆமாம் பெரிய கெரவ்ண்டு...அவனவன் கும்மி நகர் ஆரம்பிச்சு ப்ளாட் போட்டு வித்துக்கிட்டு இருக்கான்.....)


ஆனா மக்களே.... இதுல எந்தப்பு எதுவுமே இல்ல....எல்லா புகழும்(!) பரிசல்காரனுக்கே...

7 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:

பரிசல்காரன் said...

வாழ்த்துக்கள் தலைவா!

பரிசல்காரன் said...

கமெண்ட்ஸ் செட்டிங்கஸ்ல போய் WORD VERIFICATION -ஐ எடுத்து விட்டுடுங்க.

பரிசல்காரன் said...

ஒரு நல்ல மனுஷனை இப்படி மொக்கைப் பக்கம் கொண்டு வந்த பாவத்தை கழுவ, சிங்கப்பூர்ல ஏதாவது நதி இருந்தா சொல்லுங்க. வந்து குளிக்கறேன்!!!

சென்ஷி said...

வருக... வணக்கம்.. வாழ்த்துக்கள்:)

Mahesh said...

@ பரிசல் : நன்றிகள் பல. சொன்ன மாதிரி செட்டிங்ஸ் மாத்திட்டேன்.

@ சென்ஷி : மொத கஸ்டமர். நன்றி. ரொம்ப கஷ்டப் பட்டீங்களோ?

ஜோசப் பால்ராஜ் said...

வாங்க, வாங்க. ஜோதியில ஐக்கியமாகிடுங்க. வாழ்த்துக்கள். இந்த வார விடுமுறையில உங்களோடு தொலைபேசுறேன்.

சி தயாளன் said...

ஓ வாங்கோ மகேஷ்..இப்பதான் வலைப்பூ தொடங்கியிருக்கியள் போல..வாழ்த்துகள்.நானும் புதுசு தான். கூடவே நிறைய சிங்கை பதிவர்களும் நண்பர்கள் போல தெரிகின்றது..ஒன்றாக சேர்ந்து கலக்குங்கோ..